அந்நியபாஷை குழப்பம்
CONFUSION ABOUT TONGUES

அத்தியாயம்-3

அந்நியபாஷை குழப்பம் என்ற தலைப்பில் தொடர்ந்து இக்கட்டுரையை கொஞ்சகொஞ்சமாக வெளியிட்டு கொண்டுவருகிறேன் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். இதுவரை சபைகள் தோன்றியவிதம் அதன் வரலாறு ஆகியவற்றை சரித்திர பூர்வமாக எழுதி பெந்தேகோஸ்தே சபை தோன்றிய காலம்வரை அதன் சூழ்நிலை வரலாறு ஆகியவற்றை எழுதினேன்.

Cross  அந்தக்காலகட்டத்தில் வசனத்தின்படி இயங்கிய சபைகளும் ஜான்வெஸ்லி அவர்கள் தொடங்கிய சரியான உபதேசத்தில் இயங்கின சபைகள்கூட நான் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்குள்ளே ஒரு சோர்வும், பரம்பரை கிறிஸ்தவ உணர்வும்,    ஜெப ஐக்கிய குறைவும் ஏற்பட்டது.    அப்போதுதான் சபையில் சிலருக்கு ஆவிக்குரிய ஆகாரம் தேவை என்றும், வசனத்தை ஆழமாய் தியானிக்கும் உணர்வும் உண்டானது. அது முதலில் ஊழியர்களுக்குள்ளும், பின் சபைமக்களுக்குள்ளும் உண்டானது. ஆனால் தங்களில் ஏற்பட்ட வசன ஆகாரத்தின் ஏக்கத்தை சபை ஊழியர்கள் அலட்சியம் செய்தார்கள். இப்போதும் பல CSI,      லூத்தரன்,      மார்த்தோமா சபைகளின் நிலையும் அதுதானே. அதனால்தானே ஆகாரம் கிடைக்கும் வெளிசபைகளுக்கு சபைமக்கள் போகிறார்கள். சரியான ஆவிக்குரிய பிரசங்கம், உண்மையான ஆராதனை நம் சபைகளில் இருந்தால் மக்கள் ஏன் மற்ற சபைகளை தேடிபோகிறார்கள். அநேக சபைகளில் சபை குருமார்களுக்கு பிரசங்கம் தயாரிக்கவே நேரம் இல்லை. ஜெபிக்கநேரம் இல்லை. பிறகு எப்படி ஆராதனையில் ஜீவனுள்ள வசன ஆகாரம் சபைமக்களுக்கு கொடுக்கமுடியும்.

Cross  பிஷப் அணியில் சேரலாமா? பிஷப்பின் எதிர்அணியில் சேரலாமா? எந்த அணியில் தமக்கும் தன் குடும்பத்துக்கும் ஆதாயம் அனுகூலம் கிடைக்கும் என்பதிலேயே சபை ஊழியர்களின் மனம் அலைகிறபோது சபைமக்களின் ஆத்மீக பசியை தீர்க்க இப்படிப்பட்ட ஊழியர்களால் இயலாதுபோனது.

Cross  மேய்ப்பர்கள் மந்த இருதயம் உள்ளவர்களாய் கர்த்தரை தேடாமல் போனார்கள். ஆகவே மந்தைகள் சிதறடிக்கப்பட்டுபோயின என்று வேதம் கூறுகிறது எத்தனை உண்மை.

Cross  அன்றைய ஆரம்பகாலத்திலும் ஆவிக்குரிய ஐக்கியம், தாகம், ஆகாரம் குறைந்துபோனபடியால், இனி சபையை நம்பினால் நம் ஆத்துமா வீணாய் போய்விடும் என்று உணர்ந்து சபையிலிருந்து பிரிந்துபோய் ஒருகூட்டம் தனிகுழுவாக ஜெபத்திலும், ஊழியத்திலும் அன்யோன்னியத்திலும் ஊறுதியாக தரித்திருந்தார்கள். அதுவே தனி சபையாக மாறிவிட்டது. இக்கூட்டம்தான் புதிய ஏற்பாட்டில் முதல் சபை ஆரம்பிக்கப்பட்ட பெந்தேகோஸ்தே நாளையே தங்கள் சபைகளுக்கு பெயராக வைத்து பெந்தேகோஸ்தே சபை (Pentecostal Church) என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

Cross  அன்று யூதர்களின் முக்கிய பண்டிகையான பஸ்கா பண்டிகையின் கடைசி நாளான அதாவது 50வது நாளான பெந்தேகோஸ்தே நாளை (பெந்தேகோஸ்தே என்றால் 50வது நாள்) நினைவுக்கூறும் வண்ணமாக தங்கள் சபைக்கும் பெந்தேகோஸ்தே சபை என்று வைத்துக்கொண்டார்கள். அதாவது புதிய ஏற்பாட்டு சபையான முதல்சபையின் வழிவந்தவர்கள் என்று அறிவித்து கொண்டார்கள்.      ஆகவே அந்த சபைகள் மிக உற்சாகத்தோடு உயிருள்ள ஆவிக்குரிய சபையாக இருந்தது.        ஆகவே மற்ற சபைகளிலிருந்து ஏராளமானபேர் பெந்தேகோஸ்தே சபைகளில் சோந்தார்கள். இப்போது மற்ற சபைகளைவிட பெந்தேகோஸ்தே சபை வசனத்திலும், ஆவியிலும் மிகவும் சிறப்பாக வளர்ந்தது.

Cross  நான் குறிப்பிட்டதுபோல சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 8 வருடங்கள்வரை சபையில் அந்நிய பாஷை ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லை.    நல்ல வசனத்திலும், ஜெபத்திலும் பெந்தேகோஸ்தே சபை வளர்ந்தது. பிசாசு சும்மா இருப்பானா? 1901ம் ஆண்டு பிறந்தது. பிசாசு திட்டமிட்டப்படி உலகதோற்றத்தில் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல 18 வயது சிறுமியை உளறவைத்து பிசாசு அதை அந்நியபாஷை என்று ஜனங்களை நம்பவைத்தான்.    மற்ற எல்லா சபைகளிலும் மனந்திரும்பிய அனுபவமுள்ளவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களும் உண்டு  -  தங்கள் சபையிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. ஆகவே மற்றவர்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள, தங்களை வேறுப்படுத்திக்கொள்ள அந்நியபாஷை என்ற செயற்கையான உபதேசத்தை பயன்படுத்திக்கொண்டனர்.    அந்நியபாஷை பேசின பிறகுதான் அதற்கு வேதத்தில் ஆதாரத்தை தேடினார்கள். அப்போஸ்தலர் நடபடிகளில் 3 இடங்களில் பேசப்பட்ட பாஷைகளை ஆதாரமாக்கி தாங்கள் பேசுவதும் அதேமாதிரிதான் என்றார்கள்.    ஆகவே நாங்கள்தான் ஆவியானவர் நிரப்பிய ஆரம்பகால முதல் சபையின் வழிவந்தவர்கள் என்றார்கள். இப்படித்தான் நல்ல ஆவிக்குரிய சபையான பெந்தேகோஸ்தேசபை போலியான பாஷை பேசும் போலி விசுவாசிகள் நிறைந்த சபையாக மாறியது.


அந்நியபாஷையின் வரலாறு

Cross  இனி சபைகளின் ஆரம்பகால நிகழச்சிகளை கூறி நேரம் போக்காமல் விஷயத்துக்குள் கடந்து போவாம்.

இந்த அந்நியபாஷைக்கு பழைய    ஏற்பாட்டின் வரலாறு என்ன?    புதிய ஏற்பாட்டில் அதற்கு தொடர்பு உண்டாக காரணமென்ன? என்பதை அறிந்தால் இந்த போலி அந்நியபாஷைகளை நீங்கள் இனம் கண்டுக்கொள்ளமுடியும்.

Cross  இதற்கு வேதபுத்தகத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் எழுதப்பட்ட சரித்திர வரலாற்றை வாசிக்கவேண்டும். ஆதி 11:1,6-9. அன்றை உலக ஆரம்பகாலங்களில் உள்ள மக்கள் எல்லாரும் ஒரே பாஷையைதான் பேசினார்கள்,    அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு பாஷைதான் இருந்ததது. பாஷை-மொழி என்றால் ஒருவர் மற்றவரோடு பேச தொடர்புக்கொள்ள உபயோகிக்ககூடிய வித்தியாசமான சப்தம்.      ஆதிகாலத்தில் ஊமையர்கள் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளும் செய்கைமொழிதான்,          கற்கால மக்களுக்கு தொடர்புமொழியாக பயன்பட்டது. நாளாகநாளாக ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டிபேச அதற்கு எல்லாரும் குறிப்பிட்ட வார்த்தையை பெயராக சூட்டினார்கள். இப்படி பல பெயர்கள் வார்த்தைகளாக உருவானது பின் அதுவே மொழியாக மாறியது.      அதைத்தான் ஆதிமக்கள் பேசும் மொழியாக்கிக்கொண்டார்கள்.    அன்றைய உலகம் ஒரே பேச்சும்,    ஒரே பாஷையுமாயிருந்தது என்று கூறுகிறது. ஆதி 11:1.

Cross  அன்றைய நாட்களில் பசிக்கு சாப்பாடு கிடைத்தால்போதும் என்று வாழ்ந்தார்கள். வேட்டையாடி, பயிரிட்டு அதை சாப்பிட்டு மீதி நேரம் முழுவதும் ஜனங்கள் சும்மாயிருந்தார்கள்.

அறிஞர்.அண்ணா அவர்கள் கூறினார். வீதி ஓரங்களில் வேலையற்றதுகள், வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் என்றார்.    இந்த வேலைவெட்டியில்லாதவர்கள் உண்டுவிட்டு சும்மா இருக்கும்போது பலவித தேவையற்ற சிந்தனைகள் அவர்களுக்குள் உருவாகிறது.    இன்று இப்படி வேலையில்லாத வாலிபர்களைத்தான் கைநிறைய பணம்கொடுத்து பயன்படுத்தி தீவிரவாதத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.    ஆகவே சாப்பிட்டுவிட்டு வேலை ஒன்றும் இல்லாத அந்தகால மக்கள் எல்லாரும் இணைந்து வானத்தைத்தொடும் உயர்ந்தகோபுரம் பணிந்தால் என்ன?    (இப்போதுள்ள ஜெபகோபுர வியாபார கடைகளைபோல என்று கூறமாட்டேன்).    கோபுரம் பணியும் ஆசை மக்களுக்குள் ஏற்பட்டது. உடனே கோபுரம் பணியும் வேலையை மிகத்திறமையாக செய்தார்கள். பெரியபெரிய எஞ்ஜினியர்கள் கட்டும் நான்கு அடுக்குமாடிகள்கூட அடித்தளம் சரியில்லாமல்,        கலவையின் அளவு சரியில்லாமல் கட்டிய சில நாட்களில் இடிந்துவிழுந்தது என்று தினசரி செய்திதாள்களில் கேள்விப்படுகிறோம்.

Cross  ஆனால் எஞ்ஜினியர்கள், படித்தவர் இல்லாத அக்காலத்தில் எத்தனை திறமையாக யோசித்து வானத்தைதொடும் அளவு உயர்ந்த கோபுரத்தை பணித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிக ஆச்சரியமாகயிருக்கிறது. இந்த கட்டிட ஞானத்தோடு இரண்டு தவறான எண்ணங்கள் இவர்களுக்குள் ஏற்பட்டது. அதுதான் தேவனின் மனதை தாக்கின. ஆதி 11:6-9.

(1).  தங்களுக்கு பேர் உண்டாக இந்த கோபுரத்தை பணிவோம் என்றார்கள் (வச 4).

(2).  தாங்கள் செய்ய நினைத்தது எதையும் யாராலும் தடைசெய்ய முடியாது என்று நினைத்தார்கள் (வசன 6).

முதலாவது கடவுளைப் புறக்கணித்தார்கள். தங்களுக்கு பெயர் உண்டாக வேண்டும்.

1.  தான் இல்லாமல் போனால் இந்த சபையை, டையோசிஸ்ஸை கெடுத்துவிடுவார்கள் என்று சிலர் எண்ணுவதாலும் தங்களால்தான் சபையை நன்றாக நடத்தமுடியும் என்று எண்ணம் உள்ளவர்கள் உண்டல்லவா? இங்குதான்    பிரச்சனை உருவாகிறது.      தாங்கள் புகழப்படவேண்டும் என்று நினைக்கிறதால்தானே தேவனுக்கு கோபம் வந்தது.    நான் கர்த்தர் என் புகழ்ச்சியையும், துதியையும் யாருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன் என்று கர்த்தர் கூறினார். ஏசா 42.8. தேவன் தனக்குவரும் புகழ்ச்சியை, யார் தனக்கென்று எடுத்துக்கொண்டாலும் தேவனுக்கு கோபம் வரும்.

2.  அடுத்தது தான் செய்வதுதான் சரி என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் எடுக்கும் முயற்சியை யாராலும் தடுக்கமுடியாது என்ற பெருமையுள்ள எண்ணம் இவர்களுக்குள் இருந்தது. என் திட்டம், என் எண்ணம், என் செயல், நான் நினைப்பதுதான் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தேவனுக்கு பிடிக்காதது.

Cross  கர்த்தர் சொல்கிறார். உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என் வழிகள் உன் வழிகளுமல்ல என்றார். ஆகவே இவர்களுக்குள்ளே இருந்த தேவனுக்கு பிரியமில்லாத பெருமை, தாங்கள் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்று அகம்பாவத்தை உணர்த்த கர்த்தர் நடவடிக்கை எடுத்தார். மேலும் இவர்கள் பணியும் கோபுரத்தை வானம்வரை உயர்த்தி என்ன பிரயோஜனம்? - பிரயோஜனமில்லாத விஷயத்துக்கு நேரத்தையும், பொருளையும் வீணாக்குகிறார்களே என்றும் இவர்களுக்கும்மேல் சக்தி வாய்ந்த ஒருவர் உண்டென்பதையும் இம்மக்கள் அறிந்து உணர்த்தப்படவும் இவர்களின் அகம்பாவத்தை அதமாக்கவும் கர்த்தர் இறங்கி வந்தார்.

Cross  இது நடந்த காலம் ஏறக்குறைய கி.மு 2225ம் ஆண்டு ஆகும். உடனே    கர்த்தர் அற்புதமாக செயல்பட்டார். அவர்களைக்கொண்டே அவர்கள் மூலமாகவே, அவர்களே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து ஓடத்தக்கதாய் அவர்கள் நாக்கை மட்டும் தொட்டார். அவ்வளவுதான் ஒரே பாஷை - பல பாஷையாக மாறியது.    இதைத்தான் செமிட்டிக் லாங்வேஜ் என்பார்கள். அதாவது ஒரே ஒரு மொழியிலிருந்து சுமார் 18 மொழிகள் உருவாயின.

சமஸ்கிருத மொழி பலமொழிகளுக்கு ஆரம்பம் என்பார்கள். அதுதான் செமிட்டிக் லாங்வேஜ் என்பது. சமஸ்கிருதம் கலக்காத இந்தியமொழிகள் மிககுறைவு அதைப்போலவே சம்பவித்தது.

Cross  அந்த சில நிமிடத்திலேயே ஒருவர் பேசியது மற்றவர்களுக்கு புரியவில்லை. யார் பேசியது யாருக்கு புரிந்ததோ அவர்கள் எல்லாரும் ஒரே கூட்டமாய் இணைந்து அந்த நாட்டைவிட்டே பெயர்ந்து உலகத்தில் மறுகோடிக்கு சென்று குடியேறினார்.      இப்படியாக யார்யார் எந்தெந்த பாஷைகளை பேசினார்களோ அவர்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமாக பிரிந்துபோனார்கள். இப்படியாக கர்த்தர் அந்த ஜனங்களை பாஷைகளால் சிதறடித்தார். இப்படி உலகெங்கும் சிதறிடிக்கப்பட்ட மக்கள் எல்லாருக்கும் பாவங்கள் கழுவப்பட பாவத்திலிருந்து விடுவிக்க தேவனோடு அந்த மக்களை ஒப்புரவாக்க மேசியா இந்த உலகத்தில் பிறந்த விவரம் அறிவிக்கவே பெந்தேகோஸ்தே நாளை கர்த்தர் தெரிந்தெடுத்தார். பண்டிகையின் 50வது நாளிலே தேவன் தன் பரிசுத்த ஆவியானவராலே எல்லா மக்களையும் ஒப்புரவாக்கும் பணியும், இணைக்கும் பணியும் ஒன்றாக நடந்தேறியது. பிதாவோடு மனிதனை ஒப்புரவாக்கும் மீட்பின் பணியை இயேசுகிறிஸ்து நிறைவேற்ற அவரின் உதவியாளராக பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி வந்தார். ஆவியானவர் வரப்போவதை இயேசுவானவர் பலமுறை பல வசனங்கள் மூலமாக முன்னறிவித்ததைதான் நீங்கள் அறிவீர்களே. அதை மீண்டும் நான் இங்கு எழுதவில்லை நீங்களே எடுத்து வாசித்துக்கொள்ளுங்கள்.


ஆவியானவரின் முதல் இறக்கம்

Cross  கிறிஸ்துவின் வாக்குப்படி சீஷர்கள் (இயேசுவின் தாய் மரியோளோடு சேர்த்து 120 பேர்) மேல் அறையில் காத்திருந்தபோது அவர்கள்மேல் ஆவியானவர் இறங்கினார்.


அப்போது நடந்த அதிசய சம்பவம் மூன்று
1. பலத்த காற்று - அக்கினிமயமான நாவு,
2. இடிமுழக்கம் போன்ற சத்தம்,
3. பற்பல பாஷைகளில் பேசினது.

1.  அக்கினி-காற்று: பழைய ஏற்பாட்டிலிருந்து காற்றும் - அக்கினியும் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம் என்பதை அறிவீர்கள். பழைய ஏற்பாட்டின் காலத்தில் வந்துவந்து திரும்பபோகிறவராக பரிசுத்த ஆவியானவர் காணப்பட்டார். இயேசுகிறிஸ்து மேலறையில் காத்திருங்கள் (ஜெபித்துக்கொண்டிருங்கள்) நான்போய் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவேன். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்வரை நீங்கள் எங்கும் போகக்கூடாது, ஊழியமும் செய்யக்கூடாது என்று இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருந்தார். இயேசுகிறிஸ்து வாக்களித்தப்படியே பரிசுத்த ஆவியானவரை சீஷர்களுக்குள் அனுப்பினார். ஜெபித்துக்கொண்டிருந்த சீஷர்கள் பலத்த காற்றும் அக்கினி மயமான நாவு    (flam)    திடீர் என்று கண்டவுடன் பரிசுத்த ஆவியானவர் வந்துவிட்டார் என்பதையும் தங்கள்மேல் இறங்கிவிட்டார் என்பதையும் உணர்ந்தார்கள்.

2.  இடிமுழக்கம் போன்ற சத்தம்: திடீர் என்று கேட்டும் பயங்கரசத்தம் ஆட்களை எழுப்பி சத்தம் வந்த இடத்தில் கூட்டிசேர்க்க பயன்பட்டது. அன்று பாபேல் கோபுரம் பணியும்போது கர்த்தரால் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து பஸ்கா பண்டிகைக்கு வருடாவருடம் வழக்கமாக வந்து கூடுவது வழக்கம். அப்படியே பற்பல தேசத்திலிருந்து, பற்பல பாஷைக்காரர் கூடிவந்திருந்தார்கள். இரவு எல்லாரும் உறங்கிக்கொண்டிருக்க இடிமுழக்கம் போன்று என்றும் கேட்டிராத (பூமி அதிர்ச்சி போன்ற) சத்தம் கேட்டவுடன் என்னவோ ஏதோ என்று பயந்து சப்தம் வந்த இடமாகிய மேலறை கட்டிடத்துக்கு முன்பாக எல்லா ஜனங்களும் கூடிவிட்டார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

3.  பற்பல பாஷைப்பேசினார்கள்: அப்போதுதான் மற்றொரு அதிசயம் யாராலும் செய்யமுடியாத அதிசயம் நடந்தது. அதுதான் ஒரே வாயிலிருந்து, ஒரே நாக்கிலிருந்து சீஷர்கள் பற்பல பாஷைகளை (Other Languages) பேசினார்கள் என்று வேதம் கூறுகிறது. இந்த இடத்தில் நன்றாக கவனியுங்கள். அந்நியபாஷை பேசினார்கள் என்று எழுதப்படவில்லை. அப்படியே ஒருவர் ஒரே ஒரு அந்நியபாஷை பேசினார் என்றும் எழுதப்படவில்லை.    ஒரே ஒருவர் வாயிலிருந்து வெவ்வேறு பாஷைகள் வெளிவந்ததை கவனிக்கவேண்டும். வெவ்வேறு பாஷையில் பேசினார்கள்........    ஒருவர் ஒரேசமயம் ஒரு பாஷைத்தான் பேசமுடியும்  -  நான் ஒரு இடத்தில் பிரசங்கம் செய்யும்போது மலையாளிகள் - தமிழர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் பேசும்போது தமிழில் ஒரு வார்த்தை பேசி  -  உடனே அதையே மலையாள வார்த்தையில் பேசி இருபாஷைக்காரர்களையும் பிரசங்கம் கேட்கும்படி செய்தேன். இங்கு    அப்படியல்ல, விவரிக்கமுடியாத அதிசயம் நடந்தது. ஒரே வாயில் ஒரே சமயத்தில் தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகள் பேசினார்கள் (பாஷைகள் வெளிவந்தன).

Cross  இந்த இடத்தில் ஒன்றை பெந்தேகோஸ்தேசபையினர் கவனிக்க மறந்துவிடுகிறார்கள் என்பதைவிட மறைக்கிறார்கள் என்பதுதான் சரியானது. காரணம் அவர்களுக்கு நன்றாக தெரியும்.    பேசப்பட்ட அந்த வெவ்வேறு பாஷைக்கும் அர்த்தம் இருந்தது.      மேலும் பாஷைக்குரிய ஆட்களும் அங்கிருந்தனர்.    சீஷர்கள் வாயிலிருந்தும் வெளிப்பட்ட பாஷை அத்தனை பேருக்கும் அவரவர் பாஷை விளங்கினது. (இப்போது பெந்தேகோஸ்தேகாரர்கள் பேசுவது பாஷையே அல்ல என்பதை அறியவேண்டும்).


பாஷையில் என்ன கேட்கப்பட்டது

Cross  அன்று சீஷர்கள் வெவ்வேறு பாஷையில் பிரசங்கம் செய்யவில்லை. பிதாவாகிய (யாவேவை) தேவனின் மகத்துவங்களை பேசகேட்டார்கள்.

மகத்துவங்கள் என்றால் தேவன் ஆதியாகம காலத்திலிருந்து நடப்பித்த அற்புத,      மகிமையான காரியங்களை இவர்கள் மட்டும் அறிந்த கேள்விப்பட்ட மகிமையான காரியங்கள்,        மழையால் தேவன் முழு உலகத்தையும் அழித்தது பெரிய மகிமை. அப்படியே தனக்கு கீழ்ப்படிந்தவர்களை மட்டும் அற்புதபேழை மூலமாக மிருகங்களோடு காப்பாற்றியது.    தேவன் வானத்தையும் பூமியையும் ஒரே வார்த்தையால் சிருஷ்டித்தது. வெறும் மண்கொண்டு மனுஷனை உண்டாக்கியது போன்ற அன்றைய காலத்தில் இவர்கள் மட்டும் அறிந்தவைகளை அன்று அவர்கள் சந்ததி சந்ததியாய் இந்த மகத்துவங்களை பாட்டாய்பாடி தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தவைகளை சாதாரண கலிலேயராகிய இவர்கள் எப்படி அறிவார்கள்?. தேவன் நடப்பித்த அந்தகால மகிமைகள் அத்தனையும் தங்களைத்தவிர வேறுயாருக்கும் தெரியாதே அப்படியிருக்க இவர்கள் வாய்மூலம் நம் பாஷையிலேயே இவர்கள் கூறகேட்கிறோமே. இவர்கள் யாவரும் கல்லேயரல்லவா, ஆகவே இது நம் தேவன் நடப்பித்த அற்புதம்தான். அப்போ நம் தேவனுக்கும்-இவர்களுக்கும் தொடர்பு உண்டு. அப்படியானால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் என்று தயாரானவுடன்தான். பேதுரு எழுந்து நின்று பாஷைக்கு விளக்கம் தரவில்லை.      பாஷையில் அருளப்பட்ட தேவமகிமைக்கு விளக்கம் கொடுத்து    -    தேவதிட்டத்தையும் பிரிந்து சிதறிடிக்கப்பட்டு போனவர்களை தேவனோடு ஒப்புரவாகும் மேசியாவை அனுப்பிய பிதாவின் திட்டத்தையும் கூறி சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை பிரசங்கித்தார்.    அன்று 3000பேர் அப்போதே இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்ந்தார்கள்.


இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்

Cross  பிதா ஆவியானவர் மூலமாக யாருக்கு இரட்சிப்பின்-ஒப்புரவாகுதலின் செய்தியை வெவ்வேறு பாஷைகளில்பேசி அறிவித்தார்?. (வச.5) வானத்தின் கீழ் இருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்களுக்கு இந்த செய்தி கூறப்பட்டது........................................................(தொடரும்)


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM