இப்பிரச்சனையில் இரண்டு பிரிவினர் இப்போது போராடுகின்றனர். இது கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை ஆகும். இதில் அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு என்ன வேலை? அவரோடு தொடர்புபடுத்தி செய்திகள் பலவிதமாக பேசிப்படுகிறதே? எனக்கும் இவர்கள் பிரச்சனையில் சம்பந்தம் இல்லை. ஆனால் என் வாசகர்கள் இந்த டையோசிஸ் பிரச்சனையில் ஆலோசனை கேட்டார்கள். அதனால்தான் ஆலோசனையாக இதை எழுதுகிறேன்.
இப்போது கோர்ட்டுக்குபோகும் இரு பிரிவினரும் பாரம்பரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் இருவரும் தினசரி வெளியிட்ட துண்டுபிரதிகள் அனைத்தும் நான் வாசித்தேன். குறிப்பிட்ட அரசியல்வாதியுடன் தொடர்புக்கொண்டு அவரிடம் பணம்வாங்கி செலவழிக்கிறார்கள் என்று மற்ற குழுவினரை குற்றம்சாட்டியவர்களே, ஒருகாலத்தில் அதே திரு.வைகுந்தராஜ் அவர்களோடு தொடர்புகொண்டு லாபம் அடைந்தவர்கள்தானே? அப்போது அவர் அரசியல்வாதி என்று இருபிரிவினருக்கும் தெரியவில்லையா?
அதனால்தான் என் வாசகர்கள் ஏராளமானவர்கள் திருநெல்வேலி டையோசிஸ்ஸில் இப்போது நடக்கும் பிரச்சனைப்பற்றி ஆலோசனை கேட்டு எனக்கு தினம் ஒரு கடிதம் எழுதியும் அவர்களுக்கு உடனே ஆலோசனை கூற மனமற்று இருந்தேன். இருபிரிவினராலும் அல்லது வேறு எந்த பிரிவினரானாலும் சரி, கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை, திருநெல்வேலி டையோசிஸ்ஸானாலும் சரி
- தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி உருபடவே உருப்படாது. தேவபிரசன்னம் அங்கு இருக்காது.
மேலும் அத்யட்சாதீன விவகாரங்களை லாட்ஜில் வைத்து பேசுவது, பாட்டில்களோடு, விருந்துண்டு, வாய்சண்டை, கைசண்டையிட்டுக்கொண்டு இத்தனை ஆர்ப்பாட்டங்களோடா பரிசுத்ததேவனின் ஆலய
பதவிகளை குறித்து தீர்மானிப்பது. இப்படிப்பட்ட செயல்கள் பலவருடங்களாக நடப்பதுகுறித்து யாருமே மனவேதனை படவில்லையா? யாருக்குமே இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லையா? இரட்சிக்கப்பட்ட அனுபவம் உள்ளவர் அப்படிப்பட்ட கூட்டத்தில் பங்கு கொள்ளலாமா? குருவானவர்கள் இப்படிப்பட்ட கூட்டத்தில் காணப்படலாமா? தேவனின் இருதயத்தை ஏன் இப்படி நோகடிக்கிறீர்கள்?. சபையாகிய தேவனின் சரீரத்தை ஏன் குத்திக்குதறுகிறீர்கள்?
ஆசியாவிலேயே மிக அதிகமாக மிஷனரிகள் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இந்த இரண்டு டையோசிஸ்களிலுமிருந்துதான் சென்றுள்ளார்கள். இவர்கள் தங்கள் பட்டம் இழந்து, பதவி இழந்து, தங்கள் வசதிகளை இழந்து, தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கையைப்பற்றியும் எதிர்பார்ப்புகளை பற்றியும் உள்ள ஆசைகளை எல்லாம் இழந்து காடுகளில், ஆதிவாசிகள் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மிஷனரிகள் தங்களை தாங்கும் சபைகள்
வீதிக்கும், கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய்வரும் நிலையைகேட்டு அவர்கள் மனம் எத்தனை வேதனைப்படும். டையோசிஸ்ஸை வளர்த்த வயதுமுதிர்ந்தார் மனம் எவ்வளவு வேதனைப்படும்.
அரசியல்வாதிகளின் பணத்தில் அத்யட்சாதீனத்தின் தலையெழுத்து மாறுமானால் இரண்டு குழுவினரில் யாருடைய செயல் சரி என்று சொல்வேன்?.
இதில் ஐக்கிய உபவாச ஜெபம் வேறு. இவர்களுக்குள் ஐக்கியம் எங்கே? இந்த குழுவிலிருந்து சில குருவானவர்கள் அடுத்த குழுவுக்கு தாவுகிறார்கள். அடுத்த குழுவிலிருந்து இந்த குழுவிற்கு தாவுகிறார்கள். ஆதாயம் எங்கு இருக்கிறது எந்த குழு பதவிக்குவரும் என்ற குழப்பத்தில்தான் இந்த கட்சிமாறல் காட்சி அரங்கேறுகிறது.
இப்படிப்பட்டவர்களுக்கு திரு.வைகுந்தராஜ் அவர்கள்தான்
இரட்சகர்
- இயேசுகிறிஸ்து அல்ல. அன்று யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். இன்று உயிர்தெழுந்த இயேசுவை இவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு அவரை மறுபடியும் பிடித்துவந்து கோர்ட்டில் நிற்க வைத்துள்ளனர். தீர்ப்பு வரும்முன் இவர்களே அவரை சிலுவையிலும் அறைந்து விடுவார்கள்.
ஜாமக்காரன் குறிப்பு: இரட்சிக்கப்பட்ட
மனந்திரும்பின அனுபவமுள்ள ஜாமக்காரன் வாசக குடும்பத்தில் உள்ள
குருமார்கள் விசுவாசிகள் யாவரும் இந்த இரண்டு குழுவினரிடமிருந்து
தயவுசெய்து விலகியிருங்கள். இயேசுவா - பதவியா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அப்படியே
டையோசிஸ் கவுன்சில் மெம்பர்களாகிய நீங்கள் இயேசுவைமட்டும் சந்தோஷப்படுத்த விரும்பினால் இந்த
இரண்டு குழுவிலிருந்தும் தயவுசெய்து விலகியிருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கு இயேசுவே பரிகாரியாக இருப்பார். உங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு, வேலை விஷயங்களுக்கு கர்த்தரின் சிபாரிசு போதும். இந்த குழுவினரின் உதவியை உதாசீனப்படுத்துங்கள். குற்றவுணர்வு நீங்கும்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் தூத்துக்குடி, நெல்லையில் மட்டுமல்ல, அநேக அத்யட்சாதீனங்களிலும் உண்டு. ஆனால் அவைகள் குருவானவர்களை வீதியில் நிற்கவைக்கவில்லை. அவர்களின் அத்யட்சாதீன விவகாரங்கள் தினசரி பேப்பர்களிலும், வாரப்பத்திரிக்கைகளிலும் வெளிவரவில்லை. ஆனால் ஆவிக்குரியவர்கள் அதிகமுள்ள மிகப்பழைமையும், பாரம்பரியமும் உள்ள இப்படிப்பட்ட அத்யட்சாதீனத்தின் உள்விவகாரம் இந்திய
பத்திரிக்கைகளில் வந்ததுதான் மிகவும் வேதனை.
கன்னியாகுமரி டையோசிஸ்ஸிலும் ஒரு காலத்தில் இதேபோல் சபை பிரச்சனை பத்திரிக்கைகளிலும், தினம்தினம் செய்திதாள்களிலும் இடம்பெற்று - முடிவில்
கோர்ட்டும் - வக்கீலும் அந்த டையோசிஸ்ஸை ஆளும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டு இன்று ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளது. அந்த நாட்களில் அந்த செய்திகள் எல்லா தினசரி செய்திதாள்களில் வெளிவந்ததால் கேரளா, தமிழ்நாடு
CSI சபைகளில் உள்ள விசுவாசிகள் பல இடங்களில் ஒன்றுசேர்ந்து
கன்னியாகுமரி டையோஸிஸ்காக விசேஷ ஜெபங்களை ஏறெடுத்தன. நானே அப்படிப்பட்ட விசேஷ ஜெபங்களை பல இடங்களில் பொறுப்பேற்று நடத்தினேன்.
இன்று,
திருநெல்வேலி டையோசிஸ்ஸின் பிரச்சனையில் கோர்ட் அத்யட்சாதீனத்தின்
நிர்வாக பொறுப்பை ஏற்றெடுக்கும் நிலை வருமா? ஜாக்கிரதை! அந்தநிலை வந்துவிடாமல் இருக்க ஜெபிப்போம்.
இப்படிப்பட்ட விவரங்கள்
ஜாமக்காரனில் வெளிவந்தால் பல பிஷப்மார்களுக்கு என்மேல் கோபம் உண்டாகிறது. இவைகளை எழுத இவர் யார்? என்பார்கள். ஆனால்
தினசரி பத்திரிக்கைகளிலும், வாரப்பத்திரிக்கைகளிலும் பொதுமக்கள் பார்க்க
அத்யட்சாதீனத்தின் நாற்றம் பாரெங்கும் வீசுவதைக்குறித்து பிஷப்மார்களுக்கு பிரச்சனையில்லை. இதை என்னவென்று சொல்வது?.
நம் சபைமக்களில் உள்ள என் வாசகர்களை மட்டும் உணர்த்துவதற்காக நான் எழுதுகிறேன். ஆனால் மற்றவர்கள் எழுதுவது வியாபாரத்துக்காக பிரச்சனைகளை
ஊதி பெரிதாக்கவும் எழுதுகிறார்கள். அதில் அவர்கள் லாபமும் சம்பாதிக்கிறார்கள்.
மூன்று விதமான வாரப்பத்திரிக்கைகளில் வெளிவந்த நெல்லை டையோசிஸ்ஸின் தற்போதையை விவகாரங்களைப்பற்றி வெளிவந்த செய்திகளில் எத்தனைப்பெரிய வேறுபாடுகள். சிலர் சின்ன விஷயத்தை பெரிதுப்படுத்தினர். சில பத்திரிக்கை டையோசிஸ்ஸைப்பற்றி
பொய்யான தகவல்களை அள்ளிக்கொட்டின. தங்கள் குழுவினர்தான் யோக்கியம் என்பதை மக்கள் அறியவும் மற்ற குழுவினரை அவமானப்படுத்தவும் குறிப்பிட்ட குழுக்களே செய்திகளை எழுதி வாரப்பத்திரிக்கைகளுக்கு கொடுத்து இவர்களே அந்த தவறான செய்திக்கு பணமும் கொடுத்து வெளியிடவைத்தனர்.
நம்
CSI சபைகளின் நிலையை பார்த்தீர்களா? இதை பார்க்கிற-கேள்விப்படுகிற நாம் கண்ணீர்விட்டு அவரவர்கள் தனிப்பட்ட முறையில் உபவாசித்து ஜெபிப்பதேயல்லாமல் வேறு ஒன்றும் செய்ய இயலாது. குறிப்பாக இரண்டு குழுக்களுக்காக
ஓட்டு சேகரிக்க செல்லும் நபர்கள் மனந்திரும்ப ஜெபியுங்கள். பிரச்சனைகள் அவர்களாலேயே அதிகம் உருவாகிறது.
நெல்லையிலும் ஒருநாள் டையோசிஸ் எலக்ஷனுக்காக உபவாசித்து ஜெபித்தீர்கள் என்ன பலன் கண்டீர்கள்?. எயிட்ஸ்சுகமானது, இயேசுசொன்னார் என்று இயேசுகிறிஸ்து மேலேயே
பழியை போட்ட ஊழியரைக்கொண்டு எத்தனை ஆயிரம்பேர் கூடி ஜெபித்தாலும் அந்த ஜெபம் கேட்கப்படுமா? அந்த குறிப்பிட்ட ஜெபத்துக்கு பின்தான் இந்த பிரச்சனைகள் பூதாகாரமாகிப்போனது என்பதை உணர்ந்தீர்களா?.
கர்த்தர் தலையிட்டால்தான் சமாதானம். அவர் தலையிட்டால் இரண்டாம் ஆயுதத்தை கையில் எடுப்பார். அது டையோசிஸ்ஸில்
குறுக்குவழியில் ஜெயித்து பதவிப்பொறுப்பெடுப்பவர்களுக்கு நல்லதல்ல.
இப்போது நெல்லையில் நடக்கிற டையோசிஸ் பிரச்சனை
சொந்தக்காரர்களுக்குள் நடக்கும் குடும்பப்பிரச்சனை ஆகும். அதன்மூலம் ஏற்பட்ட பழைய
பகையும், வைராக்கியமும், இவர்களுக்குள் கௌரவ பிரச்சனையாகி முழு டையோசிஸ்ஸையும் அவமானத்துக்குள்ளாக்கியுள்ளது. இவர்கள்
குடும்ப சண்டையில் பாவம் டையோசிஸ் படுகிறபாடு மிக அதிகம். சபை தேவனின் சரீரம். தன் சரீரத்தை துன்பப்படுத்துகிறவர்களை தேவன் சும்மா விடுவாரா?
உண்மையில் லேசெயலர் பதவி என்பது சபையில் செயல்படும் மிகமுக்கியமான
ஊழியமாகும். கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியமாகும். இந்த ஊழியத்தை செய்ய இப்படியா போட்டி போடுவது? கோர்ட்டுக்குபோயா
ஊழியத்தை பெறுவது? இந்த பதவியில் நிற்பவர்கள் உண்மையான கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களானால்
போட்டி போடமாட்டார்கள், விட்டுக்கொடுத்துவிடுவார்கள். ஒருவன் ஒரு வஸ்திரம் கேட்டால் இரண்டு வஸ்திரத்தைக்கொடு என்று இயேசு கூறிய உதாரணத்தை தியானித்துப் பாருங்கள். உங்கள் அத்யட்சாதீனம் மட்டுமல்ல, மற்ற அனைவரும் உங்களை கவனிக்கிறார்கள். இயேசுவும் கண்ணீரோடு உங்களை கவனிக்கிறார். |