|
பெத்தேல் நிர்வாகி திரு.ஜெயகுமாருக்கு ஒரு திறந்த கடிதம்:
திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு,
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
அநேக நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுக்கு கடிதம் எழுதும் வாய்ப்பை கர்த்தர் எனக்கு கொடுத்துள்ளார். பெத்தேல் நிர்வாகத்திலிருந்து சிலரை வெளியேற்றியும், சிலரை வேறு இடங்களுக்கு மாற்றியும் நீங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன். இது பெத்தேல் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல காரியம்.
மாடு, ஆட்டு பண்ணைகளை கவனிக்க ஒரு
Veterinary Doctor-ஐ நியமித்திருக்கிறீர்கள். இதுவும் நல்ல காரியம். இன்னும் கோழிப்பண்ணை, முயல், வெள்ளைப்பன்றி என்று பண்ணைகளை விரிவுப்படுத்தினால் பெத்தேலுக்கு லாபமும் ஏற்படும். அதேசமயம், பெத்தேல் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும். அடுத்து வெளிநாட்டு நிதியுதவியுடன் பெத்தேல் பெயரிலேயே பாக்கட்
பால், தயிர் தயார் செய்து வெளி மார்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பலாம். இதனால் பெத்தேலுக்கு விளம்பரமும் பெருகும், லாபமும் வரும். இதேபோல்
பெத்தேல் விவசாய பண்ணையை கவனிக்க
BSc (AGRI) படித்தவரை நியமித்தால் நல்லது.
அடுத்து
பெத்தேல் மருத்துவமனையில் தேவபயத்தோடு, எந்த ஊழலிலும் ஈடுபடாமல் சேவை மனப்பான்மையோடு வேலை செய்த சில உண்மை ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் என்று விசாரித்து, அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டால், பெத்தேல் மருத்துவமனை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
பெத்தேல்
பள்ளியில்
Grace Mission உதவியுடன் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களில் சிலர் பெத்தேல் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு கேன்டீனிலிருந்து உணவு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. கேண்டீனில் கொடுக்கும் ஆகாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மூடப்பட்டுயிருக்கிற
பெத்தேல் சமையல் அறையை திறந்து, முன்புபோல் அங்கிருந்து உணவு தயார் செய்துகொடுத்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஊழலும் இல்லாமல் இருக்கும்.
Bethel
Anderson Elementary Schoolக்காக ஒரு
Van ஒழுங்குசெய்து, பஸ் கட்டணம் இலவசம் என்று அறிவித்துகூறி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தால் பள்ளியில்
மாணவர்களின் சேர்க்கையும் உயரும். அரசாங்க சலுகைகள் நமக்கு நிறைய கிடைக்கும். இதனால் மேலும் சில ஆசிரிய, ஆசிரியைகளை நியமிக்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படும்.
பெத்தேலுக்கு சம்மந்தமில்லாத பொதுவான ஒரு
Auditorsஐ நீங்கள் நியமித்து, பெத்தேல் மருத்துவமனை, பள்ளிக்கூடம், வேதாகம கல்லூரி, கணக்குகளை தணிக்கை செய்தால் பல உண்மைகள் வெளிவரும். கெட்டபெயர்கள் நீங்கும். பெத்தேல் குழந்தைகள் காப்பகத்தின் கணக்குகளையும் தணிக்கை செய்யவேண்டும்.
புது
டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களை உடனடியாக சேர்த்து பழையநிலைக்கு
பெத்தேல் மருத்துவமனையை தூக்கி நிறுத்துங்கள் உங்களால் முடியும்.
கலைஞர் காப்பீட்டுதிட்டத்தில், ஓமலூர் தாலுக்காவிலேயே
பெத்தேல் மருத்துவமனைதான் முதன்மையாக இருந்து இருக்கவேண்டும். ஆனால் இன்று
பெத்தேல் மருத்துவமனையிருக்கும் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
பெத்தேலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
Veterinary Doctor தன் பணியை சரியாக செய்ய முடியாமல் சிலர் அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கேள்விப்படுகிறேன்.
மாரண்டஹள்ளியில் இருக்கும்
Bethel Community Centreம் சரியாக இல்லை. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும் மனவேதனை தருவதாகத்தான் இருக்கிறது. நீங்கள் விசாரித்தால் உங்களுக்கு உண்மைகள் தெரியும். பெத்தேலுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.
|