கர்த்தருக்குள் அன்பான ஜாமக்காரன் வாசக குடும்பங்களுக்கு உங்கள் யாவருக்கும் புதுவருட (2015) நல்வாழ்த்துக்களை கூறுகிறேன். இந்த புது வருடத்தில் உங்கள் சிந்தனைக்கு சில ஆலோசனைகளைக்கூற பாரப்படுகிறேன்.
புதுவருடம் தொடங்கினால்போதும் எல்லா நட்சத்திர ஊழியர்கள், ஜெபத்தில் பொய்தீர்க்கதரிசனம் சொல்லும் அனைத்து ஊழியர்களும் இவர்களோடு சபை பாஸ்டர்களும்,
CSI, லூத்தரன் ஆயர்களும் தனித்தனியாக புதுவருட வாக்குத்தத்த வசனத்தை தயாரித்து அதை அச்சடித்து அதை மக்கள் கையில் கொடுக்க அதை மக்களும் வரிசையாக வந்து பயபக்தியோடு வாங்கி சொல்லும் பரிதாப காட்சியை ஒவ்வொரு புதுவருட ஆரம்பத்திலும் பார்க்கிறோம் அல்லவா! அந்த வாக்குத்தத்த வசனத்தை கர்த்தர் தனக்கு ஜெபத்தில் தனியாக காட்டினார் என்றும், சிலர் கர்த்தர் குறிப்பிட்ட வசனத்தை சொல்ல சொன்னார் என்று சபை ஆராதனையில் கூறி கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்த வசனத்துக்கு எல்லாரும் இரண்டு கைகளும் உயர்த்தி அல்லேலுயா சொல்லுவோம் என்று பாஸ்டர் அறிவிக்க சபை ஜனங்களும் உணர்ச்சிவசப்பட்டு
அல்லேலுயா! என்று அவர்கள் சத்தமிடும் அந்த கூக்குரல் சத்தம் ஜாமத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் ஊரே பயந்து எழும்வண்ணம் துடித்துபோகும் காட்சிகளாகும்.
என்ன பரிதாபம்! படித்த மக்கள்! படிக்காத மக்கள்! அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கைகளை தட்டி, உடலை குலுக்கி நடுங்குவதைப்போல தங்களை காண்பிக்கிறார்கள். இது செத்துப்போனவரை தூக்கிக்கொண்டு போகும் பாடைக்குமுன் கிராமமக்கள் தப்பட்டை அடித்து மேளமும் கொட்டி அதற்கேற்ப அவர்கள் கூத்தாடி கூத்தாடி கீழே விழுந்து புரளுவார்களே! அதைப்போன்ற காட்சி இன்று பல பெந்தேகோஸ்தே சபைகளில் காணக் கூடியதாக இருப்பது கிறிஸ்தவ சபைகள்
சவ ஊர்வலத்தில் சவக்குழியை நோக்கி பிணத்தை தூக்கி சொல்லும் பாமர மக்களைப்போன்று இருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.
|