அற்புத சுகமளிக்கும் ஊழியன் எலிசா நோய்வாய்பட்டு மரித்ததினால் தோல்வியடைந்தவரோ? (2இராஜ 13:14). அவரது எலும்புகளைத் தொட்ட மாத்திரத்தில் மரித்தவன் உயிர்பெற்றானெ. மிரியாம் தன்னுடைய பார்வையிலே தோல்வியுற்றவனாக விண்ணுலகம் சென்றிருக்கலாம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு தீர்க்கன் மீகா அவளை ஒரு தலைவியாகவேக் காண்கிறார். பெரும் வெற்றி வாகை சூடியவர் அருகில் நிற்கும்போது, உங்களைத் தோற்றவராகக் காணத்தோன்றும். உங்களை ஒருபோதும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். தேவனுக்கு நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். தேவன், உங்கள் மூலம் சாதிக்க வேண்டும்மென்பதை நீங்கள் சாதித்தால்போதும். நீங்கள் நீங்களாகவே இருங்கள். வேறொருவரைப்போலாக முயலாதீர்கள். பொறாமை, கோழைத்தனம், தன்னம்பிக்கையின்மை, இப்படி ஏதாவது உங்களில் ஒளிந்துக்கொண்டு பயனற்றவராக உங்களை உணரச் செய்கிறதா எனக் கண்டுபிடித்து அதை மேற்கொள்ளுங்ள். உறுதியும் ஊக்கமுமே உங்கள் தேவை.

எந்த சூழ்நிலையிலும் சாதகமானவை உண்டு. கண்டுபிடிக்கக் கடினமாயிருந்தாலும், அது அங்குதான் இருக்கிறது. இழப்பு ஒரு இனாமாகலாம். அந்த இழப்பு நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர ஒரு வாய்ப்பு, கற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருக்கும் மேன்மையான நபராயிருக்கவும், மேன்மையான வீராங்கனையாயிருக்கவும் தோல்வி என்னைத் தூண்டிவிட்டிருக்கிறது. டென்னிசைப்போலவே வாழ்க்கையிலும் அப்படித்தான் முன்செல்லவேண்டும் என்றார். ஒருமுறை தோல்வியைத் தழுவினபின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸின் தோல்வி உலகின் முடிவல்ல. நமது குறைகளையே எண்ணி தியானித்துக்கொண்டிருப்பதே நமது தோல்வி. அதை விட்டு நமது பலங்களில் கவனம் செலுத்தி, நாம் சிறந்திலங்கும் காரியங்களை மேம்படுத்துவதில் கரிசனை காட்டவேண்டும். நம்மை நாமே இழிவுப்படுத்திக்கொள்வதே நம்மை நாசமாக்கிக்கொள்ள வழி. "ஒரு காரியம் உங்களுக்கு நடக்கவில்லையா? நடக்கச் செய்யுங்கள். வாழ்க்கை நடக்கும் என்று காத்திருக்கக்கூடாது. நீங்களே வாழ்க்கையை நோக்கி திறந்தக்கரங்களுடன் ஓடவேண்டும்" என்றார் ஒருவர். உங்கள் எதிர்காலத்தின் பைலட் நீங்களே. ஆகவே எழுந்திருங்கள். உங்கள் வாழ்வை வெற்றியாய் மாற்றுங்கள். பிசாசின் பொய்களை நம்பவேண்டாம். இறைவனது உண்மையை நம்பி வாழுங்கள்.

ஜாமக்காரன்: இன்று கிறிஸ்தவ உலகில் அலட்சியப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பெண்கள் ஏராளம். என் ஆலோசனை நேரங்களில் மிக அதிகமான பெண்கள் பிரச்சனை உள்ளவர்களாகத்தான் என்னிடம் வருகிறார்கள். அவர்களில் பலர் கணவன்மார்களால் தூக்கிவீசப்பட்டு விதவைகள்போல் வாழுகிறவர்கள் ஏராளம். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் கல்லூரியில், சபையில் ஜெபகூட்டம் நடத்தியவர்கள். ஆனால் விதவிதமான சூழ்நிலைகளினால் சோர்ந்துபோனவர்களாக இப்போது தனிஜெபம் இழந்து, வேதவாசிப்பு இழந்து, சொந்த வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு பகலில் அழமுடியாமல் இரவில் எல்லாரும் உறங்கியபின் கண்ணீர்விட்டு அழுது வாழ்கிறவர்கள். சகோதரி.லில்லியனின் இந்த செய்தி நிச்சயம் இதை வாசிக்கும் உங்கள் எல்லாருக்கும் புது உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கட்டுரையில் சிலது கரடுமுரடாக இருக்கும். ஆனால் கட்டுரையின் நோக்கம் மிக அற்புதம். இவர் எழுதிய புத்தகங்கள் உங்களுக்கு தேவையாயிருந்தால், எழுதிய இந்த கட்டுரை விஷயத்தில் சந்தேகம் எழும்பினாலோ Dr.Lillyan அவர்களோடு தபால் வழியாக அல்லது இ-மெயில் வழியாக தொடர்பு கொள்ளலாம். கர்த்தர் டாக்டர்.லில்லியனுக்கு கொடுத்த தாலந்துகளுக்காக தேவனைத்துதிக்கிறேன். இவர் வாழ்க்கையின் அனுபவ எதிரொலி இவர் எழுதியதில் காணலாம். ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் பெலம்தந்து படுக்கையிலிருந்து உங்களை எழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கட்டுரையைக்குறித்த விமர்சனங்களை எனக்கு எழுதாமல் சகோதரிக்கு எழுதி பதில் பெறுங்கள்.

தொடர்புக்கு:
Dr.LillyanStanley, MBBS., DCH.,
Blessing Youth Mission,
Church Colony Gandhi Nagar,
Vellore-632 006,
E-Mail: [email protected]


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM