கோவை திருச்சி ரோட்டில் அமைந்த CSI Christ Church கூட்டங்கள் அனைத்தும் இம்முறையும் மிகச் சிறப்பாக அமைந்தன. சனிக்கிழமை தனி ஆலோசனைக்கென்று ஏராளமானவர்கள் வந்து ஆலோசனை பெற்று ஜெபித்து சென்றனர். ஜாமக்காரன் வாசக குடும்பங்களையும் இம்முறை சந்திக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. Rev.எபினேசர் மணி அவர்கள் மிகச் சுறுசுறுப்பாக ஒவ்வொரு நாளும் கூட்ட ஏற்பாடுகளை கவனித்தது புகழப்படவேண்டியது. இக்கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
|