இதனாலேயே இன்று கிறிஸ்தவமத வட்டாரத்திலே பரிசுத்த ஆவியானவரைப்பற்றி எத்தனை விதமான போதனைகள், குழப்பங்கள். காரணம், என்னவெனில், வேத வசன எச்சரிக்கை பெற்றும் மக்கள் அதை சுயவிருப்பமான வழியில் வியாக்கியானப்படுத்துகின்றனர். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடு ஒப்பிட்டு பார்க்க மறுப்பதால் வரும் விளைவே இத்தனை குழப்பங்கள். பரிசுத்த ஆவியானவர் இதற்கு காரணர் அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.


ஈ). பரிசுத்த ஆவியானவர் தனிமையானவர்:

பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியானவராகிய கடவுள், இவர்கள் மூவரும் தனிதனி நபர்கள், அதே சமயம் இவர்கள் மூவரும் வேறுவேறானவர்கள் அல்ல!. மூவரும் ஒருவரே!

உதாரணமாக, இயேசு கன்னி மரியாளின் வயிற்றில் பிறக்கும் முன்னே, பரிசுத்த ஆவியானவர் இருந்தார். இந்த இடத்தில் இயேசு வேறு. ஆவியானவர் வேறு, (லூக் 1:26,35,15). எலிசபெத் வயிற்றிலிருந்த யோவான் திருமுழுக்கானார். இவர் இயேசு பிறக்க ஆறுமாதம் முன்பே பரிசுத்த ஆவியை பெற்றார். பரிசுத்த ஆவியானவருக்கும் பிதா குமாரன் போல இயல்புகள் அல்லது பண்புகள் உண்டு. எனவே இவர் தனியானவர். அடுத்ததாக, இயேசுவின் திருமுழுக்கிலே (மத் 3:16,17) பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்து பிதாவினால் அனுப்பபட்ட அவரின் குமாரன் என்று யோவானுக்கு அடையாளம்காட்ட புறாவின் வடிவில் இயேசுவின் மேலே வந்தார். அப்படியானால் எப்படி இருவரும் ஒரே ஆளாக இருக்கமுடியும்? அருமையானவர்களே பரிசுத்த ஆவியானவரை பற்றிய மனித போதனைகளினால் நாம் குழம்பினால், அதற்கு பரிசுத்த ஆவியானவர் பொறுப்பல்ல. மாறாக, நாம் தான் வேதத்தை பொறுமையாக படித்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். (யோ 5:39).

மத் 12:32 "எவனாகிலும் மனுஷகுமரானுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும், மறுமையிலும் அவனக்கு மன்னிக்கப்படுவதில்லை" இந்த வசனத்தின்படி இயேசு கிறிஸ்து வேறெ ஒரு நபர் பரிசுத்த ஆவியானவர் வேறு ஒரு நபர் ஆகும். யோ 14:16ன்படி இயேசுவே அப்போஸ்தலர்களிடம் "வேறொரு தேற்றரவாளனை நான் அனுப்புவேன்" என்றார். எனவே பிதா தான் குமாரன், குமாரன்தான் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவர்தான் பிதா என்ற போதனைகளில் மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். மூவரும் தனித்தனியாகவும் இயங்கினார்கள் என்று அறியமுடிகிறது.


III) பரிசுத்த ஆவியானவர் கடவுளாக
(தெய்வீகமானவராக) இருக்கின்றார்:

பிதாவாகிய கடவுளோடும், குமாரனாகிய கடவுளோடும், பரிசுத்த ஆவியானவரும் சமமானவர் ஆவார். உதாரணமாக, நமக்கு திருமுழுக்கை கட்டளையிட்ட இயேசுகிறிஸ்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே திருமுழுக்கை பெற கட்டளையிட்டுள்ளார் (மத் 28:19-20).

கடவுள் என்றால்:
நித்தியமானவர் (Eternal),
சகலமும் அறிந்தவர் (All Knowing),
எல்லாவற்றையும் படைத்தவர் (Creator),
எல்லா வல்லமையும் உள்ளவர் (All Powerful),
எங்கும் நிறைந்திருப்பவர் (Every Where).

பரிசுத்த ஆவியானவர் வெறும் காற்றோ, சக்தியோ அல்ல. அவர் ஆள்தத்துவம் உள்ள ஒரு நபராக இருக்கிறார். ஒரு நபருக்கு உரிய பண்புகள் செயல்பாடுகள் அவரிடம் உண்டு. மேலும் அவர் தேவத்துவத்திலும் ஒருவராக இருக்கிறார். இவரிடம் தெய்வீக தன்மை உண்டு. ஆகையால், மனிதருடைய போதனைகளால் நாம் குழப்பமடையாமல், பரிசுத்த ஆவியானவர் நமக்கு பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்திலே அவரை அறிந்து, அவர் காண்பிக்கிற கிறிஸ்துவின் வழியிலே நடப்போம். அப் 2:38ன்படி திருமுழுக்கிலே பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தினை பெறுவோம். அவருடைய வரங்களை தேடுவதைவிட ஆவியானவரோ தாமே ஐக்கியமாயிருப்பதற்கு முதலிடம் தருவோம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN