இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தும் பல ஊழியர்கள் மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஏராளமான காணிக்கைகளை மாணவ, மாணவிகளிமிடருந்து பெற்றிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட ஊழியர்கள் நடத்தும் ஊழிய வியாபாரத்தில் இவர்கள் படிக்கும் பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் ஜாமக்காரன் வாசகர்களின் நம் பிள்ளைகள் இந்த ஊழியர்கள் நடத்திய கூட்டங்களில் பங்கெடுக்காமல் இவர்கள் அனைவரும் தாங்களே சொந்தமாக ஜெபித்தும், தன் பெற்றோருடன் இணைந்து ஜெபித்தும், கஷ்டப்பட்டு இரவும், பகலும் படித்து தங்கள் சொந்த முயற்சியினாலும், தேவகிருபையினாலும் நம் பிள்ளைகள் பாஸ் ஆகியுள்ளனர். சில வீடுகளில் பரீட்சை முடியும்வரை குடும்பமாய் டிவி பார்ப்பதை நிறுத்தியும் இவர்கள் பெற்றவர்கள் தாங்களும் டிவி பார்க்காமல், தங்கள் பிள்ளைகள் பரீட்சைக்கு படிக்க பெரிதும் உதவியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரை வாழ்த்துகிறேன். நம் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை பரீட்சையில் பாஸாக ஜெபத்துக்கு காணிக்கை வாங்கும் ஊழியர்களிடம் போகவில்லை என்பதை அறிந்து தேவனை துதிக்கிறேன்.

பிள்ளைகளை நல்ல பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்க்க விசேஷமாக ஜெபம் ஏறெடுக்கின்றோம். மேலும் வாலிப பிள்ளைகள் உயர்கல்வி படிக்கும்போது அல்லது கல்லூரிகளில் சேர்ந்தவுடன் அங்கு ஆவிக்குரிய நண்பர்களை ஜெபத்தோடு தேடுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு காரணமில்லாமல் பாக்கெட்மணி அல்லது கைசெலவுக்கு பணம் என்ற பெயரில் பணம் கொடுத்து கெடுக்காதீர்கள். அவர்களிடம் செய்த செலவிற்கு கணக்கு கேட்காமல் பிள்ளைகளுக்கு அதிக பணம் கொடுத்து பிள்ளைகள் கெட்டுப்போக பெற்றோராகிய நீங்களே காரணமாகிபோய் கடைசியில் நீங்கள் கண்ணீர் விடும் நிலைக்கு ஆளாகாதிருங்கள் என்று எச்சரிக்கிறேன்.

உங்கள் வாலிப பையன்களுக்கு தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து அவர்களின் மரணத்துக்கும், விபத்துக்கும் நீங்கள் காரணராகி கண்ணீர் விடும் நிலை வேண்டாம். பிள்ளைகளுக்கு வாகனம் மிக அவசியம் என்றால் அதிக வேகத்தில் ஓடும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து பிள்ளைகளை கெடுக்காதீர்கள். நீங்கள் பணக்காரராக இருந்தாலும், பிள்ளைகளின்மேல் பாசம், அன்பு உள்ளவர்களாக இருந்தாலும் அந்த பாசத்தையும், அன்பையும் மனதில் அடக்கிவைத்துக்கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் அடிக்கடி பிள்ளைகளின் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சென்று பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள், பிள்ளைகள் யாரோடு எப்படிப்பட்டவர்களோடு நெருங்கி பழகுகிறார்கள் என்பதையெல்லாம் விசாரியுங்கள். அவர்களின் நண்பர்கள் கெட்ட நண்பர்களா என்பதையும் விசாரித்து அறியுங்கள். குறைந்தது மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவர்களின் வகுப்பு ஆசிரியர் அல்லது கல்லூரியானால் அவர்களின் HOD அல்லது லெக்சரரையாவது சந்தித்து விசாரித்து வருவது நல்லது, நீங்கள் அடிக்கடி பள்ளிக்கு, கல்லூரிக்கு வந்துப்போவது பிள்ளைகளைப்பற்றி விசாரிப்பது பிள்ளைகள் அறிவது நல்லது. அது அவர்களுக்கு பயத்தையும், பாதுகாப்பையும் உண்டாக்கும். ஜெபத்தோடும், ஞானத்தோடும், பிள்ளைகளுக்கு தன் நண்பர்கள் மத்தியில் அவமானம் உண்டாகாத முறையில் இந்த விஷயத்தில் உங்கள் அணுகுமுறை அமையவேண்டும். உங்கள் குடும்பத்துக்காக, குறிப்பாக உங்கள் குடும்பத்தில் படிக்கும் பிள்ளைகளுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.

வேதவசனம் கூறுகிறது. பிரம்பைக் கையாளாதவன் தன் மகனைப் பகைக்கிறான். நீதி 13:24.

பிள்ளையானவன் நடந்தவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6.

நீங்கள் அனுப்பிய e-mo மற்றும் மணியாடர், பேங்க் மூலம் அனுப்பிய காணிக்கைகளையும் பெற்றுக்கொண்டேன். அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்களில் பலர் உடனுக்குடன் தாங்கள் எனக்கு அனுப்பிய தொகையை எனக்கு அறிவித்தனர். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. ஆமென்.

கர்த்தரின் உன்னத பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்

Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN