CNI-யில் CSI

முதன்முதலாக (மும்பை) பூனாவில் CNI எல்லையில் CSI ஆலயமும், ஆராதனையும் நடத்தப்படுகிறது.

பூனாவில் இதற்காக CSI ஆலயம் கட்டப்பட சொந்தமான நிலம் விலைக்கு வாங்கப்பட்டு அதன் நில அரசாங்க ரிஜிஸ்டர் பதிவு 2014 ஏப்ரல் மாதம் 11ம் தேதி திருநெல்வேலி டையோசிஸ் பொருளாளர் திரு.செல்வின் ஜெயராஜ் அவர்கள், நெல்லை பிஷப் Rt.Rev.J.J.கிறிஸ்துதாஸ் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட அனுமதி கடிதத்தை சமர்ப்பித்து நெல்லை திருமண்டல CSI Trust பெயரில் பூனா பெதஸ்தா CSI தமிழ் ஆலயத்துக்காக என்று அரசாங்க பதிவு நடந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இனி ஆலய கட்டுமான பணியை துரிதமாக செயல்படுத்த பூனா பெதஸ்தா CSI ஆலய செயலர் திரு.ஸ்டீபன், பொருளாளர் மற்றும் ஆயர் ஆகியவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.


PUNE - BETHASTHA CSI TAMIL CHURCH CONVENTION

பூனாவில் CSI தமிழ் சபையில் 3 நாட்கள் கன்வென்ஷன் ஏற்பாடுகளை சகோ.ஸ்டீபன் மற்றும் ஆயர் யாவரும் இணைந்து கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பல்வேறு இடங்களிலிருந்து ஜாம்காரன் வாசகர்கள், மற்றும் CNI, மெத்தடிஸ்ட் சபை, UBS வேதாகம கல்லூரியிலிருந்தும் ஏராளமானவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் பங்குகொண்டனர். கூட்டம் ஆசீர்வாதமாக நடந்தேறியது. கேள்வி-பதில் பகுதி மிகச்சிறப்பாக நடைபெற்றதால் சபை மக்களின் பல வேதாகம கேள்விகளுக்கும், குடும்ப விவகாரங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும், பதில் வசன அடிப்படையில் பதில் கிடைத்ததால் யாவரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM