கர்த்தருக்குள் அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக.
கடந்த இரண்டு மாத ஜாமக்காரன் மிக தாமதமாக உங்களுக்கு அனுப்பியதின் காரணத்தை ஏப்ரல் 2014 ஜாமக்காரனில் வாசித்திருப்பீர்கள். இனி அப்படி தாமதம் உண்டாகாது என்று கர்த்தருக்குள் நம்புகிறேன். இரண்டு மாத தாமதத்தில் என் ஜாமக்காரன் குடும்பத்தில் என் வாசகர்களில் பலர் என்னை என்னமாய் நேசிக்கிறீர்கள் என்பதையும், எவ்வளவாய் வசனத்துக்காக வாஞ்சையாய் காத்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து தேவனைத்துதித்தேன்.
புதிய விலாச பட்டியல் தயாரித்து முடித்துவிட்டோம். இந்த புதிய விலாச பட்டியலில் உள்ளவர்களுக்குமட்டும் இனி ஜாமக்காரன் அனுப்பி வைக்கப்படும். புதிய விலாச பட்டியலிலேயே ஒரு நபருக்கு
இரண்டு பத்திரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதை அறிந்தோம். பலர் அதை எனக்கு உடனுக்குடன் அறிவித்து ஒத்துழைப்பு நல்கினார்கள். அவர்களுக்கு நன்றி.
ஜாமக்காரன் புதிதாக தேவைப்படுபவர்கள் எங்களுக்கு உங்கள்
முழு விலாசத்தையும் பின்கோடு, தொலைபேசி எண்ணையும் கடிதம் மூலம் அல்லது
இ-மெயில் மூலம் ஜாமக்காரன் வேண்டும் என்று எழுதிக்கேட்டுக்கொண்டால் உங்கள் விலாசத்தை நேரிடையாக
புது விலாச பட்டியலில் சேர்த்துக்கொள்வோம்.
|