செய்திகள்! செய்திகள்!!
கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஜாக்கிரதை!!

இந்தியாவில் இயங்கும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களைப்பற்றியும் சுவிசேஷம் அறிவிக்கும் மற்ற ஊழிய ஸ்தாபனங்களைப்பற்றியும் RSS, BJP இயக்கங்கள் அனைத்து புள்ளிவிவரங்களையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே தொகுத்து வைத்துள்ளன. மிஷனரி இயக்கங்களின் தலைவர்களைப்பற்றியும், பொறுப்பில் உள்ளவர்களைப்பற்றியெல்லாம் குறிப்பு எழுதி வைத்துள்ள RSS இயக்கங்களின் சுற்றிக்கையை நான் பார்க்க நேர்ந்தது.

ஆகவே எல்லா மிஷனரி ஸ்தாபனங்களும் அவர்களின் பணவரவு, செலவு, Income Tax விவரம் ஆகியவைகளில் அரசாங்கம் குற்றம் கண்டுபிடிக்காத வகையில் எச்சரிக்கையுடன் இருக்ககேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு பணம் பெறும் ஸ்தாபனங்கள்மீது முதல் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது.

மிஷனரி ஸ்தாபனத்தின் குறைபாடுகள் குறித்து மறைமுகமாக சில மிஷனரிகளே அரசாங்கத்துக்கு புகார் அறிவிக்கும் வெறுப்பின் நிலை உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட குற்றசாட்டுகளில் விஷ்வவாணி போன்ற வேறு சில ஸ்தாபனங்களின் பெயர்களும் குற்றச்சாட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற மிஷனரிகளின் பி.எஃப் (P.F) பணம் பல வருடங்களாக அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதால் பல மிஷனரிகள் வேதனையோடு அதை அறிவிப்பது நல்ல மிஷனரி ஸ்தாபனத்துக்கு கெட்ட பெயரை உண்டாக்கவிடும்.

கஷ்டப்பட்டு காடுகளில் ஊழியம் செய்த மிஷனரிகள் தங்கள் ஓய்வு நாட்களில் நிம்மதியாக பணகஷ்டமின்றி அவர்களை வாழவைக்கவேண்டியது ஒவ்வொரு மிஷனரி ஸ்தாபனத்தின் கடமையாகும். இப்போதுள்ள புது அரசாங்கம் நம்மை வெறுப்புடன் பார்ப்பதை உணரவேண்டும். மிஷனரிகளில் யாராவது தாங்கள் ஏமாற்றப்படுவதை பி.எஃப் அலுவலகத்துக்கோ, அல்லது அரசு அதிகாரிகளுக்கோ புகார் அனுப்பினால், அந்த ஸ்தாபன தலைவர்கள், பொறுப்பாளர்கள், அலுவலக பொறுப்பாளர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன டைரக்டர் ஊழியர்களின் பி.எஃப் பணத்தை சில வருடங்களாக வங்கியில் சேர்க்காத குற்றத்துக்காக ஜெயிலிலும் அடைக்கப்பட்டார். ஜாக்கிரதை!. ஊழிய ஸ்தாபனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டு எழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


பெந்தேகோஸ்தே சபைகளுக்கு RSS இயக்கத்தால் பிரச்சனைகள் இல்லை:

காரணம், இவர்கள் யாரும் மிஷனரி ஊழியங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் பாரம் இல்லாதவர்கள். அழிந்துப்போகும் ஆத்துமாக்கள் காடுகளில், கிராமங்களில் வடஇந்தியா பகுதிகளில் எத்தனை கோடி மக்கள் இயேசுவைப்பற்றி அறியாது தினம்தினம் மரிக்கிறார்கள்!. ஒருமுறைக்கூட இயேசுவைப்பற்றி கேட்டிராத இப்படிப்பட்ட மக்களைக்குறித்து பாரமில்லாமல் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக்குறித்து வாராவாரம் விதவிதமான பிரசங்கம் கேட்டு என்ன பயன்?. கிறிஸ்தவர்களை மீண்டும் மீண்டும் கிறிஸ்தவர்களாக மாற்றும் இவர்களின் ஊழியத்தில் தேவன் பிரியப்படுவாரா? இப்படிப்பட்ட சபைளைக்குறித்து இந்துமத தீவிரவாதிகளுக்கு பிரச்சனையே இல்லை. அதனால்தான் பெந்தேகோஸ்தே சபைகளிலிருந்து இரத்தசாட்சியாக மரிக்க ஆட்களேயில்லை.

சபை மிஷனரி பாரம் இல்லாது போனாலும் சபையில் உள்ள மக்கள் மிஷனரிகளாக எழும்ப வேண்டும். அவரவர் ஆத்துமாவுக்கு அவரவர்கள்தான் கர்த்தரிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். சபை எங்களை மிஷனரி பணிக்கு உற்சாகப்படுத்துவதில்லை என்று நியாய தீர்ப்பில் கூறி தப்பிக்க இயலாது. ஜாக்கிரதை!. நீங்கள் மனம்திரும்பி இரட்சிக்கப்பட்டது சரியாக இருக்குமானால் நிச்சயம் அழிந்துபோகிற ஆத்துமாக்களைக்குறித்தும் இயேசுவை ஒருமுறைகூட கேட்டிராத மக்களைக்குறித்தும் பாரமும் ஜெபத்தில் அந்த ஆத்துமாக்களுக்காக கண்ணீரும் வரும். கர்த்தர் ஒவ்வொருவரிடமும் கணக்கு கேட்பார்! மறக்கவேண்டாம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM