"இந்து மதத்திலேயே பல ஜாதிகள் உண்டு". அவரவர்களுக்கென்று ஜாதி கலாச்சாரம் கட்டுப்பாடு, வித்தியாசமான பூஜை முறைமைகள் உண்டு. அதை எந்த இந்து மதத்தினரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் என்று இவர்கள் கொண்டுவந்தால் RSSல் உள்ள இந்து மதத்தினரே அதை எதிர்ப்பார்கள் என்பது நிச்சயம். இந்திய நாட்டில் ஓட்டுபோட்டு திரு.மோடி அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் அனைவரும் இவைகளைக் குறித்துதான் பிரதான விஷயமாக பயந்துக்கொண்டிருக்கிறார்கள்.


மாநில உறவுகள் பாதிக்கும் சட்டம்:

இந்தியாவின் வடக்கு பகுதி மாநிலமான காஷ்மீருக்கும் எதிரான ஒரு சட்டத்தை BJP ஆட்சிக்கு வந்தால் நடைமுறை படுத்தப்போகிறார்களாம்!.


நம் இந்திய அரசியல் ஷரத்து நெ.370வது பிரிவு:

இந்திய தேசத்தில் அண்டை மாநிலமான காஷ்மீர் மாநிலத்தில் மட்டும்தான். இந்த சலுகை சட்டம் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சதுரஅடி நிலம்கூட சொந்தமாக வாங்கி வீடு கட்டமுடியாது. பொதுவாக அங்குள்ளவர்கள் தங்களின் நிலத்தை மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கு விற்கவும்மாட்டார்கள்.

370வது சட்டப்பிரிவுதான் காஷ்மீருக்குமட்டும் அளிக்கும் பிரதான சலுகை என்று அழைக்கிறார்கள். இது காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விசேஷ சலுகையாகும். இது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட காலங்களுக்கு முன்பு இருந்தே கடைபிடிக்கும் சலுகையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இவை தொடர்கிறது. இனியும் இந்த 370 பிரிவு தொடரவேண்டுமா? கூடாது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்குமட்டும் கொடுக்கப்பட்ட இந்த 370 பிரிவை நீக்கப்போகிறோம் என்று BJP கூறியுள்ளார்கள். இது ஒரு விதத்தில் நியாயமாகபட்டாலும் இதை உடனே நீக்கினால் பக்கத்து நாடான பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம் மக்களுடன், காஷ்மீர் முஸ்லீம் மக்கள் இணைந்துவிடும் அபாயம் இதில் உண்டு. காஷ்மீர் தனிநாடாக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்கலாம். இதற்கு உதவ சீனா நாடு தயாராக இருக்கிறது.


புது பிரதமர்.திரு.மோடி அவர்கள் நல்ல நிர்வாகி:

திரு.மோடி அவர்கள் குஜாரத்தில் முதல்வராக மூன்றுமுறை வெற்றிகரமான ஆட்சி செய்ததற்கு முக்கிய காரணம், தன் குஜராத் ஆட்சி நிர்வாகத்தில் RSS, பஜ்ரங்தள், BJP போன்ற இயக்கங்களில் உள்ள அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் எதையும் கேட்காமலும் நிர்வாக விஷயத்தில் தன் நெருங்கிய நண்பர்களான அரசியல்வாதிகளைகூட நிர்வாகத்தில் தலையிடாமல் அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார். நல்ல அனுபவமுள்ள உயர்படிப்பு படித்த உயர் அதிகாரிகளை ஆலோசகர்களாக தெரிந்தெடுத்து அவர்கள் ஆலோசனையின்படி நிர்வாகத்தை நடத்தியதுதான் குஜராத் ஆட்சியின் வெற்றியாகும்.

திரு.மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது திரு.தினேஷ்பிஸ்ட், ஓம் பிரகாஷ் சிங், தான்மே உபாத்யாய், ஜெகதீஷ் தாக்கர், சஞ்சய் பவ்சார், அம்ருத்பாய் பட்டேல், பரத்லால், ஜி.சி.முர்மு, கைலாஷ்நாதன், விஜய் நெஹ்ரா, ஷர்மா, பிரஷாந்த் கிஷோர், ஹிரேன் ஜோஷி இவர்கள்தான் குஜராத் நிர்வாகத்தில் திரு.மோடிக்கு ஆலோசனை அளிக்க ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்ட மெத்த படித்த உயர் அதிகாரிகளாவர்.

அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில் திரு.அலெக்சண்டார் அவர்களை தலைமை செயலராக நியமித்தபோது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் கோப்புகள் எதுவும் எந்த அதிகாரிகளும் 7 நாட்களுக்குமேல் தன்னிடம் வைக்காமல் உடனுக்குடன் பதில் எழுதி அனுப்பும் ஏற்பாடுகள் செய்ததின்மூலம், மக்கள் லஞ்சம் கொடுத்து பைல்களில் அதிகாரிகளின் கையெழுத்து வாங்கும்நிலை வராமல் அதன்மூலம் தமிழக முதல்வருக்கு நல்ல பெயர் கிடைத்தது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN