வித்தியாசமான இரத்தசாட்சி

இயேசுகிறிஸ்துவை இரட்சகராக, பாவமன்னிப்பை அருளுகிறவராக உண்மையான, உயிருள்ள தெய்வமாக மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது, அறிக்கை செய்யும்போது மிஷனரிகள் கொல்லப்படுவதை அவர்கள் இரத்தசாட்சிகளாய் மரித்தார்கள் என்று கூறக்கேள்விப்பட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எல்லாரும் கிறிஸ்துவை இரட்சகராக அறிவித்த காரணத்தால் அனைவருமே உயிரோடு கொல்லப்பட்டார்கள். ஆப்பிரிக்கா, நியூகினி தீவுகள், ரஷ்யா, சீனா இப்படிப்பட்ட நாடுகளில் இயேசுவை அறிவிக்க சென்ற பலர் அங்குள்ள மக்களால் கொல்லப்பட்டு இரத்த சாட்சிகளாய் மரித்தனர்.

ஆனால் மார்டீன் லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து புராட்டஸ்டன்ட் சீர்திருத்த பிரிவை தொடங்கிய காலத்தில் பலர் வேத புத்தகத்தின் அருமையை கர்த்தரின் வசனத்தின் வல்லமையை, வசனத்தின் ஆறுதலை ருசிக்கவும் அனுபவிக்கவும் வாஞ்சித்தார்கள். ஆனால் அந்த சீர்திருத்த கால ஆரம்பத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ கத்தோலிக்க சபையானது கிறிஸ்துவையும், மரியாளையும் மரித்த பரிசுத்தவான்களின் சிலைகளைமட்டும் வணங்கவும், சில கிறிஸ்தவ சடங்காசார முறைகளை பின்பற்றவும் கிறிஸ்தவத்திலேயே சில மூடநம்பிக்கைகளை பின்பற்றவும், கிறிஸ்தவ மத தலைவர்கள் சபை மக்களை கட்டாயப்படுத்தினர். நாட்டின் ஆளுகையும் அவர்கள் கையில்தான் இருந்தது. அவர்கள் கட்டளையின்படிதான் சபைகளும் நடத்தப்பட்டது.


வேதம் வாசித்ததால் கொல்லப்பட்ட இரத்தசாட்சி:

இங்கிலாந்து தேசத்தில் சீர்திருத்த சபை தொடங்கிய ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ பெற்றோரால் உண்மையாய் சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி வளர்த்தப்பட்ட வாலிபன்தான் வில்லியம் ஹன்டர் (William Hunter) என்ற வாலிபன் ஆவிக்குரிய பெற்றோர்களால் மெய்யான தெய்வ பக்தியுள்ள வழியில் வளர்க்கப்பட்டவன்.

ஒருநாள் லண்டனில் உள்ள எஸெக்ஸ் (Essex) பட்டிணத்தில் உள்ள பிரென்ட்உட் (Brent Wood) என்னும் இடத்தில் உள்ள ஆலயத்துக்கு ஆராதனையில் கலந்துக்கொள்ள ஆலயம் தொடங்கும் முன்பே ஆலயத்திற்குள் சென்றுவிட்டான். அங்கு மேசையின்மீது வைக்கப்பட்டிருந்த வேத புத்தகத்தை கண்ட அவன் ஆவலோடு அதை திறந்து வாசிக்க ஆரம்பித்தான்.

அந்த காலத்தில் பிஷப் அரண்மனை, அலுவலகம், அதை அடுத்து பிஷப் நீதிமன்றம் என்று அமைந்திருக்கும். இப்போது சிஎஸ்ஐ டையோசிஸ் கோர்ட், சிஎஸ்ஐ சினாட் கோர்ட் என்று ஒன்று பெயருக்கு இயங்கிக்கொண்டிருப்பதுபோல் அல்ல. அக்காலத்தில் பிஷப் கோர்ட்டுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் இருந்தது. அந்த காலத்தில் வேதத்தை மிகமிக பரிசுத்த புத்தகமாக மாத்திரம் காட்சிபொருளாக மாத்திரம் வைத்திருந்தனர். பிஷப் குறிப்பிட்டவர்கள் தவிர வேறு யாரும் வேத புத்தகத்தை தொட்டுவிடகூடாது. அத்தனை பரிசுத்த புத்தகமாக மக்களை பயமுறுத்தி நம்ப வைத்திருந்தனர். இந்த வாலிபன் அன்று ஆலயத்துக்குள் இருந்த வேத புத்தகத்தை திறந்து வாசித்தான். வாசிக்க வாசிக்க அவனுள் சொல்லமுடியாத சந்தோஷம் பெருகியது. இச்சமயத்தில் பிஷப் நீதிமன்ற அதிகாரி ஒருவர் அந்த பையன் வேதபுத்தகத்தை கையால் தொட்டு திறந்து வாசிப்பதை பார்த்து அந்த புனிதமான புத்தகத்தை நீ எப்படி தொடலாம்?. இது பெரும் குற்றமாக சபை சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. உடனே வில்லியம் ஹன்டர் பிஷப் காவலாளர்களால் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவனோ அந்த வேதம் வாசிக்க வாசிக்க மிக ஆறுதலாகவும், உலகில் வாழ பல நல்ல பரிசுத்த வழிகள் அதில் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்காக நான் அதை வாசித்தேன் என்றான்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN