1925ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி பொழுது விடிந்தவுடன் அவன் நண்பன் ஒருவன் ஜெயிலுக்கு வந்து அந்த வாலிபனைக்கண்டு பயப்படாதே என்று உனக்கு ஆறுதல் கூற வந்தேன் என்று மிகவும் துயரத்துடன் கூறினான். நான் எதற்கும் பயப்படவில்லை என்னை கடைசிவரை தாங்கக்கூடிய ஒன்று என் இருதயத்தில் இருக்கிறது என்று கூறினான். இதை கேட்ட அவன் நண்பன் அதற்குமேல் அவனிடம் பேசமுடியாமல் கதறி அழுதான்.

கொலைகளத்துக்கு அந்த வாலிபன் கொண்டுபோகப்பட்டான். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளின்மேல் முழங்கால் படியிட்டான். அந்த வாலிபன் ஹன்டருடைய சொந்த சகோதரன் நல்ல விசுவாசி. அவன் அருகே நின்று மரணசோர்வு தம்பிக்கு உண்டாகாமல் இருக்க வசனங்களை ஞாபகப்படுத்திசொல்லி அவனை ஊக்குவித்தான். நெருப்பு பற்றவைக்கப்பட்டது. அப்போது உடனே அவன் சகோதரன் தம்பி.வில்லியம் திடன்கொள்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று மாத்திரம் சொல் என்றான். நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது அந்த வாலிபன் வில்லியம் கர்த்தாவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான். இதுவே அந்த வாலிபனின் கடைசி வார்த்தையாக இருந்தது. அந்த இரத்தசாட்சியின் பொறுமையுடனும் முறுமுறுப்பில்லாமலும் தைரியத்துடனும் தன் ஜீவனை விட்டான்.

அந்த ஆரம்ப நாட்களில் வேத புத்தகம் யாரோ ஒரு சிலரிடம்தான் இருந்தது. அதை இரகசியமாய் சென்று வாசிப்பார்கள். வேதம் புத்தகம் வைத்திருந்தாலும், வேதாகமம் வாசித்தாலும் தண்டனை என்று அறிவிக்கப்பட்ட காலம் அது. காரணம், மக்கள் அதை வாசித்தால் கேள்வி கேட்பார்கள். வேதம் வாசித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால் அன்றைய ஆயர்கள், பிஷப்மார் பணம் கேட்டு மக்களை ஏமாற்ற முடியாது. அந்த முறையில்தான் மரித்துப்போன மூதாதையர் பெயரில் பாவமன்னிப்பு சீட்டு விலைக்கு விற்கப்பட்டது. ஆகவே வேதபுத்தகம் புனிதமானது. அதை யாரும் தொடக்கூடாது, படிக்கக்கூடாது என்றெல்லாம் ஜனங்களை ஏமாற பண்ணினார்கள். அதையும்மீறி மார்ட்டீன் லூத்தர் போல் திருட்டுதனமாக வேதத்தை படித்து உண்மையை தெரிந்து மற்றவர்களுக்கு அதை அறிவித்தததால்தானே புரட்சி வெடித்தது, புராட்டஸ்ட்ன்ட் உருவானது. ஆகவே வேதத்தை தொட்டால் தண்டனை, படித்தால் மரணதண்டனை என்று மக்களை பயமுறுத்தி வைத்திருந்த காலம் அது.

ஆனால் இன்றைக்கு விலை அதிகம் கொடுத்து விலை உயர்ந்த வேத புத்தகத்தை வாங்கி அதை வாசிக்க மனமில்லா பெயர்கிறிஸ்தவர்கள் எத்தனைப்பேர்.

ஒரு பிள்ளைக்கு ஜெபிக்க 2000 ரூபாய் வாங்கும்படி கர்த்தர் சொன்னார் என்று கூறியதை நம்பின கிறிஸ்தவ மூடர்கள் எத்தனைப்பேர். இவர்கள் யோசிக்க மனமற்றவர்கள். வேதம் வாசிக்காமலே இயேசுவின் பெயரில் லஞ்சம் கொடுத்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை குறுக்குவழியில் பெற்றுக்கொள்ள நினைக்கும் கிறிஸ்தவர்கள் இன்றைக்கும் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொய் ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் காணிக்கை கொடுத்து அவர்களை தொடர்ந்து தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேதத்தை கேளாதவனுடைய (வாசிக்காதவனுடைய) ஜெபம் அருவருப்பானது. நீதி 28:9.

பெற்றவர்கள் என் வேதத்தை மறந்தார்கள். நான் அவர்கள் பிள்ளைகளை மறப்பேன் என்று கர்த்தர் கூறுகிறார். ஓசி 4:6.

இப்போது நாம் எல்லாரும் பயங்கரமான காலத்தில் இருக்கிறோம். இனி கிறிஸ்தவ ஆராதனை இல்லை, கிறிஸ்தவ ஆலயம் கட்டமுடியாது என்கிற காலம் வரப்போகிறது. இப்போதே கிறிஸ்தவ வேத புத்தக கடைகளில் சினிமா புத்தகங்களும், ஆபாச கதை புத்தகங்களும் சேர்த்து விற்கப்படவேண்டும் என்ற சட்டம் வந்துவிட்டதே! அதனால்தான் CLS, ELS, Bible சொசைட்டி புத்தக கடைகளில் கிறிஸ்தவம் அல்லாத கிறிஸ்தவர்களுக்கு சம்பந்தம் இல்லாத புத்தகங்களும் விற்கப்படுவதை காண்கிறோம்.

ஜாக்கிரதை! கடைசி காலம், இந்திய அரசியலில் மாற்றம், ஆளுகின்றவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லாத மற்ற மதங்களை வெறுப்பவர்கள். ஜாக்கிரதை!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM