ஜெயித்தது BJP அல்ல

நடந்துமுடிந்த இந்திய பாராளுமன்ற (MP) தேர்தலில் BJP கட்சி அரிதி பெரும்பான்மையுடன் ஜெயித்துள்ளது. இந்திய வரலாற்றில் 30 வருடத்துக்குபிறகு தனி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. BJP சில கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும் தனி கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவு பெரும்பான்மையுடன் BJP வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாகும். இந்த வெற்றி இந்துமதம் சார்ந்த இந்துமத வைராக்கியம் கொண்ட பாரதீய ஜனதா கட்சி(BJP)யின் வெற்றியல்ல! என்று கூறினால் அது மிகையாகாது.

பெரும்பான்மை இந்திய மக்கள் திரு.நரேந்திரமோடி என்ற தனி மனிதனின்மேல் வைத்த பயத்தோடு கூடிய நம்பிக்கையாகும். மேலும் கடந்த பல வருடங்களாக இந்தியாவில் ஆட்சி நடத்தியவர்களின் வெளிப்படையான ஊழல், அலங்கோலமான அவர்கள் ஆட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும், வெறுப்புமே காரணமாகும். காந்தியின் குடும்பம் என்ற பெயரின் மரியாதைக்கு மக்கள் கொடுத்த முற்றுப்புள்ளி இது. காங்கிரஸ்க்கு மாற்று என்று குறிப்பிட்டு இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்க ஒரு குறிப்பிட்ட கட்சியோ கூட்டணியோ ஏதும் இல்லாத நிலையில், BJP மதவாத கட்சி என்று அறிந்தும், மாற்று வழியறியாத இந்திய மக்கள் திரு.மோடி அவர்களை மட்டும் நம்பி அளித்த வெற்றியாகும்.


BJP மட்டும் காரணமல்ல:

BJP கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் இன்று உலகம் முழுவதும் பரவிய இஸ்லாமியரின் வெறுப்பு வெறியாக மாறி, அதன் காரணமாக இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்ப்பு மற்றும் பல நாடுகளில் குண்டுவெடிப்பு சம்பவம், அதன்மூலம் நிரபராதிகளான ஏராளமான மக்களுக்கு ஏற்ப்பட்ட மரணம், காயம், குடும்ப பாதிப்புகள் அத்தனைக்கும் காரணம் BJP & RSS என்ற தீவிரவாத இயக்கம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு அன்றைய ஆளும்கட்சியான காங்கிரசும் அன்று பிரதமராக இருந்த திரு.நரசிம்மராவ் அவர்களும்தான் முக்கிய காரணகர்த்தாக்களாகும்.

பாபர் மசூதியை இடிக்காமல், பிரச்சனை ஏதும் உண்டாகாமல், உத்திரபிரதேச எல்லை எங்கும், வெளிமாநில மக்கள் உள்ளே நுழையாதபடி ராணுவத்தை அனுப்பி இப்போது சீல் வைத்தது போல் உள்ள ஏற்பாடுகளை அன்று இவர்கள் செய்திருந்தால் இந்திய நாட்டில் இத்தனை பெரிய குண்டு வெடிவிபத்தையும், மரணங்களையும் தவிர்த்திருக்கலமே? இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கரசேவை என்ற பெயரில் செங்கல்லை சுமந்த வந்த மக்களை இவர்கள் ராணுவத்தைக்கொண்டு ஆங்காங்கு தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?

இந்தியாவில் அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யபோகிறார்கள் என்று அறிவித்தவுடன் இரவோடு இரவாக அந்த அரசியல் தலைவர்கள் வீட்டில் சென்று அவர்களை கைது செய்து மறுநாள் நாட்டில் நடக்கவிருந்த பல அசம்பாதவிங்களை தடுத்த சம்பவங்கள் எத்தனை?. அப்படியிருக்க ஏன் கரசேவையை நரசிம்மராவ் தடுக்கவில்லை?. காரணம், ராஜதந்திரம் என்ற பெயரில் அன்று நடந்தது அரசியல் விளையாட்டு ஆகும். பாபர் மசூதியை இடிப்பதை தடுக்காத அன்றைய உத்திரபிரதேச BJP அரசாங்கத்தின் மீது முழு குற்றத்தை சுமத்தி, BJP அரசாங்கத்தின்மேல் வெறுப்பு உண்டாக்கவும் மத்திய காங்கிரஸ் கட்சி ஆட்சி மக்களை தங்கள் பக்கமாக திருப்ப நினைத்த சதியாகும். மற்றொரு பக்கம் இந்தியா முழுவதும் உள்ள BJP கட்சியை, முகமதியர்களுக்கு எதிரான கட்சி என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்பதாகும். அந்த வெறுப்பை சிறுபான்மை இனமான முஸ்லீம் மதத்தை சேர்ந்த இந்திய மக்களுக்கு காங்கிரஸ்தான் ஆதரவு தரும் கட்சி என்ற எண்ணத்தை இதன்மூலம் உண்டாக்க, அன்றைய காங்கிரஸ் தலைமையும், பிரதமர் நரசிம்மராவ் அவர்களும் நடத்திய குறு நாடகம் ஆகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN