இந்த மதமாற்றம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25ம் தேதியை விடுமுறை நாள் இல்லை என்று அறிவித்ததோடல்லாமல்,
BJPயை சேர்ந்த முன்னாள் பிரதமரான வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளாக டிசம்பர் 25ம் தேதியை கொண்டாடவேண்டும் என்றார்கள்.
அதோடு நல்லாட்சி தினம் என்ற பெயரில் அந்த
கிறிஸ்மஸ் தினத்தில் இந்தியாவில் உள்ள எல்லா பள்ளிகூடங்களிலும்
கட்டுரை போட்டிகள் நடத்தபடவேண்டும் 25ம் தேதியில் அரசாங்க விடுமுறை இனி கிடையாது. அரசாங்க அலுவலர்கள் யாவரும் அன்றைய தினம் அலுவலகம் வந்திருக்க வேண்டும். கிறிஸ்மஸ் தினத்தில்
ரத்ததானம் நடத்தவும், மாரத்தான் போன்ற ஒட்டபந்தயங்களை நடத்தவும் கட்டளையிடப்பட்டுள்ளது.
நாளுக்குநாள் இந்துமத தீவிரவாத இயக்கத்தின் செயல்கள் பல விபரீதங்களை நாட்டில் உண்டாக்க போகிறது என்று அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இந்த செயலுக்கு பிரதமர்.மோடி அவர்கள் பதில் அளிக்கவேண்டும் என்று கூறி
பார்லிமென்ட்டில் போராடினார்கள். அத்தனை போராட்டங்களையும் கவனித்தும்
மோடி அவர்கள் பதில் பேசாமல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தார். எதிர்கட்சிகள் அனைவரும்
பல நாட்கள் பார்லிமென்ட்டை நடக்கவிடாமல் முடக்கினர். இதனால் பல கோடிகள் நஷ்டம், பல நல்ல திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்திய நாட்டுக்கும் பல மாநிலங்களுக்கும் பெரும் நஷ்டத்தை உண்டாக்கின. இவ்வளவு கொந்தளிப்புகள் நடந்தும் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்ட பிரதமர்.மோடி அவர்கள்
இருகிய முகத்துடன் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது அவரின் பிடிவாதத்தையும், இப்படிப்பட்ட மத மாற்றங்களுக்கு தானும் உடந்தையாக இருப்பதைப்போல் காணப்பட்டது என்று
TVயில் இவைகளை கவனித்த இந்திய மக்கள் கூற ஆரம்பித்தாக பேசப்பட்டது. |