அன்று இரவு கூட்டம் முடிந்தபின் நாங்கள் ஒரு டாக்டர் வீட்டில் இரவு உணவு சாப்பிட சென்றபோது
Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் என்னிடம் கூறினார். என்ன டாக்டர் கூட்டம் நடத்துபவர்களிடம் தகராறு செய்தீர்களாம்!, உங்கள் நல்ல எண்ணம் எனக்கு விளங்குகிறது. நீங்கள் கொடுக்கும் மரியாதை எனக்கு புரிகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் பொது ஜனங்களிடம் பிரசங்கம் செய்வதற்கான அட்ராக்ஷன் அல்லது கவர்ச்சி எனக்கு இல்லை. உங்களுக்கு கர்த்தர் அந்த தாலந்தை நிரம்ப கொடுத்திருக்கிறார். மேலும் கேரளா மக்கள் உங்கள் பிரசங்கத்தை கேட்க மிகவும் விரும்புகிறார்கள். ஆகவே இரவு பொது கூட்டத்தில் நீங்கள் பேசும்படியான ஏற்பாட்டை நான்தான் செய்தேன். எனக்கு 10 பேர் கூடினால் போதும், அவர்களுக்கு வேதபாடம் நடத்த சொன்னால் மிக ஆசையாக உற்சாகத்தோடு நடத்துவேன். அதுதான் எனக்கு ஏற்றது என்றார். அதைத்தான் நான் விரும்புகிறேன் என்றார்.
அன்று அவரின் பெரும்தன்மையை அறிந்து அவரின் அந்த தாழ்மையை என் ஊழியத்தில் ஒரு பாடமாக நான் என் மனதில் பதித்துக்கொண்டேன். அன்றுமுதல் பெரிய கூட்டத்தில்தான் பேசுவேன் சிறிய கூட்டம் அல்லது சிறு கிராமமானால் தேதி கொடுக்ககூடாது என்றோ சிறு கூட்டத்தில் நான் பேசமாட்டேன் என்ற சிந்தை என் உள்ளத்தில் உண்டாகாமல், அப்படிப்பட்ட எண்ணம் எனக்குள் வராமல் பார்த்துக்கொள்ள
Dr.தியோடர் அவர்களின் தாழ்மை, கூட்டத்துக்குவரும் மக்களைக்குறித்துள்ள அவரின் கணிப்பு இவைகள் எனக்கு நல்ல முன்மாதிரியாக அமைந்தது.
Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்கு என் பிரசங்கத்தை கேட்க வரும் கூட்டத்தை அல்லது மக்களின் எதிர்பார்ப்பைக்குறித்து
பொறாமை இவருக்கு இல்லை. மோகன் சி.லாசரஸ் அவர்கள் கூறுவதைப்போல்
பொறாமை அவருக்கு இருக்குமானால் என்னை இரவு கூட்டத்தில் அத்தனை பெரிய கூட்டத்தில் நான்தான் பேசவேண்டும் என்று
Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் கட்டாயப்படுத்தியிருப்பாரா?
நாலுமாவடி மோகன். சி.லாசரஸ் குறித்து பாண்டிசேரி ஊழியர் தம்பி.சாம்சன் பால் அவர்கள் எழுதியதைப்போல் இவர்கள் எல்லாம் தங்கள் தவறான உபதேசத்தை மறைக்க அவரின்
தவறை சுட்டிக்காட்டும் மற்ற ஊழியர்களை இவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்ற வார்த்தைகள் மூலம் தன்னையும், தன்
தவறுகளையும் மறைத்துக்கொள்கிறார்கள் என்பது எத்தனை உண்மை!.
நல்ல வசன தெளியுள்ள மக்கள், உண்மையாக மனந்திரும்பி வேத வசனத்தை அறிய ஆசைப்படும் மக்கள், உண்மையாக ஜெபிக்கும் மக்கள் இப்படிப்பட்டவர்கள்
சசோ.சாம்சன் பால், டாக்டர்.புஷ்பராஜ், டாக்டர்.சாம்கமலேசன், டாக்டர்.தியோடர் வில்லியம்ஸ் ஆகியவர்களை விரும்புகிறார்களே என்று உள்ளத்தின் ஆழத்தில்
மோகன் சி.லாசரஸ்க்கு ஏற்பட்ட பாதிப்புதான்.
நாங்கள் பொறாமை பிடித்தவர்கள், குற்றம் சொல்லும் ஆவியை பெற்றவர்கள் என்று எங்களைப்பற்றி அவரை பிரசங்கிக்க வைத்தது. பாவம்! அவர் ஆத்துமாவுக்காக வாசகர்கள் ஜெபித்துக்கொள்ளுங்கள். இவர்
ஜெபத்தில் பொய் தீர்க்கதரிசனம், ஜெபத்தில் பெயர்களை பொய்யாய் அறிவிப்பதிலிருந்து எப்படியாவது இவர்
மனந்திரும்பவேண்டும் என்று அவருக்காக நாம் ஜெபிப்போம். |