கிறிஸ்தவர்களை மதம் மாற்றியதில் உண்மை கிறிஸ்தவர்கள் யாரும் கவலைப்படக்கூடாது. காரணம்
பணத்துக்காக கிறிஸ்துவைவிட்டு இந்து மதத்துக்கு மாறியவர்கள் யாரும்
உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது. பணத்துக்காக மனைவியை விபச்சாரம் செய்ய அனுப்பிய கணவர்மார்களைப்போல்தான் இதுவும். மதம் மாறிய இந்த கிறிஸ்தவர்கள் அங்கும் உண்மையாக இருக்கமாட்டார்கள். இவர்கள் முன்பு கிறிஸ்தவத்தில் இருந்தபோது
போலி கிறிஸ்தவர்களாகத்தான் வாழ்ந்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவ சபைகளில் இல்லாமல் சபையைவிட்டு சீக்கிரம் வெளியேறுவது கிறிஸ்தவ சபைகளுக்கு நல்லது.
குஜராத்திலும், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கர், பீகார், மகாராஷ்ட்ரா, உ.பி போன்ற மாநிலங்களில் நம் மிஷனரிகள் மூலமாக கிறிஸ்து அறிவிக்கப்பட்டார்.
கிறிஸ்து அவர்கள் மனதை மாற்றி, சுபாவத்தைமாற்றி, மதுபானத்தை நிறுத்த வைத்து, மனித கொலைகளையும் இவர்கள் நிறுத்தியதால் அவர்கள் மனசமாதானத்துடன் வாழ்கிறார்கள். இத்தனை காலம் இவர்கள் அனுபவிக்காத கிறிஸ்தவ அன்பின் சுகத்தை இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர்கள் கிறிஸ்தவ சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த மிஷனரியும்,
பணம், கோதுமை, அரிசி எதுவும் இவர்களுக்கு கொடுக்காமலேயே இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இப்போது அத்தனை
ஆதிவாசிகளும், சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரிகளாக மாறி தங்கள் இனத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மனமாற்றத்தை சாட்சியாக அறிவித்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவை மற்ற ஆதிவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
இதுதான் மனமாற்றம்! - இது மதமாற்றம் அல்ல!. கிறிஸ்தவம் ஒரு மதமும் அல்ல!. அது ஒரு மார்க்கம். இயேசு கிறிஸ்துவும்
ஒரு மதத்தை ஸ்தாபிக்க இந்த உலகில் பிறக்கவில்லை. தன்
அன்பை வெளிப்படுத்தவே பிறந்தார். அதுதான் கிறிஸ்மஸ்! டிசம்பர் 25ம் தேதி இயேசுகிறிஸ்து பிறக்கவில்லை. ஆகவே உண்மை கிறிஸ்தவர்களுக்கு டிசம்பர் 25ம் தேதி விடுமுறை இல்லை என்று அரசாங்கம் அறிவித்தாலும் கவலைப்படமாட்டார்கள்.
உண்மை கிறிஸ்தவர்களுக்கு வாழும் நாளெல்லாம் கிறிஸ்மஸ்தான். இதை புரிந்துக்கொண்டவர்கள் யாரையும் எதிர்த்து போராடமாட்டார்கள். இதை
BJP அரசாங்கம் RSS, பஜ்ரங்தள் இயக்கங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்றுதான் பகிரங்கமாக இதை எழுதி அறிவிக்கிறேன்.
அதனால்தான் அன்று இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியரும், தமிழருமான திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கூறினார்.
கிறிஸ்தவர்களை ஒன்றும் செய்யாதிருங்கள். அவர்கள் மூட்டை பூச்சி போன்றவர்கள் அவர்களை நசுக்கினால் ஆயிரம் மூட்டை பூச்சிகளாக வெளிவந்து பெருகுவார்கள் என்றார்.
இயேசுகிறிஸ்து கூறினார். கோதுமை மணி செத்ததேயாகில் நிறைந்த பலன் தரும் என்றார். அந்த அடிப்படையில்தான் இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்க வந்த மிஷனரிமார்கள் தங்களையே கோதுமை மணிகளாக ஆக்கி இந்திய மண்ணில் சுவிசேஷத்துக்காக மரித்து விதைக்கப்பட்டார்கள். பலர் இரத்தசாட்சிகளாக மரித்ததினால்தான் இன்று
கிறிஸ்தவம் இந்தியா முழுவதும் பரவி இந்தியாவுக்கு மிஷனரிகளை அனுப்பிய அமெரிக்க-ஐரேப்பா-ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கே சுவிசேஷம் அறிவிக்கும் இந்திய மிஷனரிகளாக அந்நாடுகளில் பணியாற்றுகின்றனர் என்றால் கிறிஸ்துவின் அன்பின் மகத்துவம் எத்தகையது என்பதை அறிந்து தேவனை துதிப்போம். |