நீதிபதிகளை நியமிக்கும் அதிகார கமிட்டி
நீதிபதிகளுக்குள்ளேயே தெரிந்தெடுக்கப்பட்டு இதுநாள்வரை இயங்கி வந்ததால் ஓரளவு மக்களுக்கு நியாயம் கிடைத்தது. மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை
சுப்ரீம் கோர்ட்(உச்ச நீதிமன்றம்)தான். நீதிபதிகள்மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இழந்துப்போனால் இந்தியாவில் ஊழல் பெருகிவிடும். குற்றவாளி சகல சாட்சிகளும் சரியாக இருந்தாலும், அரசியல்வாதிகள் சிபாரிசுகளால் நீதி கிடைக்காமல் போகும். அப்படித்தான் ராஜபக்ஷேவின் சர்வாதிகாரத்தால் நீதிமன்றத்துக்கு மதிப்பில்லாமல் போனது.
அதுபோல் இந்தியாவிலும் நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. நீதிபதிகள் குழுவே நீதிபதிகளை தெரிந்தெடுக்கும் முறை
BJP அரசில் நீக்கப்பட்டது. இனி அரசியல்வாதிகள் மனது வைத்தால் பணபெட்டிகளுக்கு மயங்கி அரசியல்வாதிகளுக்கு பயந்து குற்றவாளிக்கு சாதமாக தீர்ப்பளிக்கப்படும்.
தமிழ்நாட்டு முதல் மந்திரி.ஜெயலலிதா அவர்களுக்கும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் அதை சுப்ரீம் கோர்ட் மீண்டும் விசாரணைக்கு உத்தரவு கொடுத்து எந்த கண்டிஷனும் இல்லாத ஜாமீன் ஜெயலலிதாவுக்கு வழங்கியது. அப்போது கர்நாடக கோர்டில் 3 முறை நீதிபதிகள் மாற்றப்பட்டார்கள். ஒரு நீதிபதி வேலையைவிட்டே கட்டாய
ஓய்வுப்பெற்றார். அரசாங்க வக்கீல் குற்றவாளிக்கு சாதகமாக மாறிப்போனார். பெட்டிகள் பேசியிருக்கும். நியாயமான நீதிபதி என்று பெயர் பெற்றவர் கூட நீதி பிரள, வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கக்கூடும் என்று கர்நாடகாவில் பேசிக்கொள்கிறார்கள்.
நீதிமன்றம் தனித்து இயங்காமல்போனால் நியாயம் சாகும். நீதி சாகும். குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது.
இப்போதே அதற்கு அடையாளமாக BJPயின் உள்துறை அமைச்சர்
ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரை பயபக்தியோடு தமிழ்நாடு வந்து பேசி போகிறார் என்றால் இவர் பின்னால் நிச்சயம்
பிரதமர்.மோடி அவர்கள் இருப்பார் என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர். |