அதேபோல் இந்தியாவிலும் நிகழலாம்:

நீதிபதிகளை நியமிக்கும் அதிகார கமிட்டி நீதிபதிகளுக்குள்ளேயே தெரிந்தெடுக்கப்பட்டு இதுநாள்வரை இயங்கி வந்ததால் ஓரளவு மக்களுக்கு நியாயம் கிடைத்தது. மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை சுப்ரீம் கோர்ட்(உச்ச நீதிமன்றம்)தான். நீதிபதிகள்மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இழந்துப்போனால் இந்தியாவில் ஊழல் பெருகிவிடும். குற்றவாளி சகல சாட்சிகளும் சரியாக இருந்தாலும், அரசியல்வாதிகள் சிபாரிசுகளால் நீதி கிடைக்காமல் போகும். அப்படித்தான் ராஜபக்ஷேவின் சர்வாதிகாரத்தால் நீதிமன்றத்துக்கு மதிப்பில்லாமல் போனது.

அதுபோல் இந்தியாவிலும் நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. நீதிபதிகள் குழுவே நீதிபதிகளை தெரிந்தெடுக்கும் முறை BJP அரசில் நீக்கப்பட்டது. இனி அரசியல்வாதிகள் மனது வைத்தால் பணபெட்டிகளுக்கு மயங்கி அரசியல்வாதிகளுக்கு பயந்து குற்றவாளிக்கு சாதமாக தீர்ப்பளிக்கப்படும்.

தமிழ்நாட்டு முதல் மந்திரி.ஜெயலலிதா அவர்களுக்கும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் அதை சுப்ரீம் கோர்ட் மீண்டும் விசாரணைக்கு உத்தரவு கொடுத்து எந்த கண்டிஷனும் இல்லாத ஜாமீன் ஜெயலலிதாவுக்கு வழங்கியது. அப்போது கர்நாடக கோர்டில் 3 முறை நீதிபதிகள் மாற்றப்பட்டார்கள். ஒரு நீதிபதி வேலையைவிட்டே கட்டாய ஓய்வுப்பெற்றார். அரசாங்க வக்கீல் குற்றவாளிக்கு சாதகமாக மாறிப்போனார். பெட்டிகள் பேசியிருக்கும். நியாயமான நீதிபதி என்று பெயர் பெற்றவர் கூட நீதி பிரள, வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கக்கூடும் என்று கர்நாடகாவில் பேசிக்கொள்கிறார்கள்.

நீதிமன்றம் தனித்து இயங்காமல்போனால் நியாயம் சாகும். நீதி சாகும். குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது.

இப்போதே அதற்கு அடையாளமாக BJPயின் உள்துறை அமைச்சர் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரை பயபக்தியோடு தமிழ்நாடு வந்து பேசி போகிறார் என்றால் இவர் பின்னால் நிச்சயம் பிரதமர்.மோடி அவர்கள் இருப்பார் என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

ஆலோசனை - ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்:

ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன்.

ஆலோசனைக்கும்-ஜெபத்துக்கும் நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள், முன்பதாகவே நீங்கள் என்னை சந்திக்க விரும்பும் தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு எங்களிடமிருந்து பதில் பெற்றப்பின் அல்லது போனில் தொடர்புகொண்டு சந்திக்கும் நாளை உறுதிப்படுத்திக்கொண்டு வரவும்.

தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக்கொள்ளலாம்.

(தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயலவேண்டாம்.) குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள் ஓய்வு எடுக்கும் நேரமுமாகும்.

அந்த 3 மணி நேரம் எங்கள் தொலைபேசியை ஆஃப் செய்து வைத்து விடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

வட இந்திய ஊழியங்களுக்கு நான் சென்றால் செவ்வாய்கிழமையில் வீட்டில் இருக்கமாட்டேன் என்பதையும் அறியவும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN