மேலும் எல்லா டிவி ஊழியர்களும்,
இவ்வருட தீர்க்கதரிசனம் என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
பால்தினகரன், மோகன் சி.லாசரஸ்ஸின் மூவர் அணிகள் இவர்கள் யாவரும் இவர்களோடு இன்னும் சில சில்லறை தீர்க்கதரிசி ஊழியர்களும் வருடாந்திர தீர்க்கதரிசனம் கூற ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் இந்தியாவைக் குறித்துமட்டும் அல்ல. ஒவ்வொரு உலக நாட்டைக் குறித்தும் தீர்க்கதரிசனத்தை பேப்பரில் எழுதி வைத்து
TVயில் செய்தி வாசிப்பவர்களைப் போல (TV நியூஸ் ரீடர்களைப்போல) வாசிக்க தொடங்கிவிட்டனர்.
மோகன் சி.லாசரஸ் பேப்பர் கையில் வைத்துக்கொண்டு திக்கித்திணறி
TVயில் தீர்க்கதரிசனங்களை ஒன்றன்பின் ஒன்றாய் வாசிப்பதை நானே பார்த்தேன். ஜப்பானுக்கு தீர்க்கதரிசனம் சொன்ன இவர்கள் எல்லாரும் கடந்த சில மாதங்களுக்குமுன் இந்தியாவில்
சட்டீஸ்கர் மாநிலத்தில் மழையால் நதிநீர் பெருகி பல கிராமங்கள் மூழ்கி ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்ததையும்,
காஷ்மீரில் வரலாறு காணாத மழையையும் அதன் காரணமாக பல வாரங்கள் எந்த போக்குவரத்தும் இல்லாமல் போனதால் ஆகார பொட்டலங்களை ஹெலிகாப்டர் மூலமாககூட மக்கள் கைகளில் கிடைக்கத்தக்கதாக சாப்பாட்டு பொட்டலம், குடிநீர், ரொட்டி எதையும் வீசமுடியாமல் கிராமம் முழுவதும் பல நாட்கள் வெள்ளத்தால் முழ்கியிருந்ததே, அதன் அழிவையும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெள்ளத்தில் அடித்துசென்ற மரண செய்திகளையும் இந்த
கள்ளதீர்க்கதரிசிகளுக்கு ஏன் கர்த்தர் காட்டவில்லை?. இப்படிப்பட்ட கேள்வியை மக்கள் உள்ளத்தில் எழாதா? யோசித்துப்பாருங்கள்!.
பால்தினகரனோ, மோகன் சி.லாசரஸோ, சாதுசெல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்கள் அல்லது வேறு யாராவது தமிழ்நாட்டின் ஒரு ஊழியக்காரராவது நதி பெருக்கினால் இந்தியாவில் உண்டான பேரழிவை இதுவரை ஏன் கூறவில்லை?
அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் விவரங்களை தினசரி செய்திதாள்களில் இவர்கள் வாசித்து அதையே தீர்க்கதரிசனம் என்று கூறி மக்களை இன்னும் எவ்வளவுகாலம் ஏமாற்றுவார்கள்?. இதற்கு மேலும் இவர்களை
தீர்க்கதரிசிகள் என்று நம்பும் ஆட்கள் உண்டானால் பொய் சொல்லும் இந்த ஊழியர்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ? அந்த தண்டனை இவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும், இவர்களை நம்புபவர்களுக்கும் உண்டாகும் என்பது நிச்சயம்!. இப்படி நான் எழுதுவதுதினால் இவர்கள் யாராவது திருந்துவார்கள் என்று நினைக்கிறீர்களா? இவர்களும் திருந்தமாட்டார்கள். இவர்களை நம்புகிறவர்களும் திருந்தமாட்டார்கள். வருடாவருடம் ஏமார்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
வருடா வருடம் இவர்களின் வாக்குத்தத்த வசனம் தொடரும்.....
வருடா வருடம் இவர்களின் புதுவருட தீர்க்கதரிசனமும் தொடரும்....
ஜாமக்காரன் வாசக குடும்பத்துக்காக நாங்கள் ஜெபித்தோம். பலருக்கு கர்த்தர் வாசகர்களின் ஆவிக்குரிய தீர்மானத்தின் அடிப்படையிலும் வசனத்துக்கு கீழ்ப்படிந்தாலும் அற்புத சுகத்தை அவர்களுக்கு கர்த்தர் அளித்ததை சாட்சி கடிதங்களின் மூலம் அறிந்தேன். கடிதம் எழுதி அறிவித்தவர்களுக்காகவும் தேவன் அவர்களுக்கு கொடுத்த சுகத்துக்காகவும், அவர்கள் குடும்பத்தில் கர்த்தர் செய்த அற்புதங்களுக்காகவும் தேவனை துதித்தோம்.
கர்த்தரின் வருகையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்வரை தேவகிருபையும், சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். |