வருடாவருடம்
வாக்குதத்த வசனம் என்று கர்த்தர் நமக்கு வசனம் கொடுப்பாரா? அப்படி கர்த்தர் தம் மக்களுக்கு வருடம் ஒரு
வசனம் என்று கொடுப்பது உண்மையானால் ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான வசனம் கொடுப்பாரா? அல்லது ஒவ்வொரு ஊழியருக்கும் தனிதனி வசனம் காண்ப்பிப்பாரா?.
TVயை ஆன் செய்து கிறிஸ்தவ சேனல்களை கண்டால் ஒவ்வொரு ஊழியரும் கூறுவது என்னவென்றால் இந்த வருடம் டிவியை காண்பவர்களுக்கு
வாக்குத்தத்த வசனமாக கர்த்தர் உங்களிடம் கூறசொன்னது என்னவென்றால் என்று ஏதாவது ஒரு வசனத்தை கூறி இப்படித்தான் தங்கள் பொய் அறிவிப்பை கர்த்தர் சொன்னதாக மக்களுக்கு அறிவிக்கிறார்கள்.
நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் மாதிரி மக்களை நாலுமாவடிக்கு வரவழைப்பதைப்போல் இவ்வருட
வாக்குத்தத்த வசனமாக கர்த்தர் எந்த வசனத்தை சொல்லபோகிறார் என்பதை அறிய வேண்டுமானால் பல ஊழியர்கள் அவரவர் இடங்களுக்கு விசுவாசிகளை வரவழைக்கிறார்கள். இந்த ஜனங்களும் அந்த வசனத்தை கர்த்தர்தான் சொல்லப்போகிறார் என்று நம்பி கூட்டம் கூட்டமாய் பஸ் ஏறி பிரயாணப்பட்டு அங்குசென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து விட்டுவருகிறார்கள். இந்த வருடத்துக்குரிய வாக்குத்தத்த வசனம்
நான் உன்னில் மகிமைப்படுவேன் என்று சகோ.மோகன் சி.லாசரஸ் கூறினார்.
இந்த வசனம் 2015ம் வருடத்துக்கு மட்டும்தான். 2016ம் வருடத்துக்கு கர்த்தர் வேறு வசனம் சொல்லுவாராம். காலண்டர் மாற்றுவதுபோல் 2014ம் காலண்டரை தூக்கி எறிந்துவிட்டு 2015ம் வருட காலண்டர் மாட்டுவதுபோல வருடத்துவக்க ஒரு காலண்டர் மாதிரி வருடத்துக்கு
ஒரு வசனம் கர்த்தர் கொடுப்பார் என்றால், என்ன முட்டாள்தனம் இது. இதையும் நம்பி ஆட்கள் ஓடுகிறார்களே!
கர்த்தர் மக்களுக்கு வருடத்தின் முதல் நாள் ஒரு வசனம் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது உண்மையானால் எல்லா ஊழியர்களுக்கும் ஒன்றுபோல ஒரு குறிப்பிட்ட வசனத்தை அறிவிக்கமாட்டாரா?.
இயேசு அழைக்கிறார் விசிறிகள்
பால்தினகரன் மூலமாக கர்த்தர் எங்களுக்கு ஒரு வாக்குத்தத்த வசனம் கொடுத்திருக்கிறார். அதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் நாலுமாவடிக்காரரிடம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்த வசனம் பொய்! என்பார்கள் அல்லது
சாது செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், சாம் ஜெபதுரை இன்னும் சில்லரை தீர்க்கதரிசிகளுக்கு கூறிய வாக்குத்தத்த வசனம் யாவும் பொய்யானது என்று இவர்கள் ஒருவருக்கொருவர் கூறி வசன சண்டையை உருவாக்குவார்களே!. |