RSS இயக்க தலைவர்களில் ஒருவர்
இந்து மதத்தைப்பற்றி கூறியது:

அவர் வேறு யாருமல்ல தமிழ்நாட்டு மக்களும் இந்திய அரசியல்வாதிகளும், நன்றாக அறிந்த பிராமண இதிகாசங்களை நன்கு அறிந்தவரும், அரசியல் விமர்சகரும், மகாபாரதத்துக்கு விளக்க உரை எழுதியவருமான துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவர்களாவார். இவர் நன்கு சட்டம் படித்த ஒரு வக்கீலாவார்.


ஹிந்து மதம்:

வேறொரு மதத்தைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிடவேண்டும் என்ற கட்டளை ஹிந்து மத சாஸ்திரங்கள் எதிலும் இல்லை. சொல்லப்போனால் ஒருவனைப் பார்த்து இவன்தான் இந்து என்று அடையாளப்படுத்த எந்த ஒரு விளக்கமும் ஹிந்து மத சாஸ்திரங்களில் கிடையாது. பல இந்துமத சாஸ்திரங்கள் மேன்மையுள்ளவர்களை சிலரை குறிப்பிட்டு அடையாளம் காட்டி இவன்தான் சிறந்த மனிதன் என்ற விளக்கம் கூற முற்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்டவர்களை ஹிந்துக்கள் என்று யாரும் அழைக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட இந்து மதத்துக்கு வேறு ஒரு மதத்தை சேர்ந்த ஒருவரை எப்படி? எந்த அடையாளத்தை வைத்து? இந்துவாக மாற்றுவது!.

அப்படி ஹிந்துவாக மாற்ற இந்துவேதங்களில் எங்கு எழுதியிருக்கிறது? ஹிந்து என்று கூற என்ன அங்கீகாரம் இருக்கிறது? ஒன்றுமில்லையே?

இப்படி தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் இந்து மதத்துக்கு ஒருவரை மதமாற்றம் செய்ய முனைபவர்கள் வேண்டுமென்றே மத விரோதத்தைத்தான் இந்தியாவில் வளர்க்க முயல்கிறார்கள். சமீபத்தில் இந்தியாவில் ஆக்ரா நகரில் பல முஸ்லீம்கள் ஹிந்துக்களாக மாற்ற நடந்த வைபவம் மேலே நான் குறிப்பிட்ட வகையை சேர்ந்ததே? அதற்கு எல்லா மதத்திலிருந்தும், பார்லிமென்ட்டிலும் எதிர்ப்பு தோன்றியதில் வியப்பு இல்லை. அந்த எதிர்ப்பு நியாயமானதே?.


பகவத்கீதை புத்தகத்தை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும்:

ஹிந்துத்துவாக்காரர்கள் பாபர் மசூதியை இடித்ததின்மூலம் அவர்கள் அயோத்தியை கடித்து, ராமரை கடித்து இப்போது பகவத்கீதையையே கடிக்க வந்துவிட்டார்கள்.

ஆளும் BJP கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் என்பவர் பகவத்கீதையை இந்திய தேசிய புனித நூலாக சட்ட பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறார். இவர்களோடு சிலர் பகவத்கீதை புத்தகத்தை ஒரு மத சார்ப்பற்ற நூல் என்று வாதிடுகிறார்கள். இதை யாரும் கண்டிப்பாக ஏற்க முடியாத அர்த்தமில்லாத வாதமாகும்.

பகவத்கீதையின் பல அத்தியாயங்களில், பல ஸ்லோகங்களில் கிருஷ்ணன் கூறுகிறதாக எழுதியுள்ளதை கவனிக்கவும், அதாவது தன்னை (கிருஷ்ணனை) நம்புகிறவன் மேன்மையடைவான் என்பதை வலியுறுத்தி சொல்கிறதை வாசிக்கிறோம். பக்தியின் சிறப்பை எடுத்து சொல்லப்படுகிறபோதெல்லாம் அது கீதையில் கிருஷ்ணன் அல்லது நாராயணன் மீதான பக்தியைத்தான் வலியுறுத்தி கூறுகிறது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN