பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் வாழும், படித்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ள மாநிலம் என்ற பெயர் பெற்ற கேரளா மாநிலத்தில் 2014 டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆலப்புழா என்ற மாவட்டத்தில் 8 கிறிஸ்தவ குடும்பங்களை சேர்ந்த 30 பேர்களை இந்துக்களாக மாற்றிவிட்டோம் என்று இந்துமத தீவிரவாதிகளான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பகிரங்கமாக அறிவித்து மங்கள விழா நடத்தினார்கள்.

மேலும் 2015 ஜனவரி மாதம் 13ம் தேதி கேரளாவில் கோட்டயம் என்ற ஊரில் 10 கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றும் சடங்கு நடைப்பெற்றது.


குஜராத்திலும் மதமாற்றம் நடைபெறும் படங்கள்

அதேபோல் 2014 டிசம்பர் 21ம் தேதி பிரதமர் மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தில் 225 கிறிஸ்தவர்களை அதே விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இந்துக்களாக மாற்றியதாக அறிவித்தனர். பணம் கொடுத்து இந்துக்களாக இந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்களிடமிருந்த பைபிளை பறித்துக்கொண்டு கீதை புத்தகத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர். இந்த மத மாற்ற நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் வல்சாட் மாவட்டத்தில் உள்ள அர்னாய் என்ற கிராமத்தில் இதற்கான மங்களவிழா நடத்தப்பட்டது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM