பிர 7:14
வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு,
தாழ்வு காலத்தில் சிந்தனை செய்.
மனிதன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்குத் தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மேடு-பள்ளம் உண்டு. நாம் விசுவாசியானாலும், அவிசுவாசியானாலும் உலகத்தில் வாழும் நாட்களில் மரணம், வியாதி, வறுமை, பிரச்சனை ஆகியவைகளை நாம் யாவரும் சந்தித்தேயாக வேண்டும்.
ஆனால் மனம்திரும்புதலின் (இரட்சிப்பின்) அனுபவத்தை பெற்று இயேசுகிறிஸ்துவை நம் உள்ளத்தில் வரவழைத்துவிட்டால் மேலே கர்த்தர் ஏன் இதை எனக்கு அனுமதித்தார் என்று கேள்வி கேட்காமல் பிரச்சனைகளை தாங்கவும், சகிக்கவும் முடியும். மட்டுமல்ல, பிரச்சனைகளின் மத்தியில் தேவனைத் துதிக்கவும் முடியும்.
ஆனால் மனந்திரும்புதலின் அனுபவம் இல்லாதவர்களே பிரச்சனைகளை கண்டு சோர்ந்து போய், கடவுளின் மீது வெறுப்பு கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வேதம் வாசிக்க மனம் வராது, ஜெபிக்க மனம் வராது. சிலர் வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள்.
அதனால்தான் ஞானி மூலம் ஆவியானவர் வாழ்வு காலத்தில் கிடைக்கும் நன்மைகளை சந்தோஷத்தோடும், ஸ்தோத்திரத்துடனும் அனுபவித்து மகிழ சொல்லுகிறார். இந்த வாழ்வு நீண்டு போகாது. திடீரென்று வாழ்க்கையில் தாழ்வு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்காது. |