எந்த கட்சிகளுக்கும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் கொள்கையை நிறைவேற்றதான் கொள்கை அறிவிப்பை கூறுவது வழக்கம்.
BJP அரசின் இந்த செயல்பாடுகள் புதிதல்ல.
தமிழகத்தில் அறிஞர்.அண்ணா அவர்கள் தலைமையில்
தி.மு.க (DMK) ஆட்சிக்கு வராதிருந்தால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்காது. அப்படியே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடும் பெரிய அளவு அதிகரிக்க வாய்பிருந்திருக்காது.
தமிழ்நாட்டில் அன்று ஹிந்தி எதிர்ப்புக்காகவும், ரூபாய்க்கு
ஒருபடி அரிசி என்ற கவர்ச்சி திட்டங்களுக்காகவும் மக்கள்
ஓட்டு போட்டு DMK கட்சியை ஜெயிக்க வைத்தார்கள். அதை தி.மு.க கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தன் கொள்கையும் நிறைவேற்றியும் வைத்தார்கள்.
அதே வழியில்தான் திரு.மோடி அவர்கள் ஒவ்வொரு தேர்தல் கூட்டங்களிலும்
ஹிந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிதான் இப்போது ஆட்சியை பிடித்துள்ளார்கள். அந்த கொள்கைதான் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்துமத கொள்கை திணிக்கப்படுகிறது.
ஆனால் அதுவே மத கலவரத்தையும் உண்டாக்க காரணமாக போகிறது என்பதை இப்போதுதான்
BJPக்கு ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்கவும், பயப்படவும் தொடங்கியுள்ளார்கள்.
கிறிஸ்தவர்களின் ஆலயத்தை இடித்தால்
கிறிஸ்தவர்கள் எதிர்க்கமாட்டார்கள். இப்படித்தான் சாத்வீக ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.
ஆனால் முகமதியர்களின் மத ஸ்தலங்களில்
ஹிந்துத்துவாக்காரர்கள் கை வைக்கும்போதுதான் இந்தியாவில்
இரத்த ஆறு ஓடும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். அதைக்குறித்துதான்
இந்தியர்கள் பயப்படுகிறார்கள்.
பிரதமர்.மோடி அவர்கள் RSS,
VHP, பஜ்ரங்தள் இயக்கங்களை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவின் நிலைமை மிக மோசமாகும்.
உலக சரித்திரத்தில் நாம் காண்பது என்னவென்றால்
ஆட்சி அதிகாரத்தில் யார் அமருகிறார்களோ அவர்கள் எந்த மத நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் நம்பிக்கையை சார்ந்துதான் உலக நாடுகளில் மத மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
உதாரணமாக பிரிட்டிஷ்
அரசர் எட்டாம் ஹென்றி அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபைகளையும்,
போப் ஆண்டவரையும் எதிர்த்துதான் இங்கிலாந்தில்
புரோட்டஸ்ட்டன்ட் திருச்சபைகளை உருவாக்கினார். ஹென்றி ராஜா எடுத்த நிலைபாட்டின் அடிப்படையில் அந்நாட்டு மக்களும் புரோட்டஸ்ட்டன்ட்களாக மாறினார்கள்.
அதேபோல் இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆட்சியை பிடித்தபின்புதான்
இஸ்லாம் மதம், இஸ்லாம் அதிகமாக இந்தியாவில் வேறுரூன்றியது. ஆக சரித்திர சக்கரம் இந்தியாவில் சுழல ஆரம்பித்துள்ளது.
இன்று மிருக பெலத்தோடு BJP ஆளும் கட்சியாக தெரிந்தெடுத்து அந்த
காவி படைகளிடம்தான் இந்தியர்களே ஆட்சியை ஒப்படைத்துள்ளனர்.
இனி நடக்கப்போவதை நம் இந்திய மக்கள் யாவரும் அனுபவித்துதான் தீரவேண்டும். |