இலங்கை 1947ம் ஆண்டில் இந்தியாவைப்போல் சுதந்திரம் பெற்றாலும் மக்களால் ஆளப்படும் குடியரசு நாடாக 1972ம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டது. 1978ம் ஆண்டில்தான் (ஜனாதிபதி) அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தபட்டது. முதல் அதிபர் தேர்தல் 1982ம் ஆண்டுதான் நடைப்பெற்றது. அதுவரை பிரதமர்தான் அதிகாரம் உள்ளவராக இருந்தார்.
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர்
இரண்டுமுறை மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் ராஜபக்ஷே பதவிக்கு வந்தபின் சட்டத்தை மாற்றினார். அரசியலமைப்பு சட்டம் 18வது சட்டப்பிரிவைத்திருத்தி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த புதிய சட்டத்திருத்தம் இவருடைய பதவிக்கே உலை வைத்தது. எதிர்ப்பார்த்தப்படி அவர் ஜெயிக்க முடியவில்லை.
முதல்முறை அதிபராக பதவி ஏற்றதும் விடுதலைப் புலிகளோடு உள்நாட்டு யுத்தம் செய்ய தீவிரம் காட்டினார். அதன் முடிவாக 2009ம் ஆண்டில் வெற்றியும் பெற்றார். அதையே பெரும் வெற்றியாக காட்டி 2010ல் உடனே தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார். ஆனால் மூன்றாவது முறையும் அதே வழியில் பதவி காலம் முடியும் முன்பாக தேர்தல் நடத்தி பெரும் வெற்றி பெறுவோம் என்று பெரிய அளவில் நம்பினார். ஆனால் அது இத்தனை பெரிய தோல்வியை உண்டாக்கும் என்றோ, தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி போடும் என்றோ ராஜபக்ஷே அவர்கள் கற்பனையிலும் சிந்திக்கவில்லை.
இந்த முறை ராஜபக்ஷே தோற்றதற்கு முக்கிய காரணங்கள் திரு.மைத்திரிபாலா சிறிசேனா அவர்களை அதிபர் வேட்பாளராக அறிவித்து அவரை முன் முன்நிறுத்தி அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டன.
ரனில் விக்கிரமசிங்கே, சரத் பொன்சேகா, விஜய குமாரதுங்கா போன்றவர்கள் அனைவரும் ஒன்றாக கூட்டாக இணைந்து மைத்திரி அவர்களை ஆதரித்தனர். கடந்த 9 வருடங்களாக அரசியலைவிட்டு விலகியிருந்த
சந்திரிகாவும் எதிர்கட்சிகளுடன் இணைந்து மைத்திரியை ஆதரித்தார். |