திரு.மோடி அவர்களை காண்பித்து
BJP கட்சி மிருக பெலத்தோடு இந்திய ஆட்சியை பிடித்துவிட்டது.
இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவின் தலை போன்ற மாநிலமாகிய
காஷ்மீரிலேயே BJP என்ற காவி படை காலூன்றிவிட்டது. குஜராத்தில் திரு.மோடி அரசாங்கத்தில்தான் மிக அதிகமான இஸ்லாமியர் கொல்லப்பட்டார்கள்.
பாபர் மசூதியை BJP, VHP, RSS, பஜ்ரங்தள் போன்ற காவி தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமியர் மிகவும் கொலைவெறியுடன் பார்த்த குறிப்பிட்ட
BJP கட்சியை, அதே இஸ்லாமியர்கள்தான் ஓட்டுபோட்டு இன்று ஜெயிக்க வைத்துள்ளார்கள். காரணம் இதுநாள் வரை காஷ்மீரில் ஆட்சி நடத்திய இஸ்லாமியர்களின் கட்சி அந்த காஷ்மீர் மாநில முன்னேற்றத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்ற ஆதங்கம் காரணமாக சிறந்த நிர்வாகி என்ற பெயர் வாங்கிய திரு.மோடி அவர்கள் பிரதமரானால் நம் மாநில முன்னேற்றத்துக்கு உதவுவார் என்ற நம்பிக்கையின் காரணமாக முஸ்லீம் மக்கள் திரு.மோடியின் கட்சியான
BJPக்கு ஓட்டளித்து ஜெயிக்க வைத்தனர். ஆனால் திரு.மோடி (BJP) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று பாரத பிரதமராக ஆட்சி தொடங்கியவுடனே, கட்டவிழ்த்த காசுமூட்டைகளைப்போல்
RSS, BJP, VHP, பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்களில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த 5 வருட
BJP ஆட்சியின் காலத்துக்குள் இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றிவிடவேண்டும் என்று மிக ஆழமாக திட்டமிட்டு மற்ற மதங்களில் உள்ளவர்களை தாய் மதமான
இந்து மதத்துக்கு திரும்பக் கொண்டு வருகிறோம் என்று கூறி இவர்களே ஆதிவாசிகளுக்கு காசு கொடுத்து
மதமாற்றத்தை நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இஸ்லாமியர் - இந்து மதத்துக்கு மாறினால் ஒரு நபருக்கு 6 லட்சம்,
கிறிஸ்தவர் - இந்து மதத்துக்கு மாறினால் ஒரு நபருக்கு 5 லட்சம் என்று மதமாற்றத்துக்கு பெரும் தொகை கொடுக்கப்படுகிறது என்றால் எத்தனை கோடிகள் இந்த மத மாற்ற திட்டத்துக்காக இவ்வளவு பணத்தை இவர்கள் இரகசியமாக ஆங்காங்கு சேமித்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. முதல் மதமாற்றமாக வட இந்தியாவில் உள்ள
ஆதிவாசிகளை குறிவைத்து இவர்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். ஆதிவாசிகளை மதமாற்ற பெருந்தொகை இவர்களுக்கு தேவையாக இருக்கவில்லை.
RSS, BJP, பஜ்ரங்தள் இந்த இயக்கங்கள் மதம் மாற்ற தொடங்கியது, மட்டுமல்லாமல் மற்ற
மத ஆலயங்களை குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்களை இடிக்கவும், தீவைத்து கொளுத்தவும் தொடங்கிவிட்டனர். |