இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள மிகப்பெரிய கிறிஸ்தவ தேவலாயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
St.Sebastians Church கிழக்கு டெல்லியில் டிலிஷ்ட் கார்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. டெல்லி ஆர்ச் பிஷப் அவர்கள் இந்த தாக்குதலைக்குறித்து பிரதமர் திரு.மோடியிடம் தீ வைத்தவர்களை கண்டுபிடித்து விசாரிக்க மனு கொடுத்துள்ளார்.
ஒரு ஆள் டெல்லி ஆலய மாதா சிலையை இடிப்பதை ஆலய கேமராவில் பதிவானதை கடந்த மாதம்
TVயில் காட்டினார்கள். டெல்லி போலீஸ் இதுவரை தீ வைத்தவர்களையோ, கோயிலை இடித்து சேதமாக்கியவர்களையோ கைது செய்யவில்லை.
ஆகவே டெல்லியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து இரவு ஊர்வலமாக மெழுகுதிரியை கொளுத்தி கைகளில் ஏந்தி புறப்பட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இதுவரை டெல்லி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை. |