கேள்வி: சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் கூறும்போது எங்களுக்கு கூடும் கூட்டத்தின் அளவு பெரியது ஆயிரக்கணக்கில் கூடுகிறது. அதனால் எங்களைப்பற்றி குறைக்கூறும் ஜாமக்காரன் போன்ற ஊழியர்களுக்கு பொறாமை அதிகம். ஆகவே அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள் என்றாராம். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: பொறாமை: இரண்டு வியாபாரிகளுக்கு பொறாமை ஏற்படலாம். தன்னைவிட அவர் கடைக்கு ஆட்கள் அதிகம் சென்றால் வருமானம் அவர்களுக்கு கூடினால் மற்ற வியாபாரிக்கு பொறாமை உண்டாகும். இப்படிப்பட்டதை பொறாமை என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நான் வியாபாரி அல்ல. நான் பண லாபம் எதிர்ப்பார்ப்பவன் அல்ல. அப்படியிருக்க மோகன் சி.லாசரஸ்ஸை பார்த்து எனக்கு எப்படி பொறாமை உண்டாகும்? என் ஊழியத்தில் எனக்கு பணக்குறைவோ இதுவரை வந்த லாபத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ பக்கத்து வியாபாரியாக கருதப்படும் ஊழியரைக்குறித்து பொறாமை கொள்ள ஏதுவுண்டு. எனக்குதான் அந்த பிரச்சனையே இல்லையே?

நாலுமாவடிக்காரரைவிட சாய்பாபாவுக்கு கூட்டம் அதிகம், சபரி மலைக்கூட்டம், திருப்பதிக்கு கோடானுகோடி கூட்டம், வேளாங்கண்ணிக்கு கூட்டம், பழனி மலைக்கு போகும் கூட்டம், இவர்களை நினைத்துதான் மோகன் சி.லாசரஸ் திறப்பின் வாசல் ஜெப குழுவோடு இணைந்து மேலே குறிப்பிட்டவர்களை சபித்து அந்த கோவில் தகர்ந்துபோகவேண்டும், தூள் தூளாக போகும் என்று ஜெபிக்கிறாரே அதுதான் பொறாமையின் ஜெபம் ஆகும். மற்றபடி நாலுமாவடிக்கு காணிக்கை அனுப்புவர்கள் எனக்கு காணிக்கை அனுப்புவதில்லை. நாலுமாவடிக்கு போகும் நபர்கள் என் கூட்டங்களுக்கு வருவதில்லை. பிறகு எனக்கு எதற்கு பொறாமை உண்டாகவேண்டும்?.

என் ஊழியம் எப்போதும் போல் கடந்த 51 வருடங்களாக ஒரே மாதிரி ஏற்றமும் - இறக்கமும் இல்லாமல் வெற்றிகரமாக, கடன் இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும்போது நான் எந்த விதத்தில் இவர்களைப்பார்த்து பொறாமை படமுடியும். இவர்கள் கூட்டத்துக்கு போகிறவர்கள் வசனத்தை கேட்க போவதில்லை. சுகத்துக்காக, தங்கள் பெயர் ஜெபத்தில் அழைக்கப்படவேண்டும் என்று எதிர்ப்பார்த்து போகிற வசன தெளிவில்லாத கூட்டம் ஆகும்.

ஆனால் என் கூட்டத்துக்கு வருகிறவர் வேத வசனத்துக்கு இத்தனை ஆழமான அர்த்தம் உண்டா? இவ்வளவு நாள் எனக்கு தெரியாமல் போனதே என்று கூறி வசனத்தை கேட்க பல மைல் பிரயாணம்செய்து நேரில் என்னை சந்தித்து வசன விளக்கங்களை கேட்டு போக வரும் கூட்டம்தான் என்னைத் தேடிவரும். இப்படிப்பட்ட சிறு கூட்டத்தையே நான் விரும்புகிறேன்.

அநேக ஆண்டுகளுக்குமுன் கேராளாவில் குருப்பம்பாடி என்ற இடத்தில் மிகப்பெரிய கூட்டத்தில் பிரசங்கிக்க என்னையும், Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களையும் அழைத்திருந்தார்கள். Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் வேதாகம கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர். அவரின் வேத ஆழம் வேத ஞானம் மிக அற்புதமானது.

ஆனால் அந்த கேரளா கன்வென்ஷனில் பகல் கூட்டத்தில் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் பேசவேண்டும். இரவு பொது கூட்டத்தில் நான் பிரசங்கிக்கவேண்டும் என்று நோட்டீசில் அச்சடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்துபோனேன். ஒருவேளை Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேத ஞானத்தையும் உலக பிரசித்திப்பெற்றவர் என்பதையும் கூட்டம் நடத்துபவர்கள் அறியாமல் போயிருப்பார்களோ என்று நினைத்தேன். அந்த கன்வென்ஷன் நடக்கும் இடத்துக்கு நான் போய் சேர்ந்தவுடன் கன்வென்ஷன் பொறுப்பாளர்களை அழைத்து Dr.தியோடர் வில்லியம்ஸ் என்னைவிட உலக பிரசித்திப்பெற்ற வேத பண்டிதர். ஆட்கள் நிறைய கூடும் இரவு கூட்டத்தில் அவரை பேச வையுங்கள். நான் பகல் கூட்டத்தில் பேசுகிறேன். மேலும் அவர் என் குரு, ஆசிரியர் என்றும் கூறினேன். ஆனால் அவர்களோ இந்த எல்லா ஏற்பாட்டை Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள்தான் எங்களிடம் கூறி அறிவிக்க சொன்னார் என்றார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN