தமிழர்களின் சந்தேகம்:

ராஜபக்கேஷவை தோற்கடித்ததில் தமிழர்கள் சந்தோஷப்பட்டாலும், புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மைத்திரிபாலா அவர்கள் தேர்தல் சமயத்தில் கூறியது: தமிழருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. நான் ஜெயித்தாலும் வடக்கு தமிழகத்தில் உள்ள ராணுவத்தை ஒருகாலும் விலக்கிகொள்ளமாட்டேன் என்ற வார்த்தை தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அதிபரும் ராஜபக்ஷே வழியில்தான் செல்வாரோ என்ற பயத்தை தமிழர் உள்ளத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழர்கள் இப்போது புதிய அதிபரிடமிருந்து எதிர்ப்பார்ப்து என்னவென்றால், ராஜபக்கேஷ மேலும் அவரை சார்ந்துள்ளவர்களின்மேலும் உள்ள போர் குற்ற விசாரணையை நேர்மையாக விசாரிக்கவேண்டும். தமிழர்களை மீண்டும் அவர்களுடைய பகுதிகளில் குடியமர்த்த வேண்டும். தமிழர்களின் விவசாய நிலங்களை அவர்களுக்கே திருப்பி தரவேண்டும். தமிழர்களும், சிங்களர்களும், முஸ்லீம்களும் சமரசமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

அப்படியே மலையக தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியையும் வளமான வாழ்க்கையும் ஏற்படுத்தி தரவேண்டும். மலையக தமிழர்களின் இந்த கோரிக்கை மிக நீண்ட காலமாக கோரிக்கையாகும். எந்த அரசு பொறுப்பேற்றாலும் இவர்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். புதிய அதிபரின் ஆட்சியிலாவது மலையக தமிழர்களுக்கு ஒரு விமோச்சனம் கிடைக்கட்டும்.

புதிய இலங்கை அதிபர்.திரு.மைத்திரிபாலா சிறிசேனா அவர்களுக்கு புதிய ஆட்சியாளர்களுக்கும் ஜாமக்காரன் சார்பில் வாழ்த்து கூறுகிறேன்.

இலங்கை மக்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறியவேண்டும். புத்த பிட்சுக்கள் தங்கள் முக்கிய கொள்கையான அன்பு என்பதை செயலில் காட்ட வேண்டும். ஜெபிப்போம்.


சர்வாதிகாரி ராஜபக்ஷே

ஒரு நாட்டின் தலைமை பொறுப்புள்ள ஒருவருக்கு தேர்தலில் அரிதி பெரும்பான்மை கிடைத்து எதிர்கட்சியே இல்லாமல்போனால் அந்த நபர்தான் சர்வாதிகாரியாக ஹிட்லரைப்போல், முசோலினிபோல் மாறுவார்கள். அப்படித்தான் அதிபர் ராஜபக்ஷே மாறினார்.

எந்த நாட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்தான் கடைசியும் சர்வ அதிகாரமும் சட்ட முடிவு அறிவிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நீதிபதிகள் ஆளும்கட்சியின் பிரதமராலோ, ஜனாதிபதியாலோ இயங்கக்கூடாது. பிரதமர், ஜனாதிபதிகளின் கட்டளை நீதிபதிகளை கட்டுப்படுத்தக்கூடாது. அப்படி கட்டுப்படுத்தினால் நீதிபதிகள் சுதந்திரமாக, தைரியமாக நீதியான தீர்ப்பு அளிக்க முடியாது.

அதிபர்.ராஜபக்ஷேக்கு அந்த ஒழுங்கு பிடிக்கவில்லை. தான் கூறுவதுபோல் தலைமை நீதிபதியாக இருந்த ஷிரானி பண்டாரநாயக் தீர்ப்பளிக்கவில்லை என்பதால் கோபமுற்று ஊழல் குற்றசாட்டு கூறவைத்து தலைமை நீதிபதி பதவியைவிட்டு நீக்கிவிட்டு, தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும் நீதிபதி மோகன் பெரீஸ் அவர்களை பதவியில் அமர்த்தினார். அப்போது யாரும் அதை எதிர்த்து கேள்விகேட்க முடியவில்லை. இதெல்லாம் சர்வாதிகாரி என்ற திமிர் ஆகும்.

ராஜபக்ஷே அதிபர் பதவியிலிருந்து தோற்றுபோய் பதவி விலகியவுடன் இலங்கையில் உள்ள அனைத்து வக்கீல்களும் ராஜபக்கேஷவால் நியமிக்கப்பட்ட நீதிபதி.மோகன் பெரீஸ் அவர்களை பதவி விலகவேண்டும் என்று நூற்றுக்கணக்கான வக்கீல்கள் கடந்த மாதம் இலங்கை கொழும்பில் கூடி போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN