ராஜபக்கேஷவை தோற்கடித்ததில் தமிழர்கள் சந்தோஷப்பட்டாலும், புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும்
மைத்திரிபாலா அவர்கள் தேர்தல் சமயத்தில் கூறியது: தமிழருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.
நான் ஜெயித்தாலும் வடக்கு தமிழகத்தில் உள்ள ராணுவத்தை ஒருகாலும் விலக்கிகொள்ளமாட்டேன் என்ற வார்த்தை தமிழர்களுக்கு
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அதிபரும் ராஜபக்ஷே வழியில்தான் செல்வாரோ என்ற பயத்தை தமிழர் உள்ளத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இப்போது புதிய அதிபரிடமிருந்து எதிர்ப்பார்ப்து என்னவென்றால்,
ராஜபக்கேஷ மேலும் அவரை சார்ந்துள்ளவர்களின்மேலும் உள்ள
போர் குற்ற விசாரணையை நேர்மையாக விசாரிக்கவேண்டும். தமிழர்களை மீண்டும் அவர்களுடைய பகுதிகளில் குடியமர்த்த வேண்டும். தமிழர்களின் விவசாய நிலங்களை அவர்களுக்கே திருப்பி தரவேண்டும்.
தமிழர்களும், சிங்களர்களும், முஸ்லீம்களும் சமரசமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
அப்படியே மலையக தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியையும் வளமான வாழ்க்கையும் ஏற்படுத்தி தரவேண்டும். மலையக தமிழர்களின் இந்த கோரிக்கை மிக நீண்ட காலமாக கோரிக்கையாகும். எந்த அரசு பொறுப்பேற்றாலும் இவர்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். புதிய அதிபரின் ஆட்சியிலாவது மலையக தமிழர்களுக்கு ஒரு விமோச்சனம் கிடைக்கட்டும்.
புதிய இலங்கை அதிபர்.திரு.மைத்திரிபாலா சிறிசேனா அவர்களுக்கு புதிய ஆட்சியாளர்களுக்கும் ஜாமக்காரன் சார்பில் வாழ்த்து கூறுகிறேன்.
இலங்கை மக்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறியவேண்டும். புத்த பிட்சுக்கள் தங்கள் முக்கிய கொள்கையான அன்பு என்பதை செயலில் காட்ட வேண்டும். ஜெபிப்போம். |