குறிப்பிட்ட ஜாதியில் பிறந்து வளர்ந்தவன் அந்த ஜாதிக்குரியவன் என்ற அடிப்படையில்தான் ஜாதி சான்றிதழ் அளிக்கப்படுகிறது. எந்த ஜாதியில் உள்ளவனும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவன் என்று அழைக்கப்படலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் அல்லது முஸ்லீம் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் சேருகிறேன் என்றால் சட்டப்படி அரசாங்கமும் அதை அனுமதிக்காது. ஆகவே தாய் மதத்துக்கு மாற்றுகிறேன் என்று கூறும் இந்த தீவிரவாதிகள் இந்திய மக்களிடம் ஜாதி சான்றிதழ் வாங்கி தருகிறேன் என்று மக்களை மிகவும் ஏமாற்றுகிறார்கள்.


அவிசுவாசி பிரிந்துப்போனால் போகட்டும்: 1 கொரி 7:14.

கிறிஸ்தவர்கள் பலர் இந்து மதத்துக்கு மாறிவிட்ட செய்திகளை வாசித்தீர்கள். அது நல்ல செய்தியாகும். சபையில் விசுவாசிகள் மாத்திரம் அதாவது உண்மையான கிறிஸ்தவர்கள்மட்டும் நம் சபையில் இருந்தால் போதும்.

கிறிஸ்தவர்கள் என்று பெயர்வைத்துக்கொண்டு ஜெபத்தில் என் பெயரை கூப்பிடமாட்டார்களா என்று எதிர்பார்க்கிற இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் குறிக்கேட்கும் இந்துக்கள் மாதிரியாகும். அப்படிப்பட்டவர்களும், ஜெபத்தில் கர்த்தர் சொல்ல சொன்னார் என்றும், கர்த்தர் ஜெபத்தில் காண்பித்தார் என்பவர்களும் தானாகவே இந்து மதத்துக்கு போய்விடுவது கிறிஸ்தவ மக்களை காப்பாற்றியதற்குச் சமம். இப்படிப்பட்டவர்களை RSS, பஜ்ரங்தள் ஆட்கள் தங்கள் இந்து மதத்துக்குக் கூட்டி சென்றால் அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். காரணம் இப்படி பகிரங்கமாக மேடையில் பொய்பேசும் இப்படிப்பட்ட ஊழியர்கள் இருந்தால் என்ன? போனால் என்ன?. அதுபோல் சாட்சியில்லாத பிஷப்மார்கள், சபை பணத்தை திருடும் சபை பொறுப்பாளர்கள், டையோசிஸ் நிர்வாகிகள் யாவரும் இந்து மதத்துக்கே திரும்பி போய்விட்டால் சபைகள் உருபட வாய்ப்புண்டாகும். ஆகவேதான் கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றும் RSS, VHP, BJP, பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தமிழ்நாட்டு கள்ளதீர்க்கதரிசிகள்:

2014 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி இமயமலையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் 1500 கிராமங்கள் முழுவதையும் வெள்ளம் அடித்து சென்றது. இன்று அந்த கிராமங்கள் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெள்ளம் கொண்டுபோய்விட்டது. குடும்பம் முழுவதும் வெள்ளம் அடித்து சென்றது. இத்தனை பெரிய இழப்பைக்குறித்து வானிலை அறிவிப்பு நிலையம் எச்சரித்தது. ஆனால் நம் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு இந்த கிராமங்களின் மிகப்பெரிய அழிவை கர்த்தர் ஏன் காட்டவில்லை?. ஒருவேளை கர்த்தர் இவர்களுக்கு காட்டியிருப்பார். ஆனால், அப்போது இவர்கள் ஜப்பான், இந்தோனிஷ்யா அழிவு நிலவரங்களை கவனிக்க போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்போதுதானே அடுத்த வருட தீர்க்கதரிசனத்தில் இந்த உலக நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறமுடியும்.

தந்திர ஜெபம்: கர்த்தர் இன்று எல்லா விதமான வியாதிகளையும் சுகமாக்க போவதாக கூறினார் என்று இந்த கள்ள ஊழியர்கள் பொதுவாக ஜெபத்தில் கூறிவிட்டால் போதும். வயிற்றுவலி, தலைவலி, கேன்சர், எய்ட்ஸ், சர்க்கரை வியாதி இப்படிப்பட்ட வியாதியஸ்தர்கள் எல்லாம் சுகமானதாக சாட்சி சொல்ல மேடை ஏறலாமே? எல்லா வியாதியையும் சுகமாக்குவேன் என்று கர்த்தர் கூறியபடி சகோதரன் ஜெபித்தபோது மேலே குறிப்பிட்ட அத்தனை வியாதியஸ்தர்களும் சாட்சி கூறினால் மிக பொருத்தமாக இருக்குமே!. மொத்த பிரார்த்தனை, மொத்த சுகம் (Total Healing) இது கேட்க நன்றாக இருக்கிறதல்லவா?.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN