கிறிஸ்தவர்கள் பலர்
இந்து மதத்துக்கு மாறிவிட்ட செய்திகளை வாசித்தீர்கள். அது நல்ல செய்தியாகும். சபையில் விசுவாசிகள் மாத்திரம் அதாவது
உண்மையான கிறிஸ்தவர்கள்மட்டும் நம் சபையில் இருந்தால் போதும்.
கிறிஸ்தவர்கள் என்று பெயர்வைத்துக்கொண்டு ஜெபத்தில் என் பெயரை கூப்பிடமாட்டார்களா என்று எதிர்பார்க்கிற இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள்
குறிக்கேட்கும் இந்துக்கள் மாதிரியாகும். அப்படிப்பட்டவர்களும், ஜெபத்தில்
கர்த்தர் சொல்ல சொன்னார் என்றும், கர்த்தர் ஜெபத்தில் காண்பித்தார் என்பவர்களும் தானாகவே இந்து மதத்துக்கு போய்விடுவது கிறிஸ்தவ மக்களை காப்பாற்றியதற்குச் சமம். இப்படிப்பட்டவர்களை
RSS, பஜ்ரங்தள் ஆட்கள் தங்கள் இந்து மதத்துக்குக் கூட்டி சென்றால் அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். காரணம் இப்படி பகிரங்கமாக மேடையில் பொய்பேசும் இப்படிப்பட்ட ஊழியர்கள் இருந்தால் என்ன? போனால் என்ன?. அதுபோல்
சாட்சியில்லாத பிஷப்மார்கள், சபை பணத்தை திருடும் சபை பொறுப்பாளர்கள், டையோசிஸ் நிர்வாகிகள் யாவரும் இந்து மதத்துக்கே திரும்பி போய்விட்டால் சபைகள் உருபட வாய்ப்புண்டாகும். ஆகவேதான் கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றும்
RSS, VHP, BJP, பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களுக்கு நன்றி கூறுகிறேன். |