நீதிபதி.சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:
பீதர் மாவட்டம் ஹீல்சூரில் உள்ள ஸ்ரீகுரு பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கபட்டேன். எனது பதவி காலம் முடிவதற்குள் ஸ்ரீ பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவியில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ.20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு ஸ்ரீ பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என்னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.
கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட்டார். இது குறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ.5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்து நாளிதழ் - பெங்களுரு. |