வேறு சிலர் ஜெபத்தில் கூறும்போது கர்த்தர் இப்போது
தெளிவாக காண்பிக்கிறார், இப்போது தெளிவாக பேசுகிறார் என்கிறார்கள். இதுவும் மேலே வாசித்ததைப்போல்
போலித்தனமான வார்த்தையாகும். இதற்குமுன் ஜெபத்தில் காட்டிய மற்ற பெயர்கள், வியாதிகள் பெயர்கள் யாவும்
மங்கலாக தெளிவில்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்போது
தெளிவாக காணப்பிக்கிறார், தெளிவாக கூறினார் என்று இவர்கள் கூறினால் முன்பு கூறியது காண்பிக்கப்பட்டது எதுவும்
தெளிவற்றது என்பது விளங்குகிறதல்லவா?.
என்னவோ இந்த கூட்டத்தையும், இவர்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்களை நம்பி காணிக்கை அனுப்பும் கூட்டமும் இருக்கிறது. இவர்கள் யாவரும்
தெளிவில்லாதக் கூட்டம் என்பது விளங்குகிறது. இப்படிப்பட்ட தெளிவில்லாத ஊழியர்களை ஒரு சில கிறிஸ்தவ மக்கள் நம்புகிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய?. |