அவர் உபயோகித்த வார்த்தையையே தலைப்பாக்கி யாழ்பாண தமிழர்கள் துண்டு பிரதி அச்சடித்து வெளியிட்டார்கள். அதில் எழுதப்பட்டதாவது:
எதை மறப்பது பிசாசே!, என் கணவனை, பிள்ளைகளை, பிறந்த குழந்தைகளையும் கொன்றதை மறக்கவா? கைகளை இழந்து, கண்களை இழந்து, கால்களை இழந்து, வாழ்க்கையையே முடமாக்கினீர்களே! அவைகளை மறக்கவா? தட்டிக்கேட்கவும் மனிதர்கள் இல்லாத மயானபூமியாக யாழ்பாணத்தை மாற்றி எங்கள் பெண்டினரை கற்பழித்து கெடுத்ததை மறக்கவா? எங்களுக்காக இந்தியா நாடு கட்டிக் கொடுத்த வீட்டில் சிங்களவர்களை குடியமர்த்தி எங்களை முள்வேலிக்குள் இன்னும் அடைத்து வைத்திருக்கிறீர்களே அவைகளை மறக்கவா? எதை மறக்க சொல்கிறீர்கள்?.
தமிழர்களின் உள்ள குமுறலாக கொப்பளித்த மரண வேதனையுள்ள இந்த கேள்விகள் ராஜபக்ஷே அடிவயிற்றை கலக்கின? அப்போதே
தான் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்து கொண்ட ராஜபக்ஷே தனக்கு விசுவாசமான ராணுவத் தலைவர்களில் சிலரை இரகசியமாக அழைத்து தேர்தலில் தோல்வியுற்றால் கூலிபடைகளை கொண்டு செயற்கையான கலவரத்தை கொளும்பு நகரில் உண்டாக்கி அதையே காரணம் காட்டி
ராணுவ ஆட்சியை கொண்டுவந்து பாகிஸ்தானைப்போல் ராணுவ சர்வாதிகாரியாக சில காலம் நாட்டை ஆளலாம் என்று திட்டமிட்டதை இந்திய இரகசிய உளவாளிகள் இலங்கை எதிர்கட்சி தலைவர்களுக்கு செய்தியாக அறிவித்து இலங்கையில் ராணுவ ஆட்சி வராமல் தடுத்தார்கள்.
தோல்வி செய்தி கேட்டவுடனே ராஜபக்ஷே இலங்கையைவிட்டு ஓட நினைத்தார். இயலவில்லை. எதிர்கட்சியினர் மிக கவனத்துடன்
ராஜபக்ஷே குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்ததால் திட்டம் தோல்வியுற்றது.
மேலும் தன் சிங்கள இனத்தினரால் தன் உயிருக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை அறிந்து எதிர்கட்சியின் அதிபர் பதவி வேட்பாளருக்கும், பிரமதர் பதவி வேட்பாளருக்கும் செய்தி அனுப்பி தன் உயிருக்கு பாதுகாப்பு தருவதானால் அதிபர் மாளிகையிலிருந்து சொந்த வீட்டுக்கு எந்த பிரச்சனையும் உண்டாக்காமல் வெளியேறுவதாக வாக்களித்தார். அப்படியாக அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு அதே நாள் அதிகாலையிலேயே அதிபர் மாளிகையிலிருந்து சத்தமில்லாமல் வெளியேறினார். |