அன்பின் இரட்சகர் இன்றும், என்றும் உங்களுடனும், உங்கள் குடும்பத்துடனும் தங்கித் தாபரிப்பாராக. ஆதரிப்பாராக.
அன்பரின் பணியில் உங்கள் சகோதரன்..................
எமில் ஜெபசிங்.
(நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும், நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். சங் 90:12,14.)
ஜாமக்காரன்: சகோ.எமில் தன் பத்திரிக்கையில் ஆசிரியர் குறிப்பில் ஆலோசனையாக எழுதியதைப்போல் அவரும் தன் ஓட்டத்தை வெற்றிகரமாக
ஓடி முடித்துவிட்டார்.
இதை வாசிக்கும் நம் ஓட்டமும் நடையும் ஓயப்போகும் காலம் எல்லாருக்கும் வரும் அப்போது நம்
ஓட்டத்தின் முடிவு. சகோ.எமிலைப்போல் வெற்றிகரமானதாக அமையுமா? என்பதை தற்பரிசோதனை செய்து நம்
ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்க ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வினாடியும் ஆயத்தமாக இருப்போம். ஆமென்.
மேலே சகோ.எமில் FMPB-யை விட்டு விலகியபின் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கையில் வெளிவந்த எமில் எழுதிய செய்தியை வாசித்தீர்கள். எமில் நினைத்தப்படி பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த அவரால் இயலவில்லை. பணம் பெரும் பிரச்சனையாக இருந்தது. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில்தான்
EFI பொது காரியதரிசி சகோ.ஜான் ரிச்சர்ட் அவர்கள்
சகோ.எமிலை உலகமெல்லாம் தொடர்பு கொள்ளும் சர்வதேச நிறுவனமான
TWR (Trans World Radio) ஊழிய நிறுவனத்தின் தெற்கு ஆசியா முழுவதற்கும் இயக்குனராக (டைரக்டராக) பொறுப்பேற்க்கவைத்தார்கள்.
உலக வானொலி ஊழியத்தின் பொறுப்பெடுத்தபோது
FMPB-யில் உள்ள சிலர் எமில் தன் மிஷனரி அழைப்பை இழந்துவிட்டு
பணத்தின் பின்னே வானொலிக்கு போய்விட்டார் என்று புரளி கிளப்பினர். ஆனால் சகோ.எமிலோ தன்னை கர்த்தர் பாரத தேசத்துக்காக கோதுமை மணியாக மரிக்க திட்டமிட்டு அழைத்தார். அந்த அழைப்பு மாறக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். ஆரம்பத்தில் எமில் தன் மிஷனரி அழைப்பை மறந்ததுபோல மற்றவர்களுக்கு காணப்பட்டாலும்
கிறிஸ்துவின் சுவிசேஷ செய்திகள் இந்தியாவின் சுமார் 300 மொழிகளில்
வானொலிமூலம் வெளிவந்து பட்டி தொட்டிகளிளெல்லாம் சுவிசேஷ செய்தி கேட்கப்பட்டது. காடுகளுக்குள்
பேட்டரி போட்ட ரேடியோ அறிமுகப்படுத்தப்பட்டது எல்லா மாநிலத்துக்கும் குறிப்பாக மிஷனரிகள் போகமுடியாத இடங்களிலெல்லாம் இயேசுவே தெய்வம் என்று வானொலிமூலம் அறிவிக்கப்பட்டதை கிராமவாசிகள் கேட்டார்கள். அவர்களிடமிருந்து கடிதங்கள் குவிந்தன. இப்போது அவர்களுக்கு கடிதம் எழுதி பதில் கூறுவதைவிட
கடிதம் எழுதியவர்களை நேரிலேயே சந்திக்க மிஷனரிகளை அனுப்பும் திட்டம் உருவானது. கர்த்தர்
எமிலை எதற்காக கம்யுனிஸ்ட் கட்சியிலிருந்து மிஷனரி பணிக்கு அழைத்தாரோ அந்த அழைப்பின்படி அதே மிஷனரி ஊழியத்தில்
மறுபடியும் எமிலை கர்த்தர் நிறுத்தினார். வாசல் திறக்கப்பட்டது.
விஷ்வவாணி என்ற பெயரில் மிஷனரி பணி தொடங்கப்பட்டது.
FMPB-க்கு சமமாக ஆயிரக்கணக்கில் மிஷனரிகள் விஷ்வவாணி மூலமாக அனுப்பப்பட்டார்கள். சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. ஆலயங்கள் கட்டப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் அனைத்து சபைகளும்
எமிலின் விஷ்வவாணியை FMPB-யைவிட பெரும் அளவு தாங்க தொடங்கிவிட்டனர். |