கிங்ஸ்லி தன் பத்திரிக்கையில் எழுதிய அவருடைய பாஷையில் வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவந்துவிட்டார்கள் என்று எழுதினாரே ஏதோ 10 அல்லது 20 நபர்கள் ஓடிவந்ததுபோல் அல்ல. முதல் மிஷனரிகளாக அபிஷேகம் செய்யப்பட்ட சகோ.ஹாரிஸ் ஹில்டனும், நானும், சகோ.ஏசாவும் ஆக மூன்று பேருமே பணம் இல்லாத சூழ்நிலையில், 3 நாட்கள் பட்டினி கிடந்த சூழ்நிலையியில் FMPB ஸ்தாபனத்திலிருந்து குறிப்பாக சகோ.எமிலிடமிருந்து பதில் ஏதும் வராததால் செய்தவறியாது டேனிஷ்பேட்டைக்கு திரும்பினோம். ஊழியத்தை விட்டுவிட்டு பின்னிட்டு ஓடிவரவில்லை. தொடர்ந்து ஊழியம் செய்வது எப்படி? எங்களுக்கு சாப்பிட தொடர்ந்து உதவி கிடைக்குமா? என்பதை அறியவும் அறிவிக்கவுமே திரும்பினோம். அன்றைய கால கட்டத்தில் எக்ஸ்பிரஸ் லெட்டர் என்று தபால்துறையில் ஒரு கவர் விற்பார்கள். இப்போதுள்ள ஸ்பீடு போஸ்ட்போல அந்த கடிதம் தாமதமில்லாமல் உரியவரிடம் சேர்பிக்கப்படும்.

பெரியமலையின் மிஷனரிகளான எங்களுக்கு பணம் கிடைக்காத நிலையை சகோ.பி.சாம், டாக்டர்.சாம்கமலேசன், டாக்டர்.டேனியல், Rev.மோகன் (அன்று அவர் ஆடிட்டர் ஆக சென்னையில் பணிபுரிந்தார்.) சகோ.எமில் ஆகியவர்களுக்கு எக்ஸ்பிரஸ் லெட்டர் எழுதி நிலையை அறிவித்தோம். யாரிடமிருந்தும் பதில் ஏதும் வரவில்லை. குறிப்பாக FMPB-யின் பொது செயலர் எமிலிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆனால் ஒரே ஒருவர்மட்டும் எங்களுக்கு பதில் கடிதம் எழுதினார். அவர் டாக்டர்.டேனியல் அவர்கள் ஆவார். அந்த கடிதம் அது காய்ந்த இருதயத்தோடு இருந்த எங்களுக்கு பெரும் ஆறுதலையும், பெலத்தையும் கொடுத்தது.

கிங்ஸ்லி அவர்கள் அவர் பாஷையில் எழுதியதுபோல் யாரும் வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவரவில்லை. மிஷனரிகளான நாங்கள் இருவரும் மட்டுமே திரும்பிவந்தோம். சில வாரத்தில் பணநிலைமை சரியானது. மறுபடியும் மிஷனரி ஊழியம் தொடர்ந்தது. ஆனால் நான் மட்டும் பெரியமலை போகவில்லை. சகோ.ஹாரிஸ் ஹில்டனும், வேறு இரண்டு நபர்களும் மலை ஊழியம் தொடர்ந்தார்கள்.(மற்ற விவரங்கள் பிறகு எழுதுவேன்).

தம்பி.கிங்ஸ்லிக்கு மனதில் என்மேல் உண்டான வெறுப்பு காரணமாக வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவந்தார்கள் என்று எழுதவைத்தது. இத்தனைக்கும் சகோ.கிங்ஸ்லியை நான் பார்த்தும் கிடையாது, பழகியதும் கிடையாது. அப்படியிருக்க என்மேல் அவருக்கு ஏன் வெறுப்பு உண்டானது?.


கிங்ஸ்லிக்கு என்மேல் ஏற்பட்ட வெறுப்புக்கு இரண்டாவது காரணம்:
FMPB-க்கு புதிய பொது செயலர் தெரிந்தெடுப்பு:

சகோ.சகோ.பேட்ரிக் ஜாஷ்வாவுக்கு பின் அடுத்த பொதுசெயலர் யார்? ஜெபக்குழு தலைவர்களின் அபிப்ராயம் கேட்கப்பட்டது. இரண்டு நபர்களை முன் வைத்து 1).சகோ.கிங்ஸ்லி, 2).சகோ.கிருபாகரன் ஜெபகுழு தலைவர்களின் பெரும்பாலானோர் சகோ.கிருபாகரனை தெரிந்தெடுக்கலாம் என்றார்கள். தூத்துக்குடி போன்று இன்னும் சில பகுதிகளில் உள்ள ஜெபகுழு தலைவர்களில் சிலர் சகோ.கிங்ஸ்லியை சுட்டிக்காட்டினார்கள். ஆனால் பெரும்பாலான மிஷனரிகள் சகோ.கிருபாகரன் பொதுசெயலராக வருவதையே விரும்பினார்கள். அதற்கு சில காரணம் உண்டு. மிஷனரிகள் பலர் எழுதிய கடிதத்தில் அந்த காரணங்களை குறிப்பிட்டுள்ளனர். பணிவு, தாழ்மை, அணுகுமுறை ஜெபவாழ்க்கை பிரசங்கதிறன், எழுத்துதிறன், ஆங்கில அறிவு, முக்கியமாக நிர்வாகத்திறன் இவைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு தகுதிகளைத்தவிர மற்ற அனைத்து தகுதிகளும் சகோ.கிருபாகரனுக்கு பொருந்துகிறது. மேலும் FMPB-யில் அனைத்து பணித்தளத்திலும் நேரிடையாக சென்று அறிந்த அனுபவம் சகோ. கிருபாகரனுக்கு உண்டு. கிருபாகரன் அவர்கள் கால் வைக்காத பணிதளமே இல்லை என்றால் அது மிகையாகாது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN