கிங்ஸ்லி தன் பத்திரிக்கையில் எழுதிய அவருடைய பாஷையில் வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவந்துவிட்டார்கள் என்று எழுதினாரே ஏதோ 10 அல்லது 20 நபர்கள் ஓடிவந்ததுபோல் அல்ல.
முதல் மிஷனரிகளாக அபிஷேகம் செய்யப்பட்ட சகோ.ஹாரிஸ் ஹில்டனும், நானும், சகோ.ஏசாவும் ஆக மூன்று பேருமே
பணம் இல்லாத சூழ்நிலையில், 3 நாட்கள் பட்டினி கிடந்த சூழ்நிலையியில்
FMPB ஸ்தாபனத்திலிருந்து குறிப்பாக சகோ.எமிலிடமிருந்து பதில் ஏதும் வராததால் செய்தவறியாது
டேனிஷ்பேட்டைக்கு திரும்பினோம். ஊழியத்தை விட்டுவிட்டு
பின்னிட்டு ஓடிவரவில்லை. தொடர்ந்து ஊழியம் செய்வது எப்படி? எங்களுக்கு சாப்பிட தொடர்ந்து உதவி கிடைக்குமா? என்பதை அறியவும் அறிவிக்கவுமே திரும்பினோம். அன்றைய கால கட்டத்தில்
எக்ஸ்பிரஸ் லெட்டர் என்று தபால்துறையில் ஒரு கவர் விற்பார்கள். இப்போதுள்ள
ஸ்பீடு போஸ்ட்போல அந்த கடிதம் தாமதமில்லாமல் உரியவரிடம் சேர்பிக்கப்படும்.
பெரியமலையின் மிஷனரிகளான எங்களுக்கு பணம் கிடைக்காத நிலையை சகோ.பி.சாம், டாக்டர்.சாம்கமலேசன், டாக்டர்.டேனியல்,
Rev.மோகன் (அன்று அவர் ஆடிட்டர் ஆக சென்னையில் பணிபுரிந்தார்.) சகோ.எமில் ஆகியவர்களுக்கு எக்ஸ்பிரஸ் லெட்டர் எழுதி நிலையை அறிவித்தோம். யாரிடமிருந்தும் பதில் ஏதும் வரவில்லை. குறிப்பாக
FMPB-யின் பொது செயலர் எமிலிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆனால் ஒரே ஒருவர்மட்டும் எங்களுக்கு பதில் கடிதம் எழுதினார். அவர் டாக்டர்.டேனியல் அவர்கள் ஆவார். அந்த கடிதம் அது காய்ந்த இருதயத்தோடு இருந்த எங்களுக்கு பெரும் ஆறுதலையும், பெலத்தையும் கொடுத்தது.
கிங்ஸ்லி அவர்கள் அவர் பாஷையில் எழுதியதுபோல் யாரும் வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவரவில்லை. மிஷனரிகளான நாங்கள் இருவரும் மட்டுமே திரும்பிவந்தோம். சில வாரத்தில் பணநிலைமை சரியானது. மறுபடியும் மிஷனரி ஊழியம் தொடர்ந்தது. ஆனால் நான் மட்டும் பெரியமலை போகவில்லை. சகோ.ஹாரிஸ் ஹில்டனும், வேறு இரண்டு நபர்களும்
மலை ஊழியம் தொடர்ந்தார்கள்.(மற்ற விவரங்கள் பிறகு எழுதுவேன்).
தம்பி.கிங்ஸ்லிக்கு மனதில் என்மேல் உண்டான
வெறுப்பு காரணமாக வந்த வேகத்தில் பின்னிட்டு ஓடிவந்தார்கள் என்று எழுதவைத்தது. இத்தனைக்கும் சகோ.கிங்ஸ்லியை நான் பார்த்தும் கிடையாது, பழகியதும் கிடையாது. அப்படியிருக்க என்மேல் அவருக்கு ஏன் வெறுப்பு உண்டானது?. |