ஜாமக்காரன்:
2013 டிசம்பர் மாத ஜாமக்காரனில் பக்கம் 24ல் பிழையுள்ள பாட்டின் வரிகள் என்ற தலைப்பில்
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவன் யார்? என்ற பாடலில்
"தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே" என்ற வார்த்தை பிழையானது. பரலோகத்தில் பசியுமில்லை, ஆகாரமும் தேவையில்லை. அங்கு வியாதியில்லை என்றெல்லாம் வேதம் போதிக்கிறது. ஆகவே தூதர்கள் சாப்பிட உணவை கர்த்தர் தன் ஜனங்களுக்கு வனாந்திர யாத்திரையில் கொடுத்திருக்கமுடியாது. சங் 78:25ல் குறிப்பிடும்
தூதர்களின் அப்பம் என்று குறிப்பிடுவது பரலோகத்தில் சாப்பிட்ட அப்பம் அல்ல. அதன் அர்த்தம் வேறு என்று எழுதினேன். நான் சுட்டிக்காட்டிய தவறை வாசித்து மிகவும் புகழ்ந்தார்கள். சிலர் அதை மறுக்கவும் செய்தார்கள். இப்படி பிழையுள்ள பாடல்களை நாம் அர்த்தம் புரியாமலே இதுவரை பாடிக்கொண்டு இருக்கிறோம். உதாரணத்துக்கு இன்னும் சில பாடல்களை தொகுத்து அளிக்கிறேன். பாடல்களை எழுதி அனுப்பியவர்களுக்கு நன்றி.
பாட்டு – 1.
யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள், எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன்
யெகோவா சாலோம், யெகோவா ஷம்மா, யெகோவா
ரூபா, யெகோவாராப்பா
எல்ரோயிருக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கமெல்லாம் தீர்த்திரையா
நான் தாகத்தோடு வந்த போது ஜீவதண்ணீர் எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்திரையா
எல்ஷெடேயும் நீங்கதாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்கதாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க
மேலே வாசித்த
பிரபல பாட்டில் உள்ள பிழையான வார்த்தைகள்:
ஆயிரம் நாமங்கள்?: ஆயிரத்தை விடுங்கள், வேதத்தில் எந்த இடத்திலும்
தேவனுடைய நாமம் 'நாமங்கள்' என்றும் பன்மையில் கூட குறிப்பிடப்பட(வே)வில்லை.
1. மத் 6:9ல் நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமானது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக.
2. சங் 83:17 யோகோவா என்னும்
நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.
3. யாத் 3:13-15 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி,
இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்…
என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும்
இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
4. யாத் 6:2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான்
யேகோவா, Exo 6:3 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும்
நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும்
யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
5. யாத் 20:7ல்உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். |