சகோ.பி.சாமுவேலின் வழி நடத்துதல் எமில் மூலமாக நிறைவேறியதால்
FMPB இத்தனை ஆத்துமாக்களை மிஷனரிகள் மூலமாக சேர்த்தது அதன் காரணமாக ஆயிரக்கணக்கில் சபைகள் உருவானது.
சகோ.எமிலை அந்நியபாஷையை பேசவிடாமல், இந்தியாவின் அனைத்து பாஷை
மக்களுக்கும், இயேசுவே தெய்வம் என்று எமில் மூலம் கர்த்தர் அறியச்செய்தார். கர்த்தரின் அந்த அற்புதமான வழிநடத்துதலுக்காக தலை வணங்குகிறேன். எமிலின் ஊழியங்களுக்காகவும், சாட்சியுள்ள வாழ்க்கைக்காகவும் நான் தேவனை துதிக்கிறேன்.
ஜாமக்காரன் வாசகர்கள் சகோ.எமிலின் ஊழியங்களுக்காகவும் சாட்சியுள்ள, கண்ணீருடன் ஜெபிக்கும் அவர் சாட்சியுள்ள அர்பணிப்புள்ள வாழ்க்கைக்காகவும் தேவனைத் துதிப்போம்.
(குறிப்பு: நான் மேலே எழுதிய விவரங்களில்
தவறான தகவல்களோ! மிகைப்படுத்தலோ! இருந்தால் உடனே எனக்கு எழுதி தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.). |