FMPB மிஷனரிகள்மூலம் வடஇந்தியாவில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் மந்தைக்குள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களை தொடர்ந்து வசனத்தில் வழிநடத்த
ஆராதனை வேண்டுமே!, சபை வேண்டுமே!, மேய்ப்பன் வேண்டுமே!, அப்போதும் சிலர் முட்டுக்கட்டை போட்டார்கள்.
கர்த்தர் நம்மை ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கத்தான் அழைத்தார். அதனால்தான் நம் ஸ்தாபனத்துக்கு பெயரே
நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு என்று சூட்டப்பட்டது. ஆகவே ஜெபம் செய்து சுவிசேஷம் அறிவித்தால்போதும் அதோடு நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். சபை கட்டிடம், ஆலயம், பாஸ்டர், ஆயர்(மேய்பன்) இந்த வளர்ச்சி இப்போது வேண்டாம் என்றனர். இப்படி உண்டான பலவித தடைகளுக்கு மத்தியிலும் சகோ.எமிலின் விடாமுயற்சியினால்
FMPB ஆலமரமாக வளர்ந்து கிளைவிட்டது. சபைகள் உருவாகின, ஆலயங்கள் எழும்பின,
மிஷனரிகள் ஆயர்களாக அபிஷேகிக்கப்பட்டனர். அடர்ந்த காட்டுக்குள்
ஆலயமணி ஒலித்தது. எத்தனை சந்தோஷம்.
FMPB-யின் மிஷனரிகளின் ஊழியங்கள் பணிதள செய்திகள்
அறைகூவல் பத்திரிக்கை மூலமாக அறிந்து கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் பண உதவிகள் செய்ய அவர்களாகவே
FMPB ஸ்தாபனத்தை தேடிவந்து கொடுத்தார்கள். அப்படி கோடிக்கணக்கில் வந்த வெள்ளைக்கார ஸ்தாபனங்கள் கொடுத்த காணிக்கையை வாங்கலாமா? வேண்டாமா? என்ற பிரச்சனை பூதாகரமானது. இந்தியாவை
இந்தியர்கள்தான் சந்திக்கவேண்டும், இந்திய ஊழியத்தை
இந்தியர்களே தாங்கவேண்டும் என்ற FMPB-யின் அஸ்திபார கொள்கையைப்பற்றி பெரும் சர்ச்சை உண்டானது. அதன் காரணமாக அன்றைய
நிர்வாகக் கமிட்டியில் அபிப்ராய வித்தியாசம் உண்டானது. சகோ.எமிலின் ஊழிய திட்டவேகத்துக்கு இணையாக அன்றை நிர்வாகிகள் எமிலோடு ஒத்துழைக்க இயலாத தடைகள் மீண்டும் உண்டானது. |