ஞாயிறுபள்ளி நடக்க வேண்டிய விதம் எப்படியிருக்க வேண்டும் என்பதை ராபர்ட் ரைக்ஸ் மிகத் தெளிவாக பின்வருமாறு எழுதினார்.
"காலை பத்து மணிக்கு பிள்ளைகள் வரவேண்டும். அவர்கள்
மதியம் 12 வரை பள்ளியில் இருந்து வந்து பள்ளி கூறிய சம்பந்தப்பட்ட பாடங்களை படிக்கலாம் 12 மணிக்கு தங்கள் வீடுகளுக்குப் போய் உணவருந்திவிட்டு 1 மணிக்கெல்லாம் மீண்டும் அவர்கள்
ஞாயிறுபள்ளிக்கு வரவேண்டும். பள்ளி பாடங்கள் படித்துவிட்டு அவர்கள் சபையினுடைய ஆராதனையிலும் பங்கு பெறவேண்டும்.
அது முடிந்த பிறகு தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட வேதபாட
போதனைகளை அவர்கள் மாலை ஐந்து வரை படிக்க வேண்டும். பள்ளி முடியும்போது, ஆரவாரமில்லாமல், சேட்டை செய்யாமல் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்", இந்த ஏற்பாட்டின் மூலம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் தானாக வர ஆரம்பித்தது.
ஞாயிறுபள்ளியை ஆரம்பித்த பிறகு மூன்று வருடங்கள் அதன் வளர்ச்சியை கவனித்து வந்த
ரைக்ஸ் நவம்பர் 3, 1783-ம் வருடம் தன்னுடைய பத்திரிக்கையில் அந்த இயக்கத்தைக் குறித்தும்
ஞாயிறுபள்ளிமூலம் பிள்ளைகளுக்கு உண்டான ஒழுக்கம் குறித்தும் பத்திரிக்கையில் எழுதினார். அதற்குப்பிறகு மற்ற
பத்திரிக்கைகளும் ஞாயிறு பள்ளியைக்குறித்து தங்கள் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுத, லண்டன் மாநகரெங்கும்
பல ஞாயிறுபள்ளிகள் உருவாக்கப்பட்டன. 1831 வருடம் எடுத்த அன்றைய ஒரு ஆய்வின்படி பிரிட்டன் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 25 சதவீதம் பேர், அதாவது சுமார் 1,25,000 குழந்தைகள்,
ஞாயிறுபள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டது.
ஆனால் இந்தநிலை உருவாவதற்குமுன்னே ரைக்ஸ் பல எதிர்ப்புகளை சந்தித்தார். ஞாயிறுபள்ளி ஓய்வுநாள் ஆசரிப்பு, ஆராதனைக்கு எதிரானது என்றும்,
கிறிஸ்தவர்களை ஞாயிறு பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்த்தக்கூடாது என்றும் அப்படி தொடர்ந்தால் அது சபை போதகர்களால் வீடுகளில் நடத்தப்படும் வேதபாட வகுப்பை, அது செயலிழக்கச் செய்துவிடும் என்றும், அது அரசாங்கம் சம்பந்தமான அரசியல் பிரச்சாரத்திற்கு அது அடிபணிந்துவிடும் என்றும் பல பிழையான கருத்துக்கள் ஞாயிறுபள்ளிக்கு எதிராக உருவாயின. அதேசமயம்
ஞாயிறு பள்ளிக்கு ஆதரவாகப் பேசியவர்கள் மிக வலுவான ஒரு இயக்கம்
ஞாயிறுபள்ளிதான் என்று வாதாடினார்கள்.
எது எப்படியோ, ஒரு காலகட்டத்தில் இங்கிலாந்து தேசத்தில் மட்டும் 4,000 ஞாயிறுபள்ளிகள் உருவானதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. ஞாயிறுபள்ளியில் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து, ராபர்ட் ரைக்ஸீக்கு உறுதுணையாக நிற்க தேவன்
ரெவ.தாமஸ் ஸ்டாக் என்ற பாஸ்டரும் பள்ளிகூட ஆசிரியருமான ஒருவரை எழுப்பினார்.
கிருஸ்தவ நற்செய்தி அறிவிப்பதன் மூலம்
சமுதாயத்தில் அன்று இருந்த சீர்கேடுகளைக் களைவதே
ஞாயிறு பள்ளியின் நோக்கம் என்று ரைக்ஸ் தீர்மானித்து அதற்காக அயராது உழைத்தார்.
கல்வியறிவில்லாதிருந்த இலட்சக்கணக்கான இங்கிலாந்து சிறார்களுக்கு
ராபர்ட் ரைக்ஸ் ஆரம்பித்த ஞாயிறுபள்ளி இயக்கம்
DAY CARE CENTRE மாதிரி அதேசமயம் வேத வசனமும் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தது.
19ம் நூற்றாண்டில் சமுதாயத்தைமாற்றும் ஒரு மாபெரும் சக்தியாக
ஞாயிறு பள்ளிகள் மாறின என்று சொன்னால் அது மிகையாகாது. 1840ம் வருடத்திற்குள் இங்கிலாந்திலுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் வெகுவாக வளர்ந்து விட்டதினால்
ஞாயிறு பள்ளிகளில் எழுதவும், படிக்கவும் சொல்லிக் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் வேத வசனம் கற்பிக்கப்பட்டது ஞாயிறு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் எல்லாப் பிள்ளைகளுக்கும்
கட்டாய இலவசக் கல்வி என்ற நியதியை ஞாயிறு பள்ளிகள் கொண்டு வரக் காரணமாய் இருந்தன.
|