சகோ.எமில் FMPB-யை விட்டு விலகினார். அவர் விலகப்போகிறார் என்று நான் கேள்விப்பட்டவுடன் பதறிப்போனேன். உடனே சகோ.எமிலுக்கு ஒரு நீண்டகடிதம் எழுதி
FMPB-ஐ விட்டு விலகும் எண்ணத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டினேன்.
அதற்கு அவர் எனக்கு எழுதிய பதில், நான் அன்று
மகாராஷ்ட்ராவில் கிராம ஊழியம் செய்து திரும்பும் வழியில்
தாராவி(பம்பாய்)யில் கன்வென்ஷனில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அறிந்த எமில் அவர்கள்
பம்பாய் தாராவி சர்ச் விலாசத்திற்கே தன் கடிதம் எனக்கு சேரும்வகையில் எழுதினார். அவர் எனக்கு அந்த நாட்களில் எழுதிய பல முக்கிய விஷயங்களைக் குறித்து எழுதிய
கடிதங்களில் ஒன்றைமட்டும் இப்போது ஜாமக்காரன் வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்....
அன்றைய நாட்களில் பல பிரச்சனைக்குறித்து, பல மனவேதனைகளைக்குறித்து பல கடிதங்கள் மூலம் என்னிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார். அத்தனை கடிதங்களையும் ஒன்றுவிடாமல்
FMPB-க்கென்று என்னிடம் உள்ள இரண்டு பெரிய பைலில் சேமித்து வைத்துள்ளேன். அவைகள் யாவும் சரித்திர நிகழ்வுகளாக மறக்க முடியாத ஒரு மிஷனரி தலைவனின் அனுபவங்களாக இன்றும் என்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன. அடுத்த பக்கத்தில் அவர் எழுதிய கடித நகலை பார்க்கலாம். |