பாடல் 5: பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகளிலும், சிஎஸ்ஐ, லூத்தரன் சபைகளிலும் பிரசங்கத்துக்குமுன்

ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
இப்பவாரும் இறங்கிவாரும் எங்கள் மத்தியிலே,

இதை எழுதியவரின் உபதேச தவறுகள் ஏராளம். அதில் இந்த பாட்டு எப்படித்தான் எல்லா சபைகளிலும் பாடப்படுகிறதோ தெரியவில்லை.

முதலாவது மனந்திரும்புதலின் அனுபவம் இல்லாதவர்களின் உள்ளத்தில் ஆவியானவர் இருக்கமுடியாது. அப்படியானால் இப்பாட்டை பாடுபவர் அல்லது ஆவியானவரே வாரும் என்று அழைப்பவர் சபை விசுவாசியானாலும், ஊழியரானாலும் நிச்சயம் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது. மனந்திரும்புதலின் அனுபவம் இருந்தால் ஆவியானவரை அழைக்க மாட்டார்களே!.

எபே 1:13. வசனத்தைகேட்டு விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருப்பார்கள். அப்படித்தான் இந்த வசனம் கூறுகிறது. யோ 14:16ல் என்றென்றும் உங்களோடு இருக்கும்படி பரிசுத்தாவியானவரை தேற்றரவாளனாக அனுப்புவேன் என்று இயேசு கிறிஸ்து வாக்களித்தார். அதன்படி பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவரை கர்த்தர் அருளினார். வந்த ஆவியானவர் திரும்பிபோகவில்லை. மேலும் ஆவியானவரோடு வேதத்தில் சீஷர்களோ, அப்போஸ்தவர்களோ ஜெபம் செய்ததில்லை. வேதத்தில் ஆவியானவரே என்னை - எங்களை நிரப்பும் என்று யாரும் கேட்டதில்லை.

ஆவியானவர் அவர்களை நிரப்பினார் என்று எழுதியுள்ளது. ஆவியானவர் தேவையானால் அவரை அனுப்பும் அதிகாரம் இயேசுகிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு. சிலர் இயேசு சுவிசேஷ புத்தகத்தில் லூக் 11:13ல் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று கூறினார். இந்த வசனத்தை சுட்டிக்காட்டி ஆவியானவரை கேட்டு ஜெபிக்கலாம் என்று சிலர் கூறுவார்கள். அது முற்றிலும் தவறு. எந்த காலகட்டத்தில் இது கூறப்பட்டது என்பதை அறியாமல் பேசுவார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்முன் உள்ள காலம். இயேசுகிறிஸ்து மரித்து உயிர்தெழும் வரை பரிசுத்த ஆவியானவர் வந்துவந்து போகிறவராக இருந்தார். கிதியோன் மேல் இறங்குவார் பிதாவின் சித்தம் நிறைவேறியபின் போய்விடுவார். சிம்சோன் மேல் இறங்கினார் பிதாவின் சித்தம் நிறைவேறினபின் போய்விடுவார். ஆனால் கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தபின் என்றென்றுமாய் நம்மோடு இருக்க இயேசுகிறிஸ்து ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் யாருக்கு அப்படி செய்வார் கேட்பவர்களுக்கல்ல. வசனத்தைக்கேட்டு கீழ்படிந்து மனந்திரும்பி விசுவாசிகளாக மாறுகிறவர்களுக்குள் எப்போதும் தங்கியிருப்பார். அதனால்தான் எபே 4:30ல் உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள் என்று எழுதப்பட்டது. ஆவியானவர் எப்போதும் மனிதனோடு போராடமாட்டார். போராடி உணர்த்தி நாம் மறுபடியும் பாவத்துக்கே நம்மை ஒப்புகொடுத்தால் அவர் நம்மைவிட்டு நீங்கிவிடுவார்.

அதனால் Fr.பெர்க்மான்ஸ் அவர்கள் ஒரு பாட்டை மிக சரியாக எழுதி பாடினார். எங்களுக்குள்ளே வாசம்செய்யும் ஆவியானவரே! என்று அர்த்தமுள்ள பாடலை இயற்றினார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN