சுமார் 53 வருடங்களுக்கு முன் நாகர்கோவில் ஹோம் சர்ச்சியிலிருந்து பிரிந்து தனி சபையாக ஒரு பெரிய
ஓலை வேய்ந்த பந்தலில் Christ Church என்ற பெரில் புதிய சபையாக ஆராதனை தொடங்கினார்கள். நாகர்கோவில்
Christ Church-ல் அந்த ஆரம்பகாலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட முதல் கன்வென்ஷன் கூட்டத்தில்,
முதல் கன்வென்ஷன் செய்தியாளராக நான் அழைக்கப்பட்டேன். அதன்பின் அநேக ஆண்டுகள் இந்த சபையில் பலமுறை நான் கன்வென்ஷனில் பிரசங்கித்தேன். இன்று இந்த சபை மிகப்பெரிய கட்டிடமாக ஆலயம்கட்டப்பட்டு அந்த பெரிய சபை கட்டிடத்தில் பல ஆயிரம் அங்கத்தினர்களைகொண்ட சபையாக இப்போது இந்த சபை இயங்குகிறது. இந்த சபையினர்
காணிகள் என்ற ஆதிவாசிகள் மத்தியில் அடிக்கடி
மெடிக்கல் கேம்ப் நடத்தி சுவிசேஷம் அறிவிக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட சபையினர்தான் தமிழ்நாட்டிலேயே எங்கள்
டிரைபல் மிஷன் மிஷனரிகளை மிக அதிகமாக தாங்குகிறார்கள்.
Dr.Muralidhar, MD, அவர்களையும், என்னையும் சபை மக்கள் அனைவரும் மிகவும் நேசித்து எங்கள் மிஷனரிகளையும், ஊழியங்களையும் தொடர்ந்து தாங்கி உதவுகிறார்கள். கர்த்தர் நாகர்கோவில்
Christ Church சபைமக்களை ஆசீர்வதிப்பாராக. இதன் தலைமை ஆயர்.Rev.V.David,
MA,BD,MTh., உதவி ஆயர் Rev.C.Ganandhas, MA,BD, செயலர் Dr.R.D.Steephen
Jones ஆகியவர்கள் மிக சிறப்பாக இந்த கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Dr.Muralidhar, MD, அவர்கள் இந்தமுறை இந்த சபையில் செய்த பிரசங்கங்கள் சபைமக்களிடம் நல்ல உயிர்மீட்சியை உண்டாக்கியதாக அறிந்து தேவனை துதிப்போம். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக. |