வட இந்தியா முழுவதும் தன்னை பிரபலபடுத்திய சகோ.எமிலின் மகளுக்கு
காருண்யா கல்லூரியில் பயில ஏற்கனவே சகோ.தினகரன் வாக்கு கொடுத்திருந்தார். கடைசி நேரத்தில் கல்லூரியில் இடம் கொடுக்கவில்லை. இது எமிலின் மகளை மிகவும் ஏமாற்றமடைய செய்தது. மகளுக்கு மெரிட்டிலேயே நல்ல மார்க் இருந்தது. ஆனால் எமில் அவர்களால் சகோ.தினகரன் கேட்ட டொனேஷன் பணம் லட்சக்கணக்கில் கட்டமுடியாததால் காருண்யாவில் மகளை சேர்க்கமுடியவில்லை. எமில் தன் நிலையை பணகுறையை எவ்வளவோ நிர்வாகத்திடம் சொல்லி பார்த்தார். கல்லூரி நிர்வாகம் நிராகரித்துவிட்டது. அந்த தோல்வியை மிகவும் எதிர்ப்பார்ப்போடு இருந்த மகளால் தாங்கமுடியவில்லை. அதனால் எமில் மகளுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது என கூறப்பட்டது. ஆனால்
Vellore CMC ஆஸ்பத்திரியில் உன்னத படிப்பில் கர்த்தரே மகளை சேர்த்து கர்த்தர் மகளை மிகவும் உயர்த்தி
மனநோய் சிகிச்சை பிரிவிலேயே உயர்ந்த படிப்பை அவளுக்கு அளித்து இன்று அந்த மகள்
நியூசிலாந்து தேசத்தில் சிறப்பு டாக்டராக பணியாற்றுகிறார்.
இது சகோ.தினகரனின்
ஆரம்ப ஊழிய வீழ்ச்சியோடு இந்த சம்பவமும் மிகப்பெரிய கெட்ட பெயரை அவருக்கு உண்டாக்கியது. அதன்பிறகுதான்
ஏழைகளுக்காவே காருண்யா கல்லூரி கட்டுகிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை மேடைக்குமேடை
பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய சகோ.DGS.தினகரனின் பொய் பிரசாரத்தை மக்கள் குறிப்பாக
கிறிஸ்தவர்கள் விளங்கிக் கொண்டார்கள். ஒரு ஏழை மிஷனரியின் பிள்ளைக்காவது ஒரு சீட்டாவது கொடுக்ககூடாதா? என்று புறமதத்தினர்களே கூறும் அளவு சகோ.தினகரன் தன் ஆவிக்குரிய நிலையில் இருந்து தாழ்ந்துபோய் தன்
கடைசி மரண நாட்களில் பின்மாற்றத்தில் சென்று மறைந்தார். இப்போதும் சகோ.எமில் அவர்கள் விஷ்வவாணி ஊழியத்திலிருந்து
ஓய்வு பெற்றாலும் விஷ்வவாணி ஊழியத்திற்கு மிக சிறந்த ஊழியர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து எமில் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அந்த நபர்களிடம் அவர் ஊழியத்தை ஒப்படைத்ததால் விஷ்வவாணி ஊழியம் இன்று மிக வெற்றிகரமாக சிறந்து நடைபெறுகிறது. சகோ.எமிலைப்போலவே அதே பாணியில் பிரசங்கிக்கும் இரண்டு நபர்கள் கர்த்தர் அனுப்பினார். இவர்களின் வேதபாடம் ரேடியோ விஷ்வவாணியில் கேட்ட ஏராளமானவர்களுக்கு மிகவும் பிரயோஜனமானது.
இவரால் தொடங்கப்பட்ட FMPB, விஷ்வவாணி, TWR ஆகிய ஊழியத்தின்மூலமாக இயேசு கிறிஸ்துவால் தொடப்பட்டவர்களின் கணக்குகள் சகோ.எமிலின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மரிக்கப்போகிறோம், மரணம் தன்னை நெருங்கபோகிறது என்பதை பல மாதங்களுக்கு முன்பே அறிந்த அவர் சகல ஆயத்தத்தோடும், தன் ஆவியை கர்த்தரின் வசம் ஒப்புவித்து இந்தியாவின் மிக சிறந்த மிஷனரியாக குறிப்பாக தமிழ்நாட்டின் மிஷனரியாக கர்த்தரின் மடியில் இளைப்பாற,
கர்த்தரே அவரை அழைத்துக்கொண்டார் என்றால் அது மிகையாகாது. சகோ.எமில் அவர்களின் துணைவியார், பிள்ளைகள், அவர்களின் குடும்பம், பேரப்பிள்ளைகள் அவர் விட்டுப்போன விஷ்வவாணி ஸ்தாபன ஊழியர்கள், மிஷனரிகள் யாவருக்கும் கர்த்தர் ஆறுதல் அளிப்பாராக.
சகோ.எமில் மறைந்தாலும், அவர்கள் ஆரம்பித்த ஊழியம் கர்த்தரின் இரண்டாம் வருகை வரை நிலைத்திருக்கும். |