2014 பிப்ரவரி மாதம்வரை விலாசம் புதுப்பித்தல் கார்டு பூர்த்தி செய்து அனுப்பாதவர்களுக்கு கடைசி சந்தர்ப்பமாக, உங்களை ஞாபகமூட்டும் வகையில் பிப்ரவரி 2014 ஜாமக்காரனை உங்கள் பழைய விலாசத்துக்கே அனுப்புவோம். ஒருவேளை டிசம்பர் மாத ஜாமக்காரனில் உள்ளே வைத்து அனுப்பிய விலாசம் புதுப்பித்தல் கார்டை நீங்கள் கவனிக்காதவர்களாக இருந்தால், கார்டை அல்லது கடிதத்தில் உங்கள் விலாசத்தை எழுதி எனக்கு உடனே பூர்த்திசெய்து அனுப்பிவிடுங்கள். இதுதான் விலாசம் புதுப்பித்தலைக் குறித்த கடைசி அறிவிப்பும், ஞாபகப்படுத்தலுமாகும்.

புதிதாக ஜாமக்காரன் தேவைப்படுகிறவர்கள் தங்கள் முழுவிலாசத்தையும் தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ எழுதினால் நேரிடையாக புது விலாச பட்டியலில் அவர்கள் விலாசத்தையும் சேர்த்துக்கொள்வோம்.

பிப்ரவரிமாத ஜாமக்காரன் மிக தாமதமாகவே இம்முறை உங்கள் கையில் கிடைக்கும். என்றுமில்லாத அளவு வீட்டில் தங்கநேரமின்றி ஊழியத்துக்காக வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டப்படியால் ஜாமக்காரனை தயாரிக்க நேரம் கிடைக்கவில்லை.

அப்படியே மிக அதிகமான உங்கள் கடிதங்களுக்கு பதில்போடவும், உங்கள் இமெயில்களுக்கு பதில் அனுப்பவும் இம்முறை மிகவும் தாமதப்படும், பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனம்திரும்பாதவர்கள், இரட்சிப்பின் அனுபவத்தை அனுபவிக்காத ஜாமக்காரன் வாசகர்கள் யாராவது இருந்தால் நீங்கள் அறியவேண்டியதாவது: இந்த புதுவருடத்தில் கர்த்தர் உங்களுக்கு ஆயுளை நீட்டி இதை வாசிக்கும் நாள்வரை கிருபையுள்ள நாட்களை ஈவாக அருளியிருக்கிறார். அதுதான் அவர் நம்மேல் வைத்த கிருபையாகும். அதனால்தான் நம்முடைய கர்த்தர் நல்லவர் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உங்களில் சிலர் பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்ததுபோதும். இனிமேலாவது மனந்திரும்புதலின் சந்தோஷத்தையும் அதன் இன்பத்தை அதன் ருசியை அனுபவித்து பாருங்கள். உண்மையாகவே அந்த மனந்திரும்புதலின் சந்தோஷம் உங்கள் உள்ளத்தில் இருந்தால் உங்களால் அதை அடக்கிவைக்கவே முடியாது. அந்த சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவார்கள். என்னை ருசித்துப்பாருங்கள் என்று கர்த்தரும் கேட்டுக்கொள்கிறார்.

கிறிஸ்மஸ் மற்றும் புதிய வருடத்துக்கென்று உங்களில் பலர் அனுப்பிய விசேஷ காணிக்கை கிடைத்தது நன்றி. அதோடு கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடவாழ்த்து அட்டைகள், இ-மெயில் வாழ்த்துக்கள் யாவும் கிடைக்கப்பெற்றேன். நன்றி.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எங்களுடைய புதுவருட (2014) வாழ்த்துதலை குடும்பமாக அறிவிக்கிறோம். புதிய வருடத்தில் புதிய ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறோம்.

கர்த்தருடைய சமாதானம் இந்த வருடம் முழுவதும் உங்களோடு இருப்பதாக. ஆமென்.

கர்த்தரின் உன்னத பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்

தமிழர் செய்யவேண்டியதை வெளிநாட்டு கிறிஸ்தவமிஷனரிகள் நிறைவேற்றினார்கள்: தமிழ்மொழியை தாய்பாஷையாக பெற்று தமிழில் புலவராகவும், வித்துவானாகவும், வித்தகராகவும் தமிழநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்கூட யாரும் தமிழில் இலக்கணம் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரராக வெளிநாட்டு மிஷனரி இந்தியா வந்து தமிழ் கற்று தமிழில் தேர்ந்தவராகமாறி தமிழுக்கு இலக்கணம் உண்டாக்கிய பெருமை, திரு.கால்டு வெல் ஐயர் அவர்களுக்கு உண்டு. அதனால் தமிழர்களாகிய நாம் நன்றி மறக்காதவர்களாக தமிழ் உள்ளவரை அவரை நினைவுக்கூற கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் அவருக்க ஒரு சிலை தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது. ஆனால் இதில் ஒருபெரும்மனக்குறைவு என்னவென்றால் தமிழ்நாட்டுக்கு தமிழ்மொழிக்கு ஒன்றும் செய்யாத ஒரு மதத்தலைவர் விவேகானந்தர் அவர்களின் உபதேசங்களையும் யாவும் சிறந்ததுதான். அவருக்கு தமிழக அரசு கோடிகோடியாக செலவழித்து விழா எடுத்ததே தமிழ் இலக்கணம் உண்டாக்கி நம் தமிழை செம்மொழியாக்கிய அருட்திரு.கால்டுவெல் அவர்களுக்கு தமிழக அரசாங்கம் அவருக்கு செய்யவேண்டிய மரியாதை, கவுரவம் ஒன்றும் செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN