கேள்வி:FMPB-யின் முன்னாள் ஊழியர்.சகோ.கிங்ஸ்லி அருணோதயம் அவர்கள் தன் பத்திரிக்கையில்
FMPB முதல் மிஷனரி பணிதளமாகிய பெரியமலையிலிருந்து முதல் மிஷனரியாக சென்றவர்களில் சகோ.ஹாரீஸ் ஹில்டன் அவர்கள் மட்டும் பெரியமலையிலேயே தங்கிவிட்டார்.
மற்றவர்கள் எல்லாம் வந்த வேகத்திலேயே பின்வாங்கிவிட்டனர் என்று எழுதியுள்ளாரே அப்படியானால் முதல் மிஷனரிகளாக சென்றவர்கள் எத்தனை பேர்? நீங்களும் (டாக்டர்.புஷ்பராஜ்) முதல் மிஷனரியாக ஹாரிஸ் ஹில்டனுடன் சென்றதாகத்தானே நான் அறிந்தேன். அதைக்குறித்து நீங்களும் உங்கள் சாட்சியில் கூறியதை கேட்டிருக்கிறேன். கிங்ஸ்லி கூறுவது என்ன?
பதில்:அவரையே இந்த கேள்வி கேட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தம்பி.கிங்ஸ்லி எங்கிருந்தார் என்று தெரியாது. அந்த காலங்களில் அவர்
FMPB-யில் இல்லை என்றுதான் எண்ணுகிறேன். அதனால் FMPB-யின் ஆரம்ப சரித்திரம் அவருக்கு தெரியவாய்ப்பில்லை என்றாலும்
பெரியமலையிலிருந்து வந்த வேகத்திலேயே பின்வாங்கி ஓடிவந்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிடுவது
Dr.புஷ்பராஜாகிய என்னை மனதில்வைத்துதான் அவர் அப்படி எழுதி இருக்கவேண்டும்.
முதலாவது காரணம் - அவருக்கு என்னையும், என் ஊழியத்தையும் பிடிக்காது.
இரண்டாவது காரணம் - இந்த பதிலின் கடைசியில் எழுதுகிறேன்.
அன்று சகோ.சீனிவாசன் என்ற தனி மனிதருக்குபிறகு
பெரியமலை பகுதியைப்பற்றி அறிய விவரம் சேகரித்தார்கள். இரண்டாவது விவரம் சேகரிக்கப்போன கூட்டத்தில் சகோ.எமில் இருந்தார். அதன்பின்தான் பெரியமலை விவரம் சேகரிக்கப்பட்டது. முதல் மிஷனரியாக நானும் (Dr.புஷ்பராஜ்) சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களும், எங்களுக்குகூட இருந்து உதவிட நன்றாக ஜெபிக்கும் நபரான சகோ.ஏசா என்பவரையும் எங்களுடன் அனுப்பினார்கள்.
முதல் மிஷனரிகளான நாங்கள் இருவரையும் மாரண்டஹள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் வீட்டில் இரவு தங்கி, மறுநாள் அதிகாலை இருட்டோடு
பெரியமலை அடிவாரம் வந்து பிரதிஷ்டை செய்ய எங்களை முழங்கால் போட வைத்து எங்கள் தலையில் கைவைத்து பிரதிஷ்டை செய்த
Dr.Rev.சாம்கமலேசன், சகோ.பி.சாமுவேல், சகோ.எமில் ஜெபசிங் இன்னும் இரண்டுபேர் ஆகிய இவர்களுக்கு
முதல் மிஷனரிகள் யார் என்று தெரியும். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தம்பி.கிங்ஸ்லிக்கு இந்த சம்பவமே தெரிய நியாயம் இல்லை.
|