நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு (FMPB) என்ற பெயரில் எழும்பிய
FMPB மிஷனரி ஸ்தாபனம் ஆசியாவிலேயே மிக அதிகமான மிஷனரிகளை இந்தியதேசம் முழுவதும் அனுப்பிய மிக சிறந்த உண்மையான மிஷனரி ஸ்தாபனமாகும். பண விஷயத்தில் நூற்றுக்குநூறு உண்மையுள்ள ஸ்தாபனமாகும்.
1959ல் தமிழ்நாட்டில் கோவில்பட்டி என்ற ஊரில் நான்கு, ஐந்து நபர்களால் பாரத தேசத்தில் இயேசுவை ஒருமுறைக்கூட கேள்விப்படாத மக்களுக்காக
ஜெபிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகமட்டும் ஆரம்பிக்கப்பட்ட
ஜெபக்குழுதான் FMPB என்பது - அன்று அது ஒரு ஜெபக்குழுவாக மட்டுமே இயங்கியது. அந்த குழு சுமார் 30 பேர்கள் கொண்ட பெரிய ஜெபக்குழுவாக உருவெடுத்தது. வெறும்
ஜெபம் மட்டுமே செய்துகொண்டிருந்த இந்த ஜெபக்குழு,
மிஷனரிகளை அனுப்பும் மிக முக்கிய செயலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றவர்களில் மிக முக்கியமானவர்
சகோ.எமில் ஜெபசிங் அவர்களாவார். எமிலின் ஆலோசகராக இருந்து பெரும்
மிஷனரி திட்டங்களை செயல்படுத்த எமிலுக்கு வலக்கைப்போல் செயல்பட்டது. டேனிஷ்பேட்டை
பெத்தேல் ஸ்தாபகர் சகோ.பி.சாமுவேல் அண்ணாச்சி என்பவராவார்.
Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்கு பிறகு சகோ.எமில் அவர்கள்
FMPB-யின் பொது செயலர் பொறுப்பெடுத்து FMPB-யை மிகப்பெரிய அளவு முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார்.
FMPB-யின் முதல் மிஷனரிகளாக டாக்டர்.புஷ்பராஜாகிய என்னையும், சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களையும் அழைத்துசென்று
பெரியமலையின் அடிவாரத்தில் அதிகாலைநேரம் சுமார் 5.30 மணிக்கு
Dr.சாம்கமலேசன், சகோ.பி.சாமுவேல், சகோ.எமில் ஜெபசிங் ஆகியவர்கள் எங்களை முதல் மிஷனரிகளாக அடிவாரத்தில் எங்களை பிரதிஷ்டைசெய்து, அவர்களும் எங்களுடன் மலையேறி பெரியமலைக்கு வந்தார்கள். பன்றிகள் அடைத்துவைக்கும் குடிசைத்தான் அந்த மலை கிராமத்தில் காலியாக அப்போதைக்கு இருந்தது. அங்குதான் நாங்கள் மிஷனரிகளாக குடியேறினோம். அன்று நாங்கள் எல்லாரும் மதிய உணவு சாப்பிட்டு மற்றவர்கள் யாவரும் எங்களை மலையில் விட்டுவிட்டு ஊர் திரும்ப தயாரானார்கள். ஆனால் புறப்படும்சமயம்
எமிலை காணாததால் அவரை தேடினோம். அவரோ எங்கள் குடிசையின் பின்பக்கம் பாறையில் முழங்காலிட்டு கண்ணீர்விட்டு அழுது ஜெபித்து கொண்டிருந்தார். நாங்கள் குடியேறிய பன்றி குடிசைக்கும்
ஆதிவாசிகள் தங்கின கிராமத்துக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். நடுவே சிறு ஓடை இருக்கும். அன்று சகோ.எமிலின் ஜெபத்தில் உதிர்த்த வார்த்தைகள் இப்போதும் எங்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. |