இந்திய தேர்தல் அறிவிப்பு:

நம் பாரததேசத்தில் இவ்வருடம் முழு இந்தியாவையும் நிர்வகிக்கும் பார்லிமெண்ட் மெம்பர்களையும், பிரதம மந்திரியையும் தெரிந்தெடுக்கும் மிக முக்கிய நிகழ்ச்சி நடைபெறபோகிறது. இம்முறை தேர்தல் என்றுமில்லாத பதட்டம், குழப்பம் தீர்மானம் எடுக்க இயலாதநிலை அத்தனையம் ஒன்றாக சேர்ந்துள்ளது. இது தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆளும்கட்சிகளுக்கும் மட்டுமல்ல, ஓட்டுப்போடும் மக்களுக்குள்ளே பெரும் குழப்பம் உண்டு. நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டை ஆளும் தலைவர்களும், பார்லிமெண்ட் மெம்பர்களையும் அடிப்படையாக கொண்டுதான் நம் நாட்டின் முன்னேற்றமும், சமாதானமும் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய முக்கிய நாடுகளின் அரசியல் கணிப்பாளர்கள் யாவரும் BJP கட்சியின் வேட்பாளர் திரு.மோடிதான் அடுத்த பிரதமராக வருவார் என்று கணித்துவிட்டனர். மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்காத கடந்தகால மனகசப்பை மாற்ற அமெரிக்க இந்திய தூதர் மோடியை சந்தித்தும் பேசிவிட்டார்.


மோடி கிறிஸ்தவர்களுக்கு எதிரானவரா?

குஜராத் கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகிறார்கள். மோடி வந்தால் கிறிஸ்தவ ஊழியங்களுக்கு நல்லது. மிஷனரி ஊழியங்களுக்கு எதிரானவர் அல்ல. அவர் வெறுப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகும் என்றார்கள். ஆனால் திரு.மோடி BJP கட்சியின் கொள்கையைவிட RSS கொள்கையில் வெறி கொண்டவராவார். இந்தியா இந்து மதத்தினருக்கு மட்டுமே என்பது RSS கொள்கையாகும். ஆகவே RSS-உடன் மோடிக்கு நெருங்கிய உறவு இருப்பதால் BJP-யிலேயே அவருக்கு ஆதரவு குறைவு, முழு RSS இயக்கத்துடன் எப்போதும் மிக நெருக்கம் கொண்டவர் மோடி ஆவார். RSS இயக்கம் ஒரு மததீவிரவாத இயக்கமாகும். RSS, பஜ்ரங்தள் என்ற இரண்டு தீவிரவாத இயக்கங்களுடனும் மோடி மிக நெருக்கமானவர். RSS, பஜ்ரங்தள் ஆகிய இரண்டு தீவிரவாத இயக்கங்களும் கிறிஸ்தவத்தையும் - கிறிஸ்தவர்களையும் எதிரியாக கருதி அவர்களை அழிக்க துடிக்கிறவர்கள். காட்டுக்குள்ளே பெண்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியை குறித்து அதன் வீடியோவும், புகைப்படங்களையும் கண்டேன். அதே காட்டுக்குள்ளே ஆண்கள் சண்டைப் போட்டு பழகுகிறார்கள். ஒருவனை தாக்கி வீழ்த்துவது எப்படி என்பதை சொல்லி தருகிறார்கள். அதை அவர்கள் தற்காப்பு பயிற்சி என்கிறார்கள். ஒரு மரக்கிடங்கில் எலக்ட்ரிக் ஒயர்கள், நீண்ட இரும்பு குழாய்கள், குண்டு பல்புகள், டிஜிட்டல் டைமிங் கருவிகள் மறுபக்கம் இருப்பதைக் கண்டேன்.

இவைகள் யாவையும் RSS பஜ்ரங்தள் ஆட்கள் உடற்பயிற்சி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது ஆளுகின்றவர்கள் காலத்திலும், அதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் காலத்திலும் இலங்கை விடுதலைப்புலிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்கப்பட்டதை பத்திரிக்கைகளில் கண்டிருப்பீர்கள். இவை யாவும் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடுதான் நடந்து. அப்போதே துக்ளக் சோ ராமசாமி அவர்கள் துப்பாக்கி கலாச்சாரம் இந்திய தமிழ்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துவிட்டது. இது நல்லதல்ல! இனி நம் தமிழ்நாட்டிலும் துப்பாக்கி கலாச்சாரம் நடைபெறும் காலம் தூரத்தில் இல்லை என்று எழுதினார். அது உண்மையாயிற்று என்று கூறும்வகையில் தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், கீழக்கரை, ராமநாதபுரம், தங்கச்சிமடம் ஆகிய கடற்கரையோர பட்டிணங்களில் தீபாவளிக்கு விளையாட்டு துப்பாக்கிப்போல வெளிப்படையாகவே எல்லாரும் காணும் வண்ணம் நிஜ துப்பாக்கியை கையில்வைத்துக்கொண்டு சிறுவர்கள் மூலமாக வீதிவீதியாக கூவி விற்றதை கேள்விப்பட்டோமே!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM