நானும், என் குடும்ப பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி என் இரண்டு சகோதரிகளின் திருமணத்தை என் பொறுப்பிலேயே நடத்தி, நானும் என் சம்பாத்தியத்திலேயே என் திருமணத்தையும் நடத்தி அதே ஆதிவாசிகள் ஊழியத்தை, சபை கன்வென்ஷன் ஊழியத்தையும் இணைத்து செய்தேன். இப்போதும் அந்த இரண்டு ஊழியத்தையும் செய்துகொண்டிருக்கிறேன்.
1976ல் முழுநேர ஊழியனாக பணியாற்றி இப்போதும் இந்த வயதிலும் (நானும், எமிலும் இரண்டுமாத வயது வித்தியாசமுடையவர்கள்) மாதாமாதம் ஹிமாச்சல பிரதேசம் வரை மலைமலையாக ஏறி காட்டுக்குள்ளேயே ஒருவாரம் தங்கி ஆதிவாசிகள் மத்தியில் ஊழியம் செய்கிறேன். நான் என் அழைப்பை மறக்கவில்லை. எனக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஊழியம் எதையும் நிறுத்தாமல் இப்போதும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மலை ஊழியத்தில் அப்போதும் இப்போதும் அனுபவித்த பாடுகள், கஷ்டங்கள், பசியினால் வாடிய அனுபவம் ஒவ்வொரு மாதமும் வாகனம் ஏதுமின்றி 20 மைல் 30 மைல் நடந்தே மலை ஏறி கால்கடுக்க நடந்தே ஊழியம் செய்கிறோம். இதில் ஒரு சிறு பகுதியாவது கிங்ஸ்லி அவர்கள் தன் ஊழியத்தின் பாதையில் அனுபவித்திருப்பாரா?. அடுக்கு மொழிகளில் பத்திரிக்கை எழுதி அடுக்கு மொழிகளில் பேசுவது மட்டுமே ஊழியம் அல்லவே!.
அன்றைய எங்கள் பெரியமலை ஊழியத்தை மிக அற்பமாக தம்பி.கிங்ஸ்லி எடைப்போட்டு அனுபவம் இல்லாமல் உபயோகித்த அந்த வார்த்தைக்குத்தான் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டி வந்தது. நாங்கள் யாரும் ஊழியத்தைவிட்டு பின்வாங்கி
ஓடிவந்தவர்கள் அல்ல, பதவிக்காகவும் அலைபவர்கள் அல்ல.
மிஷனரி பணியில் பொது செயலர் என்பது
பதவி அல்ல என்று இவர் உணரவில்லை. அது ஊழியம். அதுவும்
CSI, லூத்தரன் சபைகளில் பலர் செயலர் பதவிக்கு போட்டி போடுகிறார்களே அதில் அவர்களுக்கு ஆதாயம் உண்டு. அட்மிஷன், இடம்மாற்றல், கட்டிடம் கட்டுதல், பிரமோஷன், வேலை நிரந்தரம், டீச்சர், லெக்சரர், மேனேஜர் ஆகிய பதவிக்கு ஆள்கள் தேர்ந்தெடுத்தல் அதில் கிடைக்கும் கமிஷன் தொகை போன்ற பல வழிகளில்
திருமண்டல செயலர், சினாட் செயலர் இப்படிப்பட்ட பதவிகளில் உள்ள பெரும்பாலானோருக்கு பல வகைகளில் பணம் வீட்டு வாசல்படியை தட்டும். அதனால் போட்டிகள், ஸ்டே ஆர்டர் வாங்குதல், கோர்ட் படி ஏறுதல், கூலி படை வைத்து அடித்தல், பயமுறுத்துதல் போன்றவைகளை நாம் பல வருடங்களாக இந்தியா முழுவதும் பார்க்கிறோமே!. ஆனால் போயும்போயும், மிஷனரி ஊழியத்தில் இப்படியும் ஒரு போட்டியா?, மிஷனரி பொதுசெயலருக்கு குறைவான சம்பளத்தில் வாழ்வது,
எளிமை, தாழ்மை, அன்பு ஆகியவைகளை காண்பிக்கும் சந்தர்ப்பம் நிறைய உள்ள இப்படிப்பட்ட உண்மையான ஊழியத்துக்கு பதவி போட்டி, வெறுப்பு இவைகளை மிஷனரி ஸ்தாபனங்களில் கேள்விப்படும்போது கிறிஸ்து எத்தனையாய் வேதனைப்படுவார்.
இந்த
FMPB-யின் பழைய பொது செயலர் முதல் வகுப்பு பயணத்துக்கான பணம் கொடுத்து
CSI மற்றும் CNI சபையில் பிரசங்கிக்க அவர்கள் அழைப்பார்கள். ஆனால் இவரோ சாதாரண வகுப்பு ரயில் பெட்டியில்
கழிவறை (Toilet) பக்கத்தில் தரையில் உட்காரகூட இடம் இல்லாமல் கையில் பைபிள் வைத்து வாசித்துகொண்டு பிரயாணம் செய்த பொது செயலர் இப்போது
ஓய்வு பெற்று உயிரோடு இன்னும் தொடர்ந்து அலைந்து ஊழியம் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஏனோ இவர்களை தம்பி.கிங்ஸ்லியுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.
கிடைக்காத பதவிக்காக தன்னார்வ ஓய்வு பெற்றதையும் நினைத்தேன். எழுதினேன். கேள்விகேட்டவருக்கு இதுதான் என் பதில். இதில் சில கடிதங்களை நான் குறிப்பிடவில்லை. அதை வெளியிடும் சந்தர்ப்பமும் வரும் என்று நினைக்கிறேன் அது விசுவாசிகளுக்கு நிச்சயம் பிரயோஜனப்படும். |