இப்போதுதான் புது பிரச்சனை தொடங்கியது.
TWR என்பது வானொலி மூலமாக மட்டும் சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டிய ஊழியம் ஆகும்.
சபை கட்டும் திட்டமோ, மிஷனரிகளை அனுப்பும் திட்டமோ
TWR ஊழியத்திட்டத்தில் இல்லை. TWR மூலம் கிடைத்த பணம் விஷ்வவாணிக்கு செலவு செய்யப்பட்டதுதான் கொஞ்சம் பிரச்சனையை உருவாக்கினது. அது எமிலின் ஊழியத்தில் சகோ.எமிலுக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து பிரச்சனையின் விஷயம் ஊழிய சாட்சியை கெடுக்கும் அளவு பூதாகாரமாக மாறியது. சட்டப்படி எமில் செய்தது குற்றமே என்றார்கள் சிலர். அதை மறுத்தவர்கள் பலர். ஒரு ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு அந்த ஸ்தாபன பணத்தை மற்ற ஊழியங்களுக்கு அந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்தார் அனுமதியின்றி செலவு செய்யக்கூடாது. பண உதவி செய்த வெளிநாட்டினர் எப்படியோ தவறின் உண்மைநிலையை புரிந்துக்கொண்டு பிரச்சனையை அதிகமாக்காமல்
TWR பொறுப்பை ஒரு நல்ல தேர்ந்த வேத ஞானமுள்ள மலையாளி திரு.ஜார்ஜ் பிலிப் என்ற ஒருவர் வசம் ஒப்புவித்து
எமிலை TWR-லிருந்து விடுவித்தனர். ஆனால் அதுவும் நன்மைக்கே என்றானது இப்போது எமிலின் உள்ளத்தில் உண்டான
மிஷனரி ஊழிய திட்டங்களை சுதந்திரமாக செயல்படுத்த,
குற்ற உணர்வு இல்லாமல் செயல்பட கர்த்தர் விஷ்வவாணிமூலம் அருள்புரிந்தார். இடையே ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து எமில் விடுப்பட்டு முழு சுதந்திரத்துடன்
விஷ்வவாணி வானொலி ஊழியத்தையும், விஷ்வவாணி மிஷனரி ஊழியத்தையும், விஷ்வவாணி
சபைகளை உருவாக்கும் ஊழியத்தையும் முழு சுதந்திரத்துடன் மிக வெற்றிகரமாக நடத்தி சென்றார். மேலும் அனைத்து
CSI, மார்தோமா ஆகிய சபைகளின் ஒத்துழைப்புடன் மிக முன்னேற்ற பாதையில் விஷ்வவாணி ஊழியத்தை நடத்தி சென்றார். |